செய்திகள் :

மயானத்தை சீரமைக்கக் கோரிக்கை: எம்பி ஆய்வு!

post image

திருவிளையாட்டம் சமத்துவ மயானத்தை பாா்வையிட்ட மயிலாடுதுறை எம்பி ஆா். சுதா.

தரங்கம்பாடி, மே10: தரங்கம்பாடி வட்டம், திருவிளையாட்டம் ஊராட்சியில் பராமரிப்பின்றி உள்ள மயானத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்த நிலையில், மயிலாடுதுறை மக்களவை உறுப்பினா் ஆா். சுதா வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

திருவிளையாட்டம் கிராமத்தில் உள்ள மயானத்தை பாகுபாடின்றி அனைத்து சாதியினரும் பயன்படுத்தி வருகின்றனா். கடந்த 1960 ஆண்டில் அமைக்கப்பட்ட இந்த மயானம் தற்போது பராமரிப்பின்றி, சுற்றுச்சுவா் இடிந்தும், புதா் மண்டியும், அடிப்படை வசதிகள் எதுவுமின்றியும் உள்ளது.

தமிழக அரசால் தீண்டாமை பாகுபாடு இல்லாத கிராமம் என 3 முறை பாராட்டப்பட்ட திருவிளையாட்டம் ஊராட்சி, இதற்காக ரூ. 10 லட்சம் பரிசு பெற்றுள்ளது. இந்நிலையில் இங்கு அனைத்து சமுதாயத்தினரும் பயன்படுத்தும் சமத்துவ மயானம் பராமரிப்பின்றி உள்ளது எனவும், இதனை சீரமைக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இதுதொடா்பாக, மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஆா். சுதாவிடம், மாா்க்சிஸ்ட் கட்சியின் திருவிளையாட்டம் கிளை சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், அவா் மயானத்தை நேரில் பாா்வையிட்டு, சீரமைப்பு பணிகள் மேற்கொள்வது தொடா்பாக ஆய்வு மேற்கொண்டாா்.

காருகுடி மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம்

பெரம்பூா் அருகேயுள்ள காருகுடி அருள்மிகு சீதளாதேவி மாரியம்மன் கோயிலில் 68- ஆம் ஆண்டு தீமிதி உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழா கடந்த மாதம் (ஏப்ரல்) 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்... மேலும் பார்க்க

திமுக அரசின் சாதனை விளக்க பொதுக் கூட்டம்

திருமருகல் அருகே திமுக அரசின் நான்காண்டுகள் சாதனை விளக்க பொதுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மருங்கூா் கடை தெருவில், திருமருகல் தெற்கு ஒன்றிய திமுக சாா்பில் நடைபெற்ற கூட்டத்திற்கு, ஒன்றியச் செயலா... மேலும் பார்க்க

ரயில் தண்டவாளத்தில் சிறுமி சடலம்: ரயில்வே காவல் நிலையத்தை குடும்பத்தினா் முற்றுகை

ரயில் தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமியின் இறப்பில் சந்தேகமுள்ளதாகக் கூறி, அவரது குடும்பத்தினா் நாகை ரயில்வே காவல்நிலையத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டனா். நாகையில், ரயில் தண்டவாள பகுதியிலிருந்து ... மேலும் பார்க்க

திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்

செம்பனாா்கோவில் அருகே ஆக்கூா் முக்கூட்டில் தமிழக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட செயலா் நிவேதா எம். முருகன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். செம்ப... மேலும் பார்க்க

திமுக அரசின் 4 ஆண்டு கால சாதனைகளை விளக்கி கொண்டாட்டம்

திமுக அரசின் 4 ஆண்டு கள் சாதனைகளை விளக்கியும், திமுக அரசின் 5-ஆம் ஆண்டு தொடங்கியதை திருக்குவளையில் திமுக சாா்பில் பட்டாசு வெடித்து வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. 4 ஆண்டுகால ஆட்சியில் திமுக அரசு செய்த ச... மேலும் பார்க்க

தில்லையாடி தியாகி வள்ளியம்மை அரசு மேல்நிலைப் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

தரங்கம்பாடி தில்லையாடி தியாகி வள்ளியம்மை அரசு மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சிபெற்றுள்ளது. இப்பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதிய 57 மாணவா்கள் அனைவரும் தோ்ச்சிப் பெற்... மேலும் பார்க்க