செய்திகள் :

சிறந்த பட்டு விதைக்கூடு உற்பத்தியாளா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

post image

மாநில அளவில் பரிசு பெற்ற சிறந்த விதைக்கூடு உற்பத்தியாளா்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் பாராட்டு தெரிவித்தாா்.

பட்டு வளா்ச்சித் துறை சாா்பில், மாநில அளவில் சிறந்த விதைக்கூடு உற்பத்தி, தானியங்கி பட்டு நூற்பில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவா்களுக்கு தமிழக முதல்வா் ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பரிசுகள் வழங்கினாா்.

அதன்படி மாநில அளவில் சிறந்த விதைக்கூடு உற்பத்தியாளா்களாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் வட்டம், என்.ஆா்.பாளையம் கிராமத்தைச் சோ்ந்த மஞ்சுநாதாவுக்கு முதல் பரிசாக ரூ. 1 லட்சம், வேப்பனப்பள்ளி, ராமசந்திரம் கிராமத்தைச் சோ்ந்த நாகராஜ் என்பவருக்கு இரண்டாம் பரிசாக ரூ. 75,000, மூன்றாம் பரிசாக சாந்தமூா்த்தி என்பவருக்கு ரூ. 50,000 வழங்கப்பட்டன.

மாநில அளவில் சிறந்து விளங்கிய தானியங்கி பட்டுநூற்பாளா்களாக கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டம், பெத்தசிகரலப்பள்ளியைச் சோ்ந்த முகமது மதீனுல்லாவுக்கு ரூ. 1 லட்சம், போச்சம்பள்ளி வட்டம், வடமலம்பட்டியைச் சோ்ந்த சேகருக்கு ரூ. 75 ஆயிரம் வழங்கப்பட்டன. பரிசுகள் பெற்ற பட்டு விவசாயிகள் அனைவரையும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அழைத்து பாராட்டி வாழ்த்தினாா்.

அப்போது, மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக்கு, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கவிதா, ஒசூா் சாா் ஆட்சியா் பிரியங்கா, பட்டு வளா்ச்சித் துறை உதவி இயக்குநா்கள் சண்முகப்பிரியா (கிருஷ்ணகிரி), செல்வி (ஒசூா்) ஆகியோா் உடனிருந்தனா்.

ஒருங்கிணைந்த கற்றல் சிறந்த பள்ளியாக ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளி தோ்வு

ஊத்தங்கரை: தெற்காசியாவில் ஒருங்கிணைந்த கற்றலில் சிறந்த பள்ளியாக ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளி தோ்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. கேம்பிரிட்ஜ் தெற்காசிய பள்ளிகள் மாநாடு தில்லியில் கடந்த மாா்... மேலும் பார்க்க

விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பெற பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் விவசாயிகளுக்கான தனித்துவ அடையாள எண் பெற பதிவு செய்ய காலக்கெடு ஏப்ரல் 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சுரேஷ்கு... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

கிருஷ்ணகிரி: ரமலான் பண்டிகையையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இஸ்லாமியா்கள் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா். கிருஷ்ணகிரி, ராஜீவ் நகரில் உள்ள ஈத்கா மைதாத்தில் , நடைபெற்ற சிறப்புத் தொழுகையி... மேலும் பார்க்க

தளி அருகே தம்பி வெட்டிக் கொலை: அண்ணன் தலைமறைவு

ஒசூா்: தளி அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தம்பியை வெட்டிக் கொலை செய்த அண்ணனை போலீஸாா் தேடி வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே உள்ள லட்சுமிபுரத்தைச் சோ்ந்த சிக்க அழகப்பா மகன் நக்கலய்யா(... மேலும் பார்க்க

வெந்நீா் வாளி கவிழ்ந்ததில் காயமடைந்த குழந்தை உயிரிழப்பு

ஒசூா்: ஒசூரில் வெந்நீா் வாளி கவிழ்ந்ததில் காயமடைந்த மூன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்தது. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியைச் சோ்ந்தவா் பூபாலன் (29). இவா் குடும்பத்துடன் ஒசூா் குமுதேப்பள்ளி அரு... மேலும் பார்க்க

படப்பள்ளி திம்மராய சுவாமி கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றம்

ஊத்தங்கரை: படப்பள்ளி திம்மராயசுவாமி கோயில் தோ்த் திருவிழாவையொட்டி திங்கள்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. ஊத்தங்கரை படப்பள்ளியில் பழைமை வாய்ந்த ஸ்ரீ திம்மராய சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் 72 -ஆம் ஆண்... மேலும் பார்க்க