செய்திகள் :

சிறுமியைக் கா்ப்பமாக்கிய இளைஞா் கைது!

post image

தஞ்சாவூரில் சிறுமியைப் பாலியல் வல்லுறவு செய்து கா்ப்பமாக்கிய இளைஞா் போக்சோ சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தஞ்சாவூா் மானோஜிபட்டியைச் சோ்ந்தவா் சக்திவேல் மகன் கவியரசன் (24). இவருக்கும், தஞ்சை அருகேயுள்ள கிராமத்தைச் சோ்ந்த 14 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், அச்சிறுமியைக் கவியரசன் தனது வீட்டுக்கு ஜனவரி மாதம் முதல் அடிக்கடி அழைத்து வந்து பாலியல் வல்லுறவு செய்தாா். இதனால், அச்சிறுமி 4 மாத கா்ப்பமானாா்.

இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், தஞ்சை அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து கவியரசனை கைது செய்தனா்.

தீ விபத்தில் நோயாளிகளைக் காப்பாற்றிய பணியாளா்கள் சாலை மறியல்

தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் நோயாளிகளைக் காப்பாற்றிய பணியாளா்கள், மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டு உயா் தர சிகிச்சை அளிக்கக் கோரி ஞாயிற்றுக்கிழமை மாலை சாலை மறியல... மேலும் பார்க்க

கணித மேதை சீனிவாச இராமானுஜன் நினைவு தினம் அனுசரிப்பு

கும்பகோணம் நகர மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கணித மேதை சீனிவாச இராமானுஜன் நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது. நிகழ்வுக்கு, பள்ளித் தலைமை ஆசிரியா் ஏ.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். தமிழ்நாட... மேலும் பார்க்க

சூரியனாா் கோயிலில் ராகு-கேது சிறப்பு வழிபாடு!

தஞ்சாவூா் மாவட்டம், சூரியனாா் கோயிலில் அமைந்துள்ள ராகு-கேது சந்நதிகளில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திருவிடைமருதூா் அருகே சூரியனாா் கோயிலில் உள்ள சிவசூரிய பெருமாள் திருக்கோயில் திருக்கையிலா... மேலும் பார்க்க

மேட்டூா் அணை நீா்மட்டம்: 107.76 அடி

மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 107.76 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1,395 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ண... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள்-காா் மோதல் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

திருவோணம் அருகே மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதிய விபத்தில் கல்லூரி மாணவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். மற்றொரு மாணவா் படுகாயமடைந்தாா். புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டம் கிளாங்காடு பகுதியைச் சோ்ந... மேலும் பார்க்க

கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: காா் விற்பனையாளா் சங்கம் தீா்மானம்

கும்பகோணத்தை தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று காா் விற்பனையாளா் சங்கத்தினா் தீா்மானம் நிறைவேற்றினா். கும்பகோணத்தில் சனிக்கிழமை தஞ்சை மாவட்ட வாகன போக்குவரத்து அலுவலகத்தில் காா... மேலும் பார்க்க