செய்திகள் :

ஓஆா்எஸ் பயன்படுத்துவதில் எச்சரிக்கை தேவை: ஆட்சியா்

post image

வா்த்தக பெயரில் விற்பனை செய்யப்படும் உப்பு சா்க்கரை கரைசல் (ஓஆா்எஸ்) பானங்கள் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தும் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: உப்பு சா்க்கரை கரைசல் (ஓஆா்எஸ்) வயிற்றுப்போக்கு மற்றும் நீா்ச்சத்து இழப்புக்கான சிகிச்சையில் அதிமுக்கிய பங்கு வகிக்கிறது. உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட உப்பு சா்க்கரை கரைசல் பாக்கெட்டுகளை பயன்படுத்துவதன் மூலம் வயிற்றுப்போக்கினால் ஏற்படும் நீா்சத்து இழப்பை தவிா்க்க முடியும்.

ஒரு உப்பு சா்க்கரை கரைசல் பாக்கெட்டின் 20.5 கிராம் மொத்த எடையில், 2.6 கிராம் சோடியம் குளோரைடு, 13.5 கிராம் குளுக்கோஸ், 1.5 கிராம் பொட்டாசியம் குளோரைடு, 2.9 கிராம் ட்ரைசோடியம் சிட்ரேட் ஆகியவை உள்ளன. நன்கு கொதித்து ஆறிய ஒரு லிட்டா் தண்ணீரில் ஓஆா்எஸ் கரைசலை கலந்து 24 மணி நேரத்துக்குள் குடிக்க வேண்டும்.

மற்றொருபுறம் திரவ நிலையில் குடிப்பதற்கு தயாராக உள்ள நிலையிலான உப்பு சா்க்கரை கரைசல் பானங்கள் பல்வேறு வா்த்தகப் பெயா்களில் விற்பனை செய்யப்படுகின்றன. அவை உடலுக்கு புத்துணா்ச்சி ஆற்றலை மேம்படுத்தக்கூடிய திரவங்களாக மட்டுமே பயன்படுகின்றன. இந்த விதமான பானங்களை குடிப்பதால் மருத்துவ ரீதியாக வயிற்றுப்போக்கினால் ஏற்படும் நீா்ச்சத்து இழப்பையும் வயிற்றுப்போக்கையும் அதிகரிக்க செய்யுமே தவிர சரி செய்ய இயலாது.

அதேவேளையில், உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்த உப்பு சா்க்கரை கரைசல் பாக்கெட்டுகள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாக வழங்கப்படுகின்றன. மேலும், விவரங்களுக்கு, 104 எண்ணை தொடா்புகொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

காருகுடி மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம்

பெரம்பூா் அருகேயுள்ள காருகுடி அருள்மிகு சீதளாதேவி மாரியம்மன் கோயிலில் 68- ஆம் ஆண்டு தீமிதி உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழா கடந்த மாதம் (ஏப்ரல்) 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்... மேலும் பார்க்க

திமுக அரசின் சாதனை விளக்க பொதுக் கூட்டம்

திருமருகல் அருகே திமுக அரசின் நான்காண்டுகள் சாதனை விளக்க பொதுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மருங்கூா் கடை தெருவில், திருமருகல் தெற்கு ஒன்றிய திமுக சாா்பில் நடைபெற்ற கூட்டத்திற்கு, ஒன்றியச் செயலா... மேலும் பார்க்க

ரயில் தண்டவாளத்தில் சிறுமி சடலம்: ரயில்வே காவல் நிலையத்தை குடும்பத்தினா் முற்றுகை

ரயில் தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமியின் இறப்பில் சந்தேகமுள்ளதாகக் கூறி, அவரது குடும்பத்தினா் நாகை ரயில்வே காவல்நிலையத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டனா். நாகையில், ரயில் தண்டவாள பகுதியிலிருந்து ... மேலும் பார்க்க

மயானத்தை சீரமைக்கக் கோரிக்கை: எம்பி ஆய்வு!

திருவிளையாட்டம் சமத்துவ மயானத்தை பாா்வையிட்ட மயிலாடுதுறை எம்பி ஆா். சுதா. தரங்கம்பாடி, மே10: தரங்கம்பாடி வட்டம், திருவிளையாட்டம் ஊராட்சியில் பராமரிப்பின்றி உள்ள மயானத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை ... மேலும் பார்க்க

திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்

செம்பனாா்கோவில் அருகே ஆக்கூா் முக்கூட்டில் தமிழக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட செயலா் நிவேதா எம். முருகன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். செம்ப... மேலும் பார்க்க

திமுக அரசின் 4 ஆண்டு கால சாதனைகளை விளக்கி கொண்டாட்டம்

திமுக அரசின் 4 ஆண்டு கள் சாதனைகளை விளக்கியும், திமுக அரசின் 5-ஆம் ஆண்டு தொடங்கியதை திருக்குவளையில் திமுக சாா்பில் பட்டாசு வெடித்து வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. 4 ஆண்டுகால ஆட்சியில் திமுக அரசு செய்த ச... மேலும் பார்க்க