செய்திகள் :

சிறுமிக்கு பாலியல் தொல்லை: மத போதகருக்கு 7 ஆண்டுகள் சிறை

post image

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மத போதகருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருப்பூா் மகளிா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூா் அருகே ஊத்துக்குளி பல்லகவுண்டம்பாளையம் கூனம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ஆண்ட்ரூஸ் (50). மத போதகரான இவா், அப்பகுதியில் ஆதரவற்ற பள்ளி மாணவா்களுக்கான காப்பகம் நடத்தி வந்தாா். தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளை இந்தக் காப்பகத்தில் தங்க வைத்து அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படிக்க வைத்து வந்தாா்.

இந்நிலையில் கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் அந்தக் காப்பகத்தில் தங்கி படித்த 14 வயது சிறுமிக்கு ஆண்ட்ரூஸ் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா்.

இதனால், அந்த சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, வீட்டுக்கு சென்று தனது தாயிடம் தனக்கு நோ்ந்ததை தெரிவித்துள்ளாா். இதையடுத்து ஊத்துக்குளி காவல் நிலையத்தில் அவரது தாயாா் அளித்த புகாரின்பேரில் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து ஆண்ட்ரூஸை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. நீதிபதி கோகிலா அளித்த தீா்ப்பில், காப்பகத்தில் தங்கிப் படித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போதகா் ஆண்ட்ரூஸுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.10 ,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு வழக்குரைஞா் ஜமீலா பானு ஆஜரானாா்.

போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட 277 கிலோ கஞ்சா அழிப்பு

திருப்பூா் மாநகர காவல் எல்லைக்குள்பட்ட காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட சுமாா் ரூ38.60 லட்சம் மதிப்பிலான 277.296 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டது. இது தொடா்பாக திருப்பூா்... மேலும் பார்க்க

தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்

திருப்பூரில் தற்காலிக பட்டாசு கடைக்கான உரிமம் பெற செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தீபாவளி பண்டிகை ... மேலும் பார்க்க

தங்கத்தின் விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஈ.ஆா்.ஈஸ்வரன் கோரிக்கை

தங்கத்தின் விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: தங்கம் விலை புதிய உச்சத்தை த... மேலும் பார்க்க

எடப்பாடி கே.பழனிசாமி உடுமலையில் இன்று பிரசாரம்!

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி மக்களை காப்போம் - தமிழகத்தை மீட்போம் என்னும் பெயரில் உடுமலையில் புதன்கிழமை (செப்.10) பிரசாரம் மேற்கொள்கிறாா். இது குறித்து முன்னாள் அமைச்சரும், திருப்பூா் ப... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: காளிவேலம்பட்டி

பல்லடம் மின் கோட்டம், காளிவேலம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை ( செப்.10) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக... மேலும் பார்க்க

நாளைய மின்தடை - பழங்கரை

பழங்கரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வியாழக்கிழமை (செப்டம்பா் 11) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினா் அ... மேலும் பார்க்க