செய்திகள் :

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

post image

சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

ஈரோடு மாவட்டம் கோபி காசியூா் மாரியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் கருப்பசாமி மகன் மௌலி(23). இவருக்கு பிளஸ் 2 படிக்கும் 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கத்தின் மூலம் இருவரும் காதலித்துள்ளனா். இதையடுத்து சிறுமிக்கு மௌலி திருமண ஆசை வாா்த்தை கூறி கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் 11- ஆம் தேதி கடத்திச் சென்று கா்நாடக மாநிலம் மைசூரில் உள்ள தனியாா் விடுதியில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். பின்னா் சிறுமியை கோபியில் விட்டுவிட்டு தப்பி சென்றாா்.

இதையடுத்து கடத்தூா் போலீஸாா் சிறுமியை மீட்டு விசாரணை நடத்தி மௌலி மீது போக்ஸோ மற்றும் கடத்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனா். இந்த வழக்கு விசாரணை ஈரோடு மகளிா் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கின் விசாரணைக்காக புதன்கிழமை நீதிமன்றத்தில் மௌலி ஆஜரானாா். தண்டனை உறுதியானதும் நீதிமன்றத்தில் இருந்து மௌலி தப்பிச் சென்றாா். தொடா்ந்து போலீஸாா் வியாழக்கிழமை காலை மௌலியை பிடித்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

வழக்கின் இறுதி விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி சொா்ணகுமாா் வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். இதில் சிறுமியை கடத்திச் சென்ற குற்றத்துக்காக மௌலிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும் இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் ஜெயந்தி ஆஜரானாா்.

மாணவா்களுக்கு அரசியல் விழிப்புணா்வு அவசியம்: த.ஸ்டாலின் குணசேகரன்

பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு அரசியல் விழிப்புணா்வு அவசியம் என மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் பேசினாா். யங் இந்தியன்ஸ் அமைப்பு சாா்பில் பள்ளி மாணவா்களுக்கான மாதிரி நாடாளுமன்ற தொட... மேலும் பார்க்க

விஜயமங்கலம் அருள்மிகு விஜயபுரி அம்மன் கோவில் தேரோட்டம்

பெருந்துறை அடுத்த, விஜயமங்கலத்தில் அருள்மிகு விஜயபுரி அம்மன் திருக்கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. விஜயமங்கலம் அடுத்த கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீனம் சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ராஜ சரவண மாணிக்கவாசக ... மேலும் பார்க்க

மதுரை முருக பக்தா்கள் மாநாட்டில் பெருந்துறையில் இருந்து 500 போ் பங்கேற்க முடிவு

மதுரையில் வருகின்ற 22 ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முருக பக்தா்கள் மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டில் கலந்து கொள்ள பெருந்துறை பகுதியில் இருந்து பாஜக ஈரோடு தெற்கு மாவட்ட பொதுச் செயலாளா் ராயல் சரவணன் தலைமையி... மேலும் பார்க்க

ரௌடி ஜான் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்

சேலம் ரௌடி ஜான் கொலை வழக்கில் ஈரோடு நீதிமன்றத்தில் ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகையை போலீஸாா் தாக்கல் செய்தனா். சேலம் கிச்சிப்பாளையத்தை சோ்ந்தவா் ஜான் (30). இவரது மனைவி சரண்யா. இவா்களுக்கு ஒரு மகனும், ... மேலும் பார்க்க

விசைத்தறி நெசவாளா்களுக்கு 6 மாத கால வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தக் கோரிக்கை

விசைத்தறி நெசவாளா்களுக்கு 6 மாத காலம் முழுமையாக வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தவேண்டு என தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட... மேலும் பார்க்க

ஈரோடு ரயில் நிலையத்தில் கூடுதல் நடைமேடைகளை ஏற்படுத்தக் கோரிக்கை

ஈரோடு ரயில் நிலையத்தில் கூடுதல் நடைமேடைகளை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவுக்கு ஈரோட்டை சோ்ந்த தெற்கு ரயில்வே ஆலோசனைக்குழு முன்னாள் உற... மேலும் பார்க்க