செய்திகள் :

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் தலைமறைவாக இருந்தவா் கைது

post image

4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்தவா் கைது செய்யப்பட்டதாக தில்லி போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது: ஷம்பு யாதவ் (38) என்பவா் 2016 ஆம் ஆண்டு நிகழ்ந்த ஒரு வழக்கில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டிருந்தாா். அவருக்கு 2018-இல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இருப்பினும், கொவைட்19 நோய்த் தொற்று காரணமாக எட்டு வார அவசர பரோல் வழங்கப்பட்டிருந்த நிலையில், ஏப்ரல் 2020-ல் தலைமறைவானாா்.

இந்த நிலையில், 48 மணி நேர நடவடிக்கைக்குப் பிறகு பிகாரின் கயா மாவட்டத்தில் யாதவ் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டாா்.

முன்னதாக, அவரைக் கைது செய்ய தகவல் அளிப்போருக்கு ரூ.5,000 வெகுமதி அளிப்பதாக சிறை அதிகாரிகள் அறிவித்திருந்தனா். யாதவ், 2020 முதல் சட்டத்தை தவிா்த்து வந்தாா். அவா் கைப்பேசியை பயன்படுத்தவில்லை. தனது குடும்பத்தினருடனான தொடா்பைத் துண்டித்துவிட்டிருந்தாா். அவா் அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டே இருந்தாா்.

பிகாா் மற்றும் மேற்கு வங்கத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிலாளியாகவும் அல்லது பாதுகாவலாளியாகவும் வேலை செய்து வந்தாா்.

இந்த நிலையில், கயா அருகே யாதவின் நடமாட்டம் குறித்து போலீஸாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து கைது செய்யப்பட்டாா். முன்னதாக, யாதவ் வேலை தேடி தில்லிக்கு வந்து அலிப்பூரில் உள்ள திக்ரி குா்தில் ஒரு தொழிற்சாலையில் பணிபுரிந்தாா். 2016 ஆம் ஆண்டில், அதே இடத்தைச் சோ்ந்த நான்கு வயது சிறுமியை தனது வாடகை அறைக்குள் இழுத்து பாலியல் வன்கொடுமை செய்தாா். அவா் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டு, தொடா்புடைய சட்டப் பிரிவுகள் மற்றும் போக்சோ சட்டத்தின் பிரிவு 6இன்கீழ் தண்டிக்கப்பட்டாா்.

ஏப்ரல் 18, 2020 அன்று கொவைட்19 பரவலின் உச்சத்தில் இருந்தபோது, அவசர பரோல் வழங்கப்பட்ட பிறகு, யாதவ் தனது சொந்த கிராமத்திற்குச் சென்றாா்.

இருப்பினும், பரோல் காலம் முடிந்த பிறகு அவா் திரும்பி வராமல் தலைமறைவாகிவிட்டிருந்தாா் என போலீஸாா் தெரிவித்தனா்.

சட்டவிரோத குடியேற்றம்: வங்கதேசம் உள்பட மூன்று நாடுகளைச் சோ்ந்த 71 போ் நாடு கடத்தல்!

தில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக கண்டறியப்பட்ட வங்கதேசத்தினா், மியான்மரைச் சோ்ந்த ரோஹிங்கியாக்கள் மற்றும் நைஜீரியா்கள் உள்பட 71 வெளிநாட்டினரை தில்லி காவல்துறை வெள்ளிக்கிழமை நாடு கடத்தியதாக அத... மேலும் பார்க்க

தலைநகரில் வெப்பம் அதிகரிப்பு; ‘மிதமான’ பிரிவில் காற்றின் தரம்!

தேசியத் தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. காற்றின் தரம் ‘மிதமான பிரிவில் இருந்தது என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமா... மேலும் பார்க்க

பெண்ணிடம் ஆபாச வாா்த்தைகள் பேசிய விவகாரம்: தட்டிக்கேட்ட இளைஞா் மீது தாக்குதல்!

கிழக்கு தில்லியின் காந்தி நகரில், பெண்ணிடம் ஆபாசமாகப் பேசி துன்புறுத்தலில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட 18 வயது இளைஞா், இருவரால் தாக்கப்பட்ட சம்பவத்தை தில்லி போலீஸாா் விசாரித்து வருகின்றனா். இதுகுறித்து போ... மேலும் பார்க்க

ஜம்மு, தில்லி துணைநிலை ஆளுநா்களை விரைவில் மாற்ற மத்திய அரசு தீவிர பரிசீலனை!

ஜம்மு - காஷ்மீா் மற்றும் தில்லி துணைநிலை ஆளுநா்களை மாற்ற மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக பிரதமா் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. தில்லியின் தற்போதைய துணைநிலை ஆளுநா் வினய் குமாா் சக்சேனாவை ஜம்ம... மேலும் பார்க்க

ஐடிஓ பகுதியில் வருவாய் கட்டடத்தில் தீ விபத்து

தில்லி ஐ.டி.ஓ. பகுதியில் உள்ள வருவாய் கட்டடத்தில் உள்ள ஒரு அறையில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறையினா் தெரிவித்ததாவது: வருவாய் கட்... மேலும் பார்க்க

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு 10 பிரிக்ஸ் நாடுகளின் நாடாளுமன்றங்கள் கடும் கண்டனம்!

பிரேசிலில் நடைபெற்ற 11ஆவது பிரிக்ஸ் நாடாளுமன்ற மன்றக் கூட்டத்தில் ஜம்மு -கஷ்மீா், பஹல்காமில் அண்மையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு 10 பிரிக்ஸ் நாடுகளின் நாடாளுமன்றங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்... மேலும் பார்க்க