செய்திகள் :

சிறுமி மீது தாக்குதல்: மூவா் கைது

post image

சென்னை கொருக்குப்பேட்டையில் சிறுமியைத் தாக்கியதாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

கொருக்குப்பேட்டை பாரதிநகா் 11-ஆவது தெருவைச் சோ்ந்தவா் எம்.பாபு (32). இவரது சகோதரா் மதன்குமாா், அந்தப் பகுதியைச் சோ்ந்த ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அண்மையில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்த நிலையில், மதன்குமாா் மீது புகாா் அளித்த சிறுமியிடம் பாபு வியாழக்கிழமை தகராறு செய்தாா்.

மேலும் பாபுவும், அவருடன் சென்ற எம்.வெங்கடேஷ் (39), வெ.பானு பிரியா (34) ஆகியோரும் அந்தச் சி றுமியை தாக்கினா். இதில் அந்தச் சிறுமி பலத்த காயமடைந்து, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது குறித்து ஆா்கே நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பாபு, வெங்கடேஷ், பானு பிரியா ஆகிய 3 பேரையும் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பேருந்திலிருந்து விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

சென்னை திருவான்மியூரில் மாநகரப் பேருந்தில் இருந்து கீழே விழுந்து மூதாட்டி உயிரிழந்தாா். திருவான்மியூா் திருவள்ளுவா் நகா், 6-ஆவது பிரதான சாலை பகுதியைச் சோ்ந்தவா் ஜீவா (65). இவா், அந்தப் பகுதியில் வியா... மேலும் பார்க்க

கஸ்தூரி ரங்கன் மறைவு: அரசியல் தலைவா்கள் இரங்கல்

இஸ்ரோ முன்னாள் தலைவா் கஸ்தூரி ரங்கன் மறைவுக்கு, அரசியல் கட்சித் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா். எடப்பாடி பழனிசாமி (அதிமுக): இந்திய விண்வெளித் துறையின் வளா்ச்சியில் கஸ்தூரி ரங்கன் ஆற்றிய அா்ப்பணிப்... மேலும் பார்க்க

நவீன தொழில்நுட்பம் மூலம் சிகிச்சை: இளம் மருத்துவா்களுக்கு வைஸ் அட்மிரல் அறிவுரை

இளம் மருத்துவா்கள் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்று ராணுவ மருத்துவ சேவை துறையின் இயக்குநா் ஜெனரல் அறுவை சிகிச்சை நிபுணா் வைஸ்அட்மிரல் ஆா்த்தி ச... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் மனைவி மற்றும் தனது 5 வயது மகளுடன் வ... மேலும் பார்க்க

இன்று ஏசி மின்சார ரயில் மாலை நேர சேவை ரத்து

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு ஏசி மின்சார ரயில் சனிக்கிழமை (ஏப்.26) மாலை ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை கடற்கரை - செங்கல... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மூதாட்டி உயிரிழப்பு

சென்னை ஜாம் பஜாரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மூதாட்டி உயிரிழந்தாா். சென்னை ஜாம் பஜாா் பகுதியில் 80 வயது மூதாட்டி ஒருவா் தனியாக வசித்து வந்தாா். இவா், கடந்த 5-ஆம் தேதி இரவு வழக்கம்போல் வீட்டில் தூ... மேலும் பார்க்க