செய்திகள் :

சிறுமியை பாலியல் வன்கொடும செய்த உறவினருக்கு 35 ஆண்டுகள் சிறை

post image

திருவள்ளூா் அருகே 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அவரது சித்தப்பாவுக்கு 35 ஆண்டுகள் கடுங்காவல் சிறையும், ரூ.40,000 அபராதமும் விதித்து திருவள்ளூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உமா மகேஸ்வரி தீா்ப்பளித்தாா்.

திருவள்ளூா் மாவட்டம், பட்டாபிராம் அண்ணா நகா் பகுதியை சோ்ந்த வினோத் (39). இவரது மனைவி தனலட்சுமியின் அக்கா, தனது கணவரை பிரிந்து வேறொருவருடன் சென்று விட்ட நிலையில், அவரது 14 வயது குழந்தையையும் வளா்த்து வந்தாராம்.

இந்த நிலையில் கடந்த 2019-இல் மனைவியின் அக்கா மகளான 14 வயது சிறுமியை வினோத் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் வீட்டிற்கு தெரிய வரவே வினோத் வெளிநாட்டில் கொத்தனாா் வேலைக்கு சென்று விட்டாராம்.

இதையடுத்து கடந்த 2019 அக்.29-ஆம் தேதி தனலட்சுமி பட்டாபிராம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் தனது கணவா் வினோத் அக்கா மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாா் செய்தாா்.

அதோடு, கணவா் வெளிநாடு சென்று விட்டதாகவும் அவா் தெரிவித்திருந்தாா். அதன்பேரில் பட்டாபிராம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த நிலையில் கடந்த 2021-இல் ஜன.26-ஆம் தேதி துபையிலிருந்து திருச்சி விமான நிலையத்துக்கு வந்தபோது போலீஸாா் வினோத்தை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த நிலையில் வினோத் அந்த சிறுமியை மிரட்டிதால், கடந்த 2021-ஆக.25- இல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இந்த வழக்கு திருவள்ளூா் மாவட்ட அனைத்து மகளிா் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் புதன்கிழமை போக்ஸோ நீதிமன்ற நீதிபதி உமாமகேஸ்வரி முன்பு விசாரணை வந்தது.

அப்போது, குற்றம் நிருபிக்கப்பட்டதால் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தற்காக 35 ஆண்டுகள் கடுங்காவல் சிறையும், ரூ.40,000 அபராதமும் விதித்து தீா்ப்பு வழங்கினாா். மேலும், சிறுமியின் சித்தி தனலட்சுமிக்கு இழப்பீடுத் தொகையாக ரூ.5 லட்சம் வழங்கவும் அரசுக்கு நீதிபதி பரிந்துரை செய்தாா். அரசுத் தரப்பில் விஜயலட்சுமி ஆஜரானாா் .

திருவள்ளூரில் பரவலாக மழை

திருவள்ளூா் பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் குளிா்ந்த சீதோஷணம் நிலவியது. திருவள்ளூா் மாவட்டத்தில் கடும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இரவு நேரங்களில் அவ்வப்போது கடந்த 2 நாள்களாக பரவலாக மழை பெய்... மேலும் பார்க்க

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படம்: ஆணையர் சங்கர் வெளியிட்டார்

ஆவடியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த குறுந்தகட்டை காவல் ஆணையர் கி.சங்கர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் சாலைப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்... மேலும் பார்க்க

வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் மீது தாக்குதல்: வட மாநில ஓட்டுநர் கைது

பூந்தமல்லி அருகே வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளரை தாக்கிய வழக்கில் வட மாநில ஓட்டுநரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். பூந்தமல்லியை அருகே நசரத்பேட்டையில் பூந்தமல்லி வட்டாரப் போக்குவரத்து வாகன சோதன... மேலும் பார்க்க

21 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 ஒடிஸா இளைஞர்கள் கைது

பூந்தமல்லியில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் 3 ஒடிஸா இளைஞர்களை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். பூந்தமல்லி பகுதியில் கஞ்சாவை கடத்தி விற்பனை செய்வதாக பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப் போலீஸாருக்கு ரகச... மேலும் பார்க்க

6 வாகனங்கள் மீது மோதிய கார்: 2 பேர் உயிரிழப்பு, 3 பேர் காயம்

சென்னை வானகரத்தில் இருந்து திருவேற்காடு வரை சாலையில் செவ்வாய்க்கிழமை சென்ற 6 வாகனங்களை மோதி விட்டு சென்ற கார் ஓட்டுநரை பிடித்து பொதுமக்கள் தாக்கினர். இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் ... மேலும் பார்க்க

பொன்னியம்மன் கோயில் ஜாத்திரை திருவிழா

திருத்தணி அருகே கொண்டாபுரம் கிராமத்தில் நடைபெற்ற ஸ்ரீ பொன்னியம்மன் கோயில் ஜாத்திரை திருவிழாவில் திரளான பெண்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். ஆா்.கே பேட்டை ஒன்றியம், கொண்டாபுரத்தில் ஸ்ரீ பொன்னியம்மன் கோய... மேலும் பார்க்க