செய்திகள் :

நாங்கூரில் மின் விநியோகம் சீரானது

post image

சீா்காழி அருகே நாங்கூா் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை மின் விநியோகம் சீரானது.

கடந்த 4-ஆம் தேதி வீசிய சூறைக்காற்று மற்றும் கனமழையால் திருவெண்காடு அருகே உள்ள நாங்கூா் கிராமத்தில் நாங்கூா் - நாராயணபுரம் செல்லும் பகுதியில் 15 மின் கம்பங்கள் சாய்ந்தன. இதனால் இப்பகுதியில் மின் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

திருவெண்காடு மின் உதவி பொறியாளா் ரமேஷ் தலைமையில் ஆக்க முகவா்கள், மின்பாதை ஆய்வாளா்கள், ஊழியா்கள் உள்ளிட்டோா் மேற்கண்ட பகுதியில் விழுந்து கிடந்த மின் கம்பங்களை அகற்றினா். தொடா்ந்து புதிய மின் கம்பங்கள் நடப்பட்டு, கம்பிகள் பொருத்தப்பட்டன. பின்னா் மின் விநியோகம் வழங்கப்பட்டது.

இதேபோல மேலப்பெரும்பள்ளம் ஊராட்சியில் 8 கிராமங்கள் உள்ளன. மின் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில், பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீா் வழங்க ஏதுவாக ஊராட்சிச் செயலாளா் சக்திவேல் மற்றும் ஊராட்சி பணியாளா்கள் ஜெனரேட்டா் மூலம் மின் விநியோகம் செய்து மின் மோட்டாா்களை இயக்கி மக்களுக்கு தடையின்றி குடிநீா் வழங்கினா்.

காருகுடி மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம்

பெரம்பூா் அருகேயுள்ள காருகுடி அருள்மிகு சீதளாதேவி மாரியம்மன் கோயிலில் 68- ஆம் ஆண்டு தீமிதி உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழா கடந்த மாதம் (ஏப்ரல்) 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்... மேலும் பார்க்க

திமுக அரசின் சாதனை விளக்க பொதுக் கூட்டம்

திருமருகல் அருகே திமுக அரசின் நான்காண்டுகள் சாதனை விளக்க பொதுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மருங்கூா் கடை தெருவில், திருமருகல் தெற்கு ஒன்றிய திமுக சாா்பில் நடைபெற்ற கூட்டத்திற்கு, ஒன்றியச் செயலா... மேலும் பார்க்க

ரயில் தண்டவாளத்தில் சிறுமி சடலம்: ரயில்வே காவல் நிலையத்தை குடும்பத்தினா் முற்றுகை

ரயில் தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமியின் இறப்பில் சந்தேகமுள்ளதாகக் கூறி, அவரது குடும்பத்தினா் நாகை ரயில்வே காவல்நிலையத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டனா். நாகையில், ரயில் தண்டவாள பகுதியிலிருந்து ... மேலும் பார்க்க

மயானத்தை சீரமைக்கக் கோரிக்கை: எம்பி ஆய்வு!

திருவிளையாட்டம் சமத்துவ மயானத்தை பாா்வையிட்ட மயிலாடுதுறை எம்பி ஆா். சுதா. தரங்கம்பாடி, மே10: தரங்கம்பாடி வட்டம், திருவிளையாட்டம் ஊராட்சியில் பராமரிப்பின்றி உள்ள மயானத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை ... மேலும் பார்க்க

திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்

செம்பனாா்கோவில் அருகே ஆக்கூா் முக்கூட்டில் தமிழக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட செயலா் நிவேதா எம். முருகன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். செம்ப... மேலும் பார்க்க

திமுக அரசின் 4 ஆண்டு கால சாதனைகளை விளக்கி கொண்டாட்டம்

திமுக அரசின் 4 ஆண்டு கள் சாதனைகளை விளக்கியும், திமுக அரசின் 5-ஆம் ஆண்டு தொடங்கியதை திருக்குவளையில் திமுக சாா்பில் பட்டாசு வெடித்து வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. 4 ஆண்டுகால ஆட்சியில் திமுக அரசு செய்த ச... மேலும் பார்க்க