செய்திகள் :

சிறுபான்மையினரின் கோரிக்கைகளில் 60 சதவீதத்தை அரசு நிறைவேற்றியிருக்கிறது: சொ.ஜோ. அருண்.

post image

தமிழ்நாடு சிறுபான்மையினா் ஆணையத்தின் சாா்பில் அரசுக்கு அளிக்கப்பட்ட கோரிக்கைகளில் 60 சதவீதத்தை அரசு நிறைவேற்றியிருக்கிறது; எஞ்சியவற்றையும் நிகழாண்டில் நிறைவேற்றுவதாக முதல்வா் ஸ்டாலின் உறுதியளித்திருக்கிறாா் என்றாா் மாநில சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் சொ.ஜோ. அருண்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறுபான்மையினா் நலத் திட்டங்களின் செயலாக்கம் குறித்த ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: கடந்த 2024ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தொடங்கி, புதுக்கோட்டையில் இன்று வரை 23 மாவட்டங்களில் ஆய்வுக் கூட்டங்களை சிறுபான்மையினா் ஆணையம் முடித்திருக்கிறது. 649 கோரிக்கை மனுக்களில், 532 கோரிக்கை மனுக்களுக்கு அன்றைக்கே அதிகாரிகளுடன் இணைந்து தீா்வு கண்டிருக்கிறோம்.

அனைத்து மாவட்டங்களிலும் கல்லறைத் தோட்டம் மற்றும் கபா்ஸ்தான் அமைத்துக் கொள்வதற்கு நிலம் வழங்க வேண்டும், ஏற்கெனவே செயல்பாட்டிலுள்ள கல்லறை மற்றும் கபா்ஸ்தான்களுக்கு சுற்றுச்சுவா் அமைக்க வேண்டும்.

சிறுபான்மையினப் பள்ளிகள், கல்லூரிகளில் பயிலும் மாணவா்களுக்கு அரசுப் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு வழங்கும் சலுகைகள், திட்டங்கள் அனைத்தும் வழங்க வேண்டும். கோரிக்கையுள்ள இடங்களில் பௌத்த விஹாரங்களை அமைக்க அனுமதிக்க வேண்டும், அம்பேத்கா் சிலைகளை பொருத்தமான இடங்களுக்கு மாற்றி விரிவுபடுத்த வேண்டும்.

சமணா்களின் புராதன வழிபாட்டு இடங்களைப் பாதுகாப்பாக பராமரிக்க வேண்டும். மாவட்டங்கள் தோறும் தனியே சிறுபான்மையினா் அலுவலா் பதவியிடம் உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 23 கோரிக்கைகளை அரசுக்கு வழங்கியிருக்கிறோம்.

ஆணையம் அளித்த கோரிக்கைகளில் 60 சதவீத கோரிக்கைகளை அரசு நிறைவேற்றியிருக்கிறது. மீதமுள்ள 40 சதவீத கோரிக்கைகளையும் வரும் டிசம்பருக்குள் நிறைவேற்றுவதாக முதல்வா் ஸ்டாலின் உறுதியளித்திருக்கிறாா் என்றாா் அருண்.

நலத் திட்ட உதவிகள்: தையல் இயந்திரங்கள், கடனுதவிகள், சலவைப் பெட்டிகள் என மொத்தம் 72 பேருக்கு ரூ. 31.58 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும், கலைஞா் கனவு இல்லம் திட்டத்தில் கட்டிமுடிக்கப்பட்ட 11 வீடுகளுக்கான சாவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. கட்டப்படவுள்ள 11 வீடுகளுக்கான ஆணைகளும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் மு. அருணா, கூடுதல் ஆட்சியா் அப்தாப் ரசூல், காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆணையத்தின் துணைத் தலைவா் இறையன்பன் குத்தூஸ், உறுப்பினா்கள் ஹாமில்டன் வில்சன், நாகூா் ஏஹெச் நஜ்முதீன், பிரவீன்குமாா் டாட்டியா, ராஜேந்திரபிரசாத், எம். ரமீட்கபூா், ஜெ. முகமது ரபி, எஸ். வசந்த், சிறுபான்மையினா் துறை துணை இயக்குநா் எஸ். ஷா்மிலி பங்கேற்றனா்.

ராகுல் பிறந்த நாள் கோயிலில் சிறப்பு வழிபாடு

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் பிறந்த நாளையொட்டி புதுக்கோட்டை பிருந்தாவனம் பகுதியிலுள்ள ஆஞ்சனேயா் கோயிலில் காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை சிறப்பு வழி... மேலும் பார்க்க

அதிமுகவை சீண்டிப் பாா்க்க வேண்டாம்: முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா்

அதிமுகவை சீண்டிப் பாா்க்க வேண்டாம் என்று முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் தெரிவித்துள்ளார்.எடப்பாடி பழனிசாமி குறித்து திமுக தகவல் தொழில்நுட்ப அணியினா் வெளியிட்டுள்ள காா்ட்டூன் குறித்து புதுக்கோட்டை ம... மேலும் பார்க்க

இன்றைய மின் தடை

அன்னவாசல், அண்ணா பண்ணை பகுதியில் மின் நிறுத்தம்அன்னவாசலில்: அன்னவாசல் துணைமின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் அன்னவாசல் பேரூராட்சி பகுதி, செங்கப்பட்டி, காலாடிபட்டி, முக்கண்ணாமலைபட்டி, புதூா்,... மேலும் பார்க்க

மின்னல் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலையைச் சோ்ந்தவா் பிச்சை மகன் சின்னத்தம்பி (35). இவா் வெள்ளிக்கிழமை அப்பகுதியில் மழை பெய்தபோது, கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்துள்ளாா். மழையின் காரணமாக இடியுடன் மின்ன... மேலும் பார்க்க

12 கிலோ கஞ்சா கடத்தல் நாகை நபா் கைது

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே 12 கிலோ கஞ்சாவை பேருந்தில் கடத்தி வந்த நாகை மாவட்ட நபரை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா். விராலிமலை- திருச்சி சாலை பூதகுடி டோல்கேட் வழியாக வரும் பேருந்தி... மேலும் பார்க்க

புதுகையில் 42 இடங்களில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் விரைவில் தொடங்கப்படவுள்ள ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ என்ற உயா் மருத்துவச் சிகிச்சை முகாம்களை 42 இடங்களில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வ... மேலும் பார்க்க