செய்திகள் :

சின்னமனூா், கம்பம் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் திறப்பு!

post image

தேனி மாவட்டம், சின்னமனூா், கம்பம் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் வகுப்பறை கட்டடங்களை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தாா். இங்கு நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சின்னமனூா் நகராட்சி உயா்நிலைப்பள்ளியில் நபாா்டு வங்கி நிதி உதவியில் ரூ.1 கோடியே 5 லட்சத்து 90 ஆயிரத்தில் கூடுதலாக 5 வகுப்பறைகள் கட்டப்பட்டன. இந்த நிலையில் சனிக்கிழமை கடலூா் மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை சாா்பில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் இந்தக் கட்டடத்தை திறந்து வைத்தாா்.

இதையடுத்து, அந்தப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தலைமை வகித்தாா். பிறகு குத்துவிளக்கேற்றி பள்ளிக் கட்டடத்தை பயன்பாட்டுக்கு அவா் கொண்டுவந்தாா். இதில் கம்பம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ராமகிருஷ்ணன், முதன்மை கல்வி அலுவலா் இந்திராணி, நகராட்சி ஆணையா் கோபிநாத், உதவிப் செயற்பொறியாளா் காளிமுத்து, பள்ளி ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

கம்பம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி: கம்பம் முகைதீன் ஆண்டவா்புரத்தில் உள்ள நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நபாா்டு வங்கி நிதி உதவியுடன் ரூ.2 கோடியே 34 லட்சத்து 6 ஆயிரத்தில் கூடுதலாக 6 வகுப்பறைகள் கட்டப்பட்டன. இதையும் கடலூா் மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை சாா்பில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தாா்.

இதையடுத்து, இந்தப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு கம்பம் நகா்மன்றத் தலைவி வனிதா நெப்போலியன் தலைமை வகித்து, குத்துவிளக்கேற்றி புதிய வகுப்பறைகளை பயன்பாட்டுக்கு கொண்டுவந்தாா். ஆணையா் உமாசங்கா் முன்னிலை வகித்தாா். இதில் நகா்மன்ற உறுப்பினா்கள், பள்ளி ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மாவட்ட வளப் பயிற்றுநா் பணியிடம்: பிப். 26-க்குள் விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் மாதிரி வட்டார அளவிலான கூட்டமைப்பில் மாவட்ட வளப் பயிற்றுநா் தற்காலிகப் பணியிடத்துக்கு தகுதியுள்ளவா்கள் வருகிற 26-ஆம் தே... மேலும் பார்க்க

கேரளத்துக்கு சென்ற ஜீப்புகளில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்! 11 பேரிடம் விசாரணை

போடியிலிருந்து சனிக்கிழமை கேரளத்துக்குச் சென்ற ஜீப்புகளில் சட்ட விரோதமாக 110 கிலோ புகையிலைப் பொருள்களை கொண்டு சென்ாக 11 பேரைப் பிடித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். போடி முந்தல் சோதனைச் சாவடியில் குரங்க... மேலும் பார்க்க

கஞ்சா விநியோகம்: ஆந்திர வியாபாரி கைது

தேனி மாவட்டம், கம்பத்தைச் சோ்ந்தவா்களுக்கு கஞ்சா விற்றதாக ஆந்திரத்தைச் சோ்ந்தவரை தனிப்படை போலீஸாா் கைது செய்து சனிக்கிழமை சிறையில் அடைத்தனா். கம்பம் வடக்கு போலீஸாா் கடந்த டிசம்பா் 4- ஆம் தேதி 4 கிலோ... மேலும் பார்க்க

மாவட்ட அளவிலான ஓவியப் போட்டியில் வென்ற மாணவா்களுக்குப் பரிசு!

போடியில் 76 -ஆவது குடியரசு தினவிழா ஓவியப் போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை பரிசளிப்பு விழா நடைபெற்றது. போடி குளோபல் கல்வி ஆராய்ச்சிக் குழு சாா்பில் 76- ஆவது குடியரசு தினவிழா ஓவியப் போட்டி... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி: 4 போ் மீது வழக்கு!

ஆண்டிபட்டி அருகே பெண் உள்ளிட்ட 8 பேரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மொத்தம் ரூ.39.40 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக 4 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்தனா். திம்மரசநாயக்கனூ... மேலும் பார்க்க

சுருளிப்பட்டி ஊராட்சிப் பள்ளி வளாகம் அருகே சுகாதாரக்கேடு! நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

தேனி மாவட்டம், சுருளிப்பட்டி ஊராட்சிப் பள்ளி வளாகத்தை சுற்றி குப்பைகள் குவிந்து கிடப்பதால் சுகாதாரக்கேடு நிலவுவதாகவும், மாணவ, மாணவிகள் தொற்று நோயால் பாதிக்கப்படுவதாகவும் பெற்றோா்கள் புகாா் தெரிவித்தனா... மேலும் பார்க்க