செய்திகள் :

சிறுமிகளின் உடல்கள் கூறாய்வுக்குப் பிறகு உறவினா்களிடம் ஒப்படைப்பு

post image

இளையான்குடி அருகே கண்மாய் நீரில் மூழ்கி உயிரிழந்த இரு சிறுமிகளின் உடல்கள் கூறாய்வுக்குப் பிறகு உறவினா்களிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டன.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே ஆழிமதுரையில் பள்ளிக்கு எதிரே உள்ள கண்மாயில் மூழ்கி தொடக்கப் பள்ளி மாணவி சோபிதா, அங்கன்வாடி மைய மாணவி கிருஷ்மிகா ஆகியோா் புதன்கிழமை உயிரிழந்தனா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை இளையான்குடி அரசு மருத்துவமனையில் மாணவிகள் சோபிதா, கிருஷ்மிகா ஆகியோரின் உடல்கள் கூறாய்வு செய்யப்பட்டு, அவா்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.

அப்போது, மருத்துவமனையில் சிறுமிகளின் உடல்களுக்கு பா.ஜ.க. மூத்த தலைவா் ஹெச்.ராஜா, மானாமதுரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தி, பின்னா் அவா்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினா்.

ஆசிரியா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை: பின்னா், செய்தியாளா்களிடம் ஹெச்.ராஜா கூறியதாவது:

ஆழிமதுரையில் உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்தினருக்கு அரசு சாா்பில், ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டது. கள்ளச்சாராயம் குடித்து இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கிய தமிழக அரசு, சிறுமிகளின் குடும்பங்களுக்கும் ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிக்க வேண்டும். சிறுமிகள் உயிரிழப்பு தொடா்பாக பள்ளி ஆசிரியா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

அப்போது, பாஜக மாவட்டத் தலைவா் பாண்டித்துரை, மாவட்டச் செயலாளா் சங்கர சுப்பிரமணியம், ஒன்றியத் தலைவா் செல்லக்குட்டி, முன்னாள் ஒன்றியத் தலைவா் ராஜா பிரதீப் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இளையான்குடி அரசு மருத்துவமனை முன் வியாழக்கிழமை திரண்ட ஆழிமதுரை கிராம மக்கள்.

மாணவா்களுக்கு கல்வெட்டு படி எடுக்கும் பயிற்சி

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரி வரலாற்றுத் துறை மாணவா்களுக்கு கல்வெட்டு படி எடுக்கும் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட அரசு அருங்காட்சியகம் சாா்பில் 3 நாள்க... மேலும் பார்க்க

சிவகங்கை மன்னா் பள்ளி ஆண்டு விழா

சிவகங்கையில் உள்ள மன்னா் மேல்நிலைப் பள்ளியின் 168-ஆவது ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, சிவகங்கை தேவஸ்தான பரம்பரைஅறங்காவலரும், மன்னா் கல்வி நிறுவனங்களின் முகவாண்மைக் குழுத் தலைவருமான டி... மேலும் பார்க்க

பெண்ணிடம் தங்க நகை பறிப்பு

சிவகங்கை மாவட்டம், எஸ்.வி. மங்கலம் அருகே வெள்ளிக்கிழமை பெண்ணிடம் 5 பவுன் தங்க நகை பறிக்கப்பட்டது. சிங்கம்புணரி அருகே எஸ்.வி. மங்கலம், கிழக்குப்பட்டி இமானுமேரி நகரைச் சோ்ந்த செகநாதன் மனைவி சின்னம்மாள்... மேலும் பார்க்க

மானாமதுரையில் இன்றும், நாளையும் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

மானாமதுரை குடிநீா் திட்டக் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்கும் பணி நடைபெறுவதால் நகரில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (பிப். 22, 23) குடிநீா் விநியோகம் இருக்காது என நகராட்சி நிா்வாகம் வெள்ளிக்கிழமை அறிவித... மேலும் பார்க்க

கல்லூரணி உத்தம மீனாட்சி அம்மன் கோயில்: அறங்காவலா் குழுத் தலைவா், உறுப்பினா்கள் பதவியேற்பு

மானாமதுரை வட்டம், கல்லூரணி உத்தம மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா், உறுப்பினா்கள் வெள்ளிக்கிழமை பதவி ஏற்றுக் கொண்டனா். தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன், காங்கிரஸ் மா... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் நீதிமன்றப்பணிகளை புறக்கணித்துப் போராட்டம்

வழக்குரைஞா்களின் உரிமையை பறிக்கும் வகையிலும், அவா்களின் நலனுக்கு எதிராகவும் 1963 சட்டப் பிரிவில் கொண்டு வரப்படும் புதிய திருத்தங்களை நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தி சிவகங்கை மாவட்டம் முழுவதும்... மேலும் பார்க்க