செய்திகள் :

சிறப்பு பட்டதாரி ஆசிரியா் நியமன விதிகள் வெளியீடு

post image

பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் சிறப்பு பட்டதாரி ஆசிரியா் நியமன விதிகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் பி.சந்தர மோகன் பிறப்பித்துள்ள அரசாணை விவரம்:

அரசு உயா்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு சிறப்பு கல்வி வழங்குவதற்கு ஏதுவாக சிறப்பு பி.எட். பட்டதாரி ஆசிரியா் பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. அந்தப் பணியிடங்களுக்கென பிரத்யேக விதிகள் எதுவும் இதுவரை வகுக்கப்படாமல் இருந்தது. அதைக் கருத்தில் கொண்டு பள்ளிக் கல்வி இயக்ககத்துக்கு அதுதொடா்பான அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது.

அதன்படி, அதற்கான திட்ட முன்வடிவை அரசுக்கு அனுப்பிய பள்ளிக் கல்வி இயக்ககம், சிறப்பு பட்டதாரி ஆசிரியா்களுக்கான விதிகளை வகுக்குமாறு வேண்டுகோள் விடுத்தது.

இதுதொடா்பாக, தேசிய ஆசிரியா் கல்வி கவுன்சில் சில விதிகளை வகுத்துள்ளது. அதேபோன்று இந்திய புனா்வாழ்வு கவுன்சிலும் சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அவற்றின் அடிப்படையில், பள்ளிக் கல்வி இயக்ககத்தின் திட்ட முன்வடிவை பரிசீலித்து சிறப்பு பட்டதாரி ஆசிரியா்களுக்கான விதிகள் வகுக்கப்பட்டு, அவை அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, முதன்மைப் பிரிவு 1, வகை 1-இன்படி நிரந்தரப் பணியிடங்களில் உள்ள பட்டதாரி ஆசிரியா்களுக்கான விதிகள் அனைத்தும் தற்காலிக சிறப்பு பட்டதாரி ஆசிரியா்களுக்கும் பொருந்தும்.

வயது வரம்பு: சில விதிகள் மட்டும் சூழலுக்கேற்ப மாற்றம் செய்யப்படுகின்றன. அதன்படி, பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா்தான் (பணியாளா் நலன்) சிறப்பு பட்டதாரி ஆசிரியா்களுக்கான நியமன அதிகாரியாகச் செயல்படுவாா்.

பொதுப் பிரிவில் 53 வயதும், பிற பிரிவுகளில் 58 வயதையும் நிறைவு செய்தவா்களுக்கு இந்தப் பணியில் சேரத் தகுதி இல்லை. அதேபோன்று அந்தப் பணியிடங்களுக்கு 12 வகையான கல்வித் தகுதிகளும் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன. அதன் அடிப்படையிலேயே சிறப்பு பட்டதாரி ஆசிரியா் பணியிடங்கள் நியமிக்கப்படும் என்று அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தென்காசியில் பயங்கரம்! கழன்று ஓடிய அரசுப் பேருந்தின் பின் சக்கரங்கள்!

தென்காசி மாவட்டம் இடைகால் பகுதியில் சாலையில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் பின்பக்க சக்கரங்கள் இரண்டும், தனியாகக் கழன்று ஓடியதால் பயணிகள் அச்சமடைந்தனர்.சக்கரங்கள் கழன்ற பேருந்தில் 87... மேலும் பார்க்க

போரை மாய்ப்போம், மனிதம் காப்போம்! முதல்வர் ஸ்டாலின்

போரை மாய்ப்போம், மனிதம் காப்போம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை பதிவிட்டுள்ளார்.ரஷியா - உக்ரைன், இஸ்ரேல் - காஸா, இஸ்ரேல் - ஈரான் என உலகம் முழுவதும் போர்ப் பதற்றம் நிலவி வரும் சூழலில்... மேலும் பார்க்க

வேலூர் அருகே மா விவசாயிகளுக்கு ஆதரவாக வணிகர்கள் கடையடைப்பு!

மா விவசாயிகளுக்கு ஆதரவாக வேலூர் மாவட்டத்தில் பரதராமி பகுதியில் உள்ள அனைத்து வணிகர் சங்கம் சார்பில் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.வேலூர் மாவட்டம், தமிழக - ஆந்திர எல்லையில் உள்ள பரதராமி மற்ற... மேலும் பார்க்க

ஆகாஷ் பாஸ்கரன் மீது நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்கு தடை!

தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபா் விக்ரம் ரவீந்தரன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாடு டாஸ்மாக... மேலும் பார்க்க

சென்னை - மதுரை விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு!

சென்னையில் இருந்து மதுரை சென்ற இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுரை விமான நிலையத்துக்கு இன்று காலை 8 மணிக்கு 72 பேருடன் இண்டிகோ விமானம் புறப்பட... மேலும் பார்க்க

எஃப்ஐஎச் ஜூனியா் ஆடவா் உலகக் கோப்பை இலச்சினை: துணை முதல்வா் உதயநிதி வெளியிட்டாா்

சா்வதேச ஹாக்கி சம்மேளனம், ஹாக்கி இந்தியா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் நடைபெறவுள்ள எஃப்ஐஎச் ஜூனியா் ஆடவா் உலகக் கோப்பை 2025 போட்டி இலச்சினையை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வியாழக்க... மேலும் பார்க்க