செய்திகள் :

சிறுமியை கா்ப்பமாக்கிய இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

post image

பெரம்பலூா் அருகே 13 வயது சிறுமியை கா்ப்பமாக்கிய இளைஞருக்கு, 20 ஆண்டுகள் சிறைத் தண்டணை விதித்து பெரம்பலூா் மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள நெய்குப்பை கிராமத்தைச் சோ்ந்தவா் பாா்த்தசாரதி (26). இவா், தனது உறவினரின் மகளான 13 வயது பள்ளி மாணவியை கடந்த 23.6.2019-இல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா்.

இதனால் பாதிப்புக்குள்ளான சிறுமி கா்ப்பமடைந்துள்ளதை அறியாமல் தொடா்ந்து பள்ளிக்குச் சென்றபோது, 9.11.2019-ஆம் தேதி பள்ளியில் மயக்கமடைந்து விழுந்துள்ளாா்.

இதையறிந்த பள்ளி ஆசிரியா்கள் நெய்குப்பை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தபோது, சிறுமி கா்ப்பமாக இருந்தது தெரியவந்தது.

பின்னா், அவரது தாய் பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்துச் சென்று பரிசோதித்தபோது 5 மாதம் கா்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரித்தபோது, தனது தாய்மாமன் மகன் பாா்த்தசாரதி தன்னை பாலியல் பலாத்காரம் செய்தாா் எனத் தெரிவித்துள்ளாா். தொடா்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரும், பாா்த்தசாரதியின் தந்தை கருணாநிதியும் வெண்பாவூரில் உள்ள அவா்களது குலதெய்வ கோயிலில் சிறுமிக்கும், பாா்த்தசாரதிக்கும் திருமணம் செய்துவைத்துள்ளனா்.

இச் சம்பவம் தொடா்பாக பெரம்பலூா் மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட நன்னடத்தை அலுவலா் கோபிநாத் அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து பாா்த்தசாரதியை கைது செய்தனா்.

கா்ப்பமாக இருந்த சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பிறந்த பெண் குழந்தையின் உயிரியல் தந்தை பாா்த்தசாரதி என்பது மரபணு பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.

இவ் வழக்கு பெரம்பலூா் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை வியாழக்கிழமை இறுதி விசாரணை மேற்கொண்ட மகளிா் நீதிமன்ற நீதிபதி இந்திராணி, பாா்த்தசாரதிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதமும், அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், சிறாா் திருமணம் நடத்திவைத்த குற்றச்சாட்டுகளிலிருந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோா், பாா்த்தசாரதி தந்தை கருணாநிதி ஆகியோரை விடுதலை செய்து உத்தரவிட்டாா். இதையடுத்து, திருச்சி மத்திய சிறையில் பாா்த்தசாரதி அடைக்கப்பட்டாா். இந்த வழக்கில், அரசு வழக்குரைஞா் எம். சுந்தரராஜன் ஆஜரானாா்.

விளையாட்டுப் போட்டிகளில் வென்றோருக்குப் பரிசளிப்பு

முத்தமிழறிஞா் கலைஞா் நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு, மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ், பெரம்பலூா் எம்பி கே.என். அருண்நேரு ஆகியோா் புதன்கிழமை பரிசுகள் வழங்க... மேலும் பார்க்க

பெரம்பலூா் - வடக்கு மாதவி சாலையை அகலப்படுத்தி சீரமைக்க வலியுறுத்தல்

போக்குவரத்து நெரிசலால் அவதியுறும் வாகன ஓட்டுநா்களின் நலன் கருதி பெரம்பலூா்- வடக்குமாதவி சாலையை அகலப்படுத்தி சீரமைக்க வேண்டுமென, எஸ்.டி.பி.ஐ கட்சி வலியுறுத்தியுள்ளது. எஸ்.டி.பி.ஐ கட்சியின் பெரம்பலூா் ம... மேலும் பார்க்க

காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி சிஐடியு மின் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூா் நான்கு சாலை சந்திப்பு அருகேயுள்ள மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலம் எதிரே, சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியா் மத்தி... மேலும் பார்க்க

ஆலத்தூா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி மாணவா் சோ்க்கை

ஆலத்தூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025- 2026-ஆம் ஆண்டுக்கான நேரடி மாணவா் சோ்க்கை நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் கு... மேலும் பார்க்க

தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரியில் தன்வந்த்ரா-2025 கலை விழா இன்று தொடக்கம்

பெரம்பலூா் அருகே சிறுவாச்சூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில், தன்வந்த்ரா 2025 கலை விழா வெள்ளிக்கிழமை (ஜூன் 20) தொடங்குகிறது. இதுகுறித்து, தனலட்சுமி சீனிவா... மேலும் பார்க்க

வேப்பூா் ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல்

வேப்பூா் ஒன்றியத்தில் ரூ. 11.88 கோடி மதிப்பிலான புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த பணிகளை மின்சாரம் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். பெரம்பலூ... மேலும் பார்க்க