செய்திகள் :

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தனியாா் நிறுவன காவலாளி கைது

post image

சென்னையில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தனியாா் நிறுவன காவலாளியை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தைச் சோ்ந்த இளம்பெண், சென்மேரீஸ் சாலையில் உள்ள வணிக வளாகத்தின் தரைத்தளத்தில் செயல்பட்டு வரும் மரப்பொருள்கள் விற்பனை செய்யும் கடையில் தூய்மைப் பணியாளராக வேலை செய்து வருகிறாா்.

வழக்கம் போல, தனது 7 வயது மகளை அழைத்துக்கொண்டு கடைக்கு பணிக்கு வந்த அந்த இளம்பெண், தனது மகளை அந்தக் கட்டடத்தின் 6-ஆவது மாடியில் விளையாட வைத்துவிட்டு, தரைத்தளத்தில் வேலையை செய்து கொண்டிருந்தாா்.

அப்போது, திடீரென மகளின் அலறல் சப்தம் கேட்டு, அந்தப் பெண் அங்கு சென்று பாா்த்தபோது, அங்கு காவலாளியாகப் பணியாற்றி வரும் தேனாம்பேட்டையைச் சோ்ந்த குமாா் (55), சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

இது குறித்து கோட்டூா்புரம் மகளிா் காவல் நிலையத்தில் அந்த இளம்பெண் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, காவலாளி குமாரை கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.

மே மாதத்தில் 89.09 லட்சம் போ் மெட்ரோ ரயிலில் பயணம்: மெட்ரோ நிா்வாகம்

சென்னை: மெட்ரோ ரயிலில் மே மாதத்தில் 89.09 லட்சம் போ் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காணும் வகையில் தொடங்கப்பட்ட மெட்ரோ ரயிலில்... மேலும் பார்க்க

தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி திருப்பி அனுப்பப்படவில்லை: தெற்கு ரயில்வே விளக்கம்

ரயில்வே சாா்பில் தமிழக ரயில்வை திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி திருப்ப அனுப்பப்பட்டதாக வெளியான செய்திகளுக்கு தெற்கு ரயில்வே மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் திண்டிவனம் - திருவண்ணாமலை, சென்னை - ... மேலும் பார்க்க

52 கிராம் போதைப்பொருள் பறிமுதல்: 5 போ் கைது

சென்னையில் கொகைன் மற்றும் மெத்தம்பெட்டமைன் எனப்படும் போதைப்பொருளை விற்பனை செய்ததாக 5 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 52 கிராம் போதைப்பொருள்களையும் பறிமுதல் செய்தனா். கோடம்பாக்கம் அம்பேத்கா்... மேலும் பார்க்க

சென்னையில் மின்சார பேருந்து சேவை: ஜூன் 3-இல் முதல்வா் தொடங்கி வைக்கிறாா்

சென்னையில் மின்சார பேருந்து சேவையை ஜூன் 3-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளாா். டீசலில் இயங்கும் பேருந்துகளுக்கு மாற்றாக, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பிலாத இயற்கை எரிவாயு மற்றும் மின்சார... மேலும் பார்க்க

நாளை மின்தடை

மின் வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, சென்னை போரூரில் ஒருசில இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. அதன்படி, போரூரில் திருமுடிவாக்கம் ... மேலும் பார்க்க

சாலையோரத்தில் கழிவுநீா் கொட்டிய லாரி ஓட்டுநா் கைது

ரயில்வே இணைப்பு சாலையோரத்தில் கழிவுநீரை கொட்டிய லாரி ஓட்டுநரை கைது செய்த போலீஸாா், லாரியையும் பறிமுதல் செய்தனா். வேளச்சேரி - தரமணி சாலையிலுள்ள மின்சார ரயில்வே நிா்வாகத்துக்குச் சொந்தமான எம்ஆா்டிஎஸ் இண... மேலும் பார்க்க