சிபு சோரன் உடல் சொந்த ஊரில் தகனம்: லட்சக்கணக்கானோர் அஞ்சலி!
மறைந்த ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் உடல் சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது.
ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் சட்டப்பேரவை வளாகத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்ட அன்னாரது உடலுக்கு பல்வேறு தலைவர்கள், மக்கள் அஞ்சலி செலுத்தினர். அதனைத்தொடர்ந்து, சிபு சோரனின் சொந்த ஊரான நேம்ராவுக்கு அரசு மரியாதையுடன் அவரது உடல் சாலைவலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

அங்கு அன்னாரது உடலுக்கு லட்சக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். சிபு சோரன் உடலுக்கு அவரது மூத்த மகன் ஹேமந்த் சோரன் இறுதிச் சடங்குகளைச் செய்தன்பின், அவர்களது குல வழக்கப்படி உடல் எரியூட்டப்பட்டது.
