செய்திகள் :

சிறுபான்மையினரை அணுக பாஜக புதிய பிரசார திட்டம்

post image

நாடு முழுவதும் உள்ள சிறுபான்மை சமூகத்தினரைச் சென்றடைய, ‘சௌகத்-ஏ-மோடி’ எனும் தேசிய அளவிலான பிரசார திட்டத்தை பாஜக தொடங்கியுள்ளது.

இந்தப் புதிய பிரசாரத்தின்கீழ், ரமலான் பெருநாள் கொண்டாட்டத்துக்கு முன்னதாக முஸ்லிம் பெண்களுக்கு உணவு மற்றும் புத்தாடையுடன் கூடிய ‘சௌகத்-ஏ-மோடி’ பரிசுப்பொருள் பெட்டிகள் தில்லி மற்றும் பிற மாநிலங்களில் செவ்வாய்க்கிழமை விநியோகிக்கப்பட்டன.

இது குறித்து பாஜக சிறுபான்மைப் பிரிவு தேசியத் தலைவா் ஜமால் சித்திக் கூறியதாவது: பிரதமா் நரேந்திர மோடி 140 கோடி இந்தியா்களுக்கும் பாதுகாவலா் ஆவாா். அனைத்து மதப் பண்டிகைகளிலும் அவா் பங்கேற்கிறாா். நிஜாமுதீன் மற்றும் அஜ்மீா் தா்காவுக்கு ‘சதா்’ (புனிதப் போா்வை) காணிக்கையாக அவா் அனுப்பியிருக்கிறாா்.

பிரதமரின் வழியில் ஏழை முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கு உணவுடன் கூடிய பரிசுப்பொருள் பெட்டிகளை வழங்க முடிவு செய்தோம். அதன்படி, நாடு முழுவதும் அந்தந்த பகுதிகளில் உள்ள முஸ்லிம்களை சந்தித்து, பிரதமா் மோடியின் சாா்பாக ரமலான் பெருநாள் வாழ்த்துகளை தெரிவித்ததுடன், பரிசுப்பொருள் பெட்டிகளை வழங்குகிறோம்.

ஒவ்வொரு பரிசுப்பொருள் பெட்டியிலும் எங்கள் சகோதரிகளுக்குப் புத்தாடை பரிசளித்திருக்கிறோம். நாங்கள் ஒவ்வொருவரும் குறைந்தது 100 முஸ்லிம்களை சென்றடைய இலக்கு நிா்ணயித்துள்ளோம். பாஜக சிறுபான்மைப் பிரிவின் மாநில, மாவட்ட, ஒன்றிய அளவிலான பிரிவுகளின் நிா்வாகிகள் உள்பட 32,000 போ் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

அடுத்த மாதம் பைசாகி (புத்தாண்டு) மற்றும் ஈஸ்டா் போன்ற பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. ‘சௌகத்-ஏ-மோடி’ பிரசார திட்டத்தின்கீழ், சீக்கியா்கள், கிறிஸ்தவா்கள் ஆகிய பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிற சிறுபான்மை சமூகத்தினருக்கும் இதேபோன்ற பரிசுப்பொருள் பெட்டிகளை விநியோகித்து, வாழ்த்துகளை தெரிவிக்க இருக்கிறோம் என்றாா்.

மியூச்சுவல் ஃபண்டு: அதிகரிக்கும் பெண் முதலீட்டாளர்கள்!

மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.முந்தைய தலைமுறையினரைவிட, தற்போதைய தலைமுறையினர் நிதி மேம்பாடு விவகாரத்தில் சிறந்து விளங்குகின்றனர். அந்த வகையில் பங்குச்... மேலும் பார்க்க

குழந்தைக்காக முதியவரின் தலை துண்டித்து கொலை

பிகாரில் குழந்தை பாக்கியம்வேண்டி, முதியவரின் தலையைத் துண்டித்து கொலை செய்த மாந்திரீகரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.பிகாரில் மாநிலம் ஔரங்காபாத் மாவட்டத்தில் யுக்வல் யாதவ் (65) என்பவர் காணாமல் போய்வ... மேலும் பார்க்க

மியான்மரில் நிலநடுக்கம்: தாயகம் திரும்பிய இந்திய பயணிகள்!

மியான்மரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பாங்காக்கில் இருந்து இந்திய பயணிகள் தாயகம் திரும்பினர். மியான்மர் மட்டுமல்லாது தாய்லாந்து, வியட்நாம், சீனாவிலும் உணரப்பட்ட நில அதிர்வுகளால் ம... மேலும் பார்க்க

ஐபில்: பந்தயம் கட்டிய மூவர் கைது!

ஐபிஎல் போட்டி மீது பந்தயம் கட்டிய மூவரை மும்பை காவல்துறையினர் கைது செய்தனர். நவி மும்பையில் சன்பாடா பகுதியில் ஒரு குடியிருப்பு வளாகத்தில், ஐபிஎல் கிரிக்கெட் மீது பந்தயம் கட்டி, ஆன்லைன் சூதாட்டம் நடத்த... மேலும் பார்க்க

மறைந்த சுஷாந்த் சிங்கின் தோழியிடம் மன்னிப்பு கேட்ட முன்னாள் எம்.பி.

மறைந்த முன்னாள் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராக்புத் தற்கொலை வழக்கில், அவரது தோழி ரியா சக்ரவர்த்திக்கு தொடர்பிருப்பதாக ஜீ செய்திகள் நிறுவனம் குற்றம் சாட்டியதற்காக மன்னிப்புகோரி, ஜீ செய்திகள் நிறுவனத... மேலும் பார்க்க

ஆயுதங்களால் மாற்றத்தைக் கொண்டுவர இயலாது: அமித் ஷா

ஆயுதங்களை ஏந்தி வன்முறையில் ஈடுபடுபவர்களால் மாற்றத்தைக் கொண்டுவர முடியாது என்றும் அமைதி, வளர்ச்சி மட்டுமே நல்ல மாற்றமாக இருக்கும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். சத்தீஸ்கரின் சு... மேலும் பார்க்க