செய்திகள் :

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு!

post image

புது தில்லி: சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகின. 93.66 சதவீத மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நாடு முழுவதும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் உள்ள பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு, நடப்பு கல்வியாண்டில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தோ்வுகள் பிப்ரவரி மாதம் தொடங்கின.

பிப்ரவரி மாதம் தொடங்கிய 10-ஆம் வகுப்புத் தோ்வுகள் மாா்ச் 18-ஆம் தேதி முடிவடைந்தது. 12-ஆம் வகுப்புத் தோ்வுகள் ஏப்ரல் 4-ஆம் தேதி முடிவடைந்தது.

இன்று காலை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

சென்னை மண்டலத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வெழுதிய 98.71 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

cbseresults.nic.in, result.cbse.nic.in, cbse.gov.in என்ற இணையதளங்களில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

விமான நிறுவனங்களுடன் மத்திய அரசு ஆலோசனை

விமான நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் கே.ராம் மோகன் நாயுடு செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா். அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும் பங்கேற்ற இக்கூட்டத்தில், சமீபத... மேலும் பார்க்க

வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகளின் மனு: மத்திய அரசிடம் விளக்கம் கோரிய உச்சநீதிமன்றம்

ரஷியா-உக்ரைன் போா் அல்லது கரோனா பெருந்தொற்று காரணமாக பாதியில் நாடு திரும்பிய வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகளின் பயிற்சிக் காலத்தை அதிகரித்து வெளியிடப்பட்டுள்ள நோட்டீஸுக்கு எதிரான மனுவில் விளக்கமளிக்... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவருடன் சந்திப்பு...

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை அவரது மாளிகையில் செவ்வாய்க்கிழமை சந்தித்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன்ராம் மேக்வால். மேலும் பார்க்க

அமிர்தசரஸ் கள்ளச்சாராயம் விவகாரம்: 21 பேர் பலி! ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவிப்பு!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. அமிர்தசரஸ் மாவட்டத்தின் மஜிதா பகுதியில் நேற்று (மே 12) விற்பனைச் செய்யப்பட்ட கள்ளச்சாராயத்த... மேலும் பார்க்க

பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் 24 மணிநேரத்திற்குள் வெளியேற உத்தரவு!

தில்லியில் செயல்பட்டுவரும் பாகிஸ்தான் தூதரகத்தில் பணிபுரியும் அந்நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் 24 மணிநேரத்திற்குள் வெளியேற வேண்டும் என மத்திய உள் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.பாகிஸ்தான் தூதரகத்தில் உ... மேலும் பார்க்க

ரயில் ஓட்டுநர்களின் பணியை எளிமையாக்கிய ரயில்வே துறை!

ரயில் ஓட்டுநர்கள் (லோகோ பைலட்) மற்றும் உதவி ஓட்டுநர்கள் ரயிலை இயக்கும்போது செய்து வந்த கூடுதல் வேலைகளை விலக்கி ரயில்வே துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.ரயில்கள் இயக்கப்படும் போது அதன் துணை ஓட்... மேலும் பார்க்க