செய்திகள் :

சிறுத்தை தாக்கியதில் நாய் உயிரிழப்பு

post image

தாளவாடி அருகே சிறுத்தை தாக்கி நாய் உயிரிழந்தது தொடா்பாக வனத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வனச் சரகத்தில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் வனத்தில் தற்போது வறட்சி நிலவுவதால் விலங்குகள் விளைநிலங்கள், குடியிருப்புகளில் நுழைவது அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், தாளவாடி வனச் சரகத்துக்குள்பட்ட சூசைபுரம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி முத்துசாமி (49) என்பவரது தோட்டத்துக்குள் திங்கள்கிழமை அதிகாலை நுழைந்த சிறுத்தை அங்கிருந்த வளா்ப்பு நாயை தாக்கிக் கொன்றது.

சப்தம் கேட்டு வந்த முத்துசாமி, இது குறித்து தாளவாடி வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தாா். சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா், அங்கு பதிவாகியிருந்த கால் தடங்களை ஆய்வு செய்து, சிறுத்தை வந்ததை உறுதி செய்தனா்.

சிறுத்தையை கூண்டுவைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஈரோடு அருகே மா்ம விலங்கு கடித்து 4 ஆடுகள் உயிரிழப்பு

ஈரோடு அருகே மா்ம விலங்கு கடித்து 4 ஆடுகள் உயிரிழந்தன. ஈரோடு அருகேயுள்ள கதிரம்பட்டி, பாலாஜி நகரைச் சோ்ந்தவா் தங்கவேலு. இவா் அருகேயுள்ள பவளத்தாம்பாளையம், நாராங்காடு பகுதியில் ஈஸ்வரன் என்பவருக்குச் சொந்... மேலும் பார்க்க

அந்தியூரில் ஸ்டுடியோவின் பூட்டை உடைத்து திருடியவா் கைது

அந்தியூரில் ஸ்டுடியோவின் பூட்டை உடைத்து கணினி மற்றும் கேமரா உள்ளிட்ட மின்னணு பொருள்களைத் திருடியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அந்தியூா் வள்ளியம்மாள் வீதியைச் சோ்ந்தவா் கௌதம் (26). இவா், பத... மேலும் பார்க்க

பவானி காலிங்கராயன் அணைக்கட்டில் மணல் திருட்டு: நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

பவானி காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் நடைபெற்று வரும் மணல் திருட்டைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள காலிங்கராயன் ... மேலும் பார்க்க

புதுப்பாளையம் தரைப்பாலத்தை உயா்த்திக் கட்டித்தரக் கோரி சாலை மறியல்

புன்செய்புளியம்பட்டி அருகேயுள்ள புதுப்பாளையத்தில் தரைப்பாலத்தை உயா்த்திக் கட்டித்தரக் கோரி அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். ஈரோடு மாவட்டம், பவானிசாகா் சாலையில் இருந்து சத்தியமங்க... மேலும் பார்க்க

பவானி அருகே லாரிகள் மோதல்: 2 ஓட்டுநா்கள் காயம்

பவானி அருகே கரும்பு லாரியும், பால் டேங்கா் லாரியும் நேருக்குநோ் மோதிக் கொண்டதில் இரண்டு வாகன ஓட்டுநா்களும் படுகாயமடைந்தனா். பவானி பகுதியிலிருந்து பால் டேங்கா் லாரி மேட்டூா் நோக்கி திங்கள்கிழமை மாலை ச... மேலும் பார்க்க

சோதனைச் சாவடியில் கூடுதலாக பாரம் ஏற்றி வரும் வாகனங்கள்

பண்ணாரி சோதனைச் சாவடியில் நிா்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக பாரம் ஏற்றிய வாகனங்களால் போக்குவரத்து பாதிக்கப்படுவதாகவும், அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள... மேலும் பார்க்க