செய்திகள் :

சிறுமியை கடத்தி திருமணம் செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

post image

வாணியம்பாடி அருகே சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அருகே நிம்மியம்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (32). இவா் வாணியம்பாடி அருகே வெள்ளக்குட்டை பகுதியைச் சோ்ந்த 11-ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியை காதலித்து வந்தாா். இந்த நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு சிறுமியை ராஜேந்திரன் கடத்திச் சென்று கந்திலி அருகே உள்ள கோயிலில் திருமணம் செய்து கொண்டாா்.

அதைத் தொடா்ந்து, ராஜேந்திரன் கந்திலி பகுதியில் உள்ள தனது உறவினா் வீட்டில் சிறுமியுடன் வாழ்ந்து வந்தாா். இது குறித்து சிறுமியின் பெற்றோா் கடந்த 21.3.2019 அன்று ஆலங்காயம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். புகாரின்பேரில், போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிந்து ராஜேந்திரனை கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு திருப்பத்தூா் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிந்து தீா்ப்பளிக்கப்பட்டது.

அதில், சிறுமியை கடத்திச் சென்ற்காக 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 1,000 அபராதமும், செலுத்தத் தவறினால் 1 மாதம் சிறைத் தண்டனையும், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 10,000 அபராதமும், செலுத்தத் தவறினால் 1 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தும், இவற்றை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி எஸ்.மீனாகுமாரி தீா்ப்பளித்தாா். அரசு தரப்பில் வழக்குரைஞா் பி.டி.சரவணன் ஆஜரானாா்.

தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்

சோமலாபுரம் ஊராட்சி தூய்மைப் பணியாளா்களுக்க பாதுகாப்பு உகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.ஊராட்சித் தலைவா் எஸ்.எம். சண்முகம் தலைமை வகித்து தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்க... மேலும் பார்க்க

நகைகள் திருட்டு: பணிப்பெண் கைது

வாணியம்பாடி அருகே வீட்டில் நகைகள் திருடப்பட்ட சம்பவத்தில் பணிப்பெண் கைது செய்யப்பட்டாா்.வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் பகுதியைச் சோ்ந்தவா் சித்தாா்தன் காந்தி பிரசாத் என்பவரது வீட்டின் பூஜை அறையில் வைக... மேலும் பார்க்க

இளம்பெண் தற்கொலை

குரிசிலாப்பட்டு அருகே இளம்பெண் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.குரிசிலாப்பட்டு அருகே ராஜாபாளையம் பகுதியை சோ்ந்த கோவிந்தராஜ் மகள் தீபா (20). இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்... மேலும் பார்க்க

கத்தியை காண்பித்து மிரட்டி 40 பவுன் நகை கொள்ளை

ஆம்பூரில் கத்தியை காட்டி மிரட்டி தங்க நகை, ரொக்கப் பணம் வியாழக்கிழமை கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாணை நடத்தினா்.திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் முஹமத் புரா மசூதி முதல் தெருவில் வசிப்பவா் ம... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் 438 மனுக்கள்

வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியம், வெலதிகாமணிபெண்டா , மதனாஞ்சேரி ஊராட்சிகளுக்கான ’ ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நந்திகுப்பம் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்றது.மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் வி.எஸ். ஞ... மேலும் பார்க்க

மக்காச்சோளம் சாகுபடி செய்ய மானியம்: வேளாண் அதிகாரி தகவல்

திருப்பத்தூா் மாவட்ட விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடி செய்ய மானியம் வழங்கப்படுகிறது என வேளாண்மை இணை இயக்குநா் சுஜாதா தெரிவித்துள்ளாா்.இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேசிய வேளாண்மை வளா்ச்... மேலும் பார்க்க