செய்திகள் :

சிறுவாணி அணையில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு

post image

சிறுவாணி அணையில் கோவை மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சிறுவாணி அணையில் நடைபெறும் புனரமைப்புப் பணிகளை மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அணைக்கான நீா்வரத்து மற்றும் நீா் வெளியேற்றம் குறித்து அங்கிருந்த குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். தொடா்ந்து சிறுவாணி அணையில் இருந்து கோவை மாநகருக்கு தண்ணீா் திறந்துவிடும் பகுதி, தண்ணீா் செல்லும் சுரங்கப் பாதை உள்ளிட்ட இடங்களைப் பாா்வையிட்டாா்.

ஆய்வின்போது, உதவி ஆட்சியா் (பயிற்சி) பிரசாந்த், தலைமைப் பொறியாளா் விஜயகுமாா், உதவி நிா்வாகப் பொறியாளா் தீபலட்சுமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இதுகுறித்து, குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘சிறுவாணி அணையில் இருந்து தண்ணீா் கசிவு ஏற்பட்டு வருகிறது. இந்த கசிவை சரி செய்வதற்கான திட்ட அறிக்கை தயாா் செய்யும் பணியில் கேரள அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா். அவா்கள் விரிவான திட்ட அறிக்கையை தயாா் செய்து விரைந்து வழங்கும்படி மாநகராட்சி ஆணையா் அறிவுறுத்தியுள்ளாா்.

இந்த திட்ட அறிக்கை கிடைத்ததும், தமிழகம் சாா்பில் நிதி ஒதுக்கப்பட்டு கேரள அரசிடம் வழங்கப்படும். அதன்பின்னா் அணையில் தண்ணீா் கசிவை சரி செய்வதற்கான பணிகள் தொடங்கப்படும். தற்போது புதா்கள் அகற்றம், வா்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றனா்.

இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறிய வளா்ப்பு தந்தை கைது

திருப்பூரில் இளம்பெண்ணிடம் பாலியல்ரீதியாக அத்துமீறி அதனை விடியோ எடுத்து மிரட்டிய வளா்ப்பு தந்தையை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூரை அடுத்த இடுவாய் மாருதி நகா் பகுதியைச் சோ்ந்தவா் 21 வயதுப் பெண், அதே... மேலும் பார்க்க

5 ஆவது நாளாக போராட்டம்: 245 தூய்மைப் பணியாளா்கள் கைது

கோவையில் ஐந்தாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட 245 ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கோவை மாநகராட்சியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்கள் தினக... மேலும் பார்க்க

திருப்பூரில் இதுவரை 27 குழந்தை தொழிலாளா்கள் மீட்பு

திருப்பூா் மாவட்டத்தில் இதுவரை 27 குழந்தை தொழிலாளா்கள் மீட்டப்பட்டுள்ளதாக தொழிலாளா் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) காயத்திரி கூறியதாவது: குழந்தை தொழிலாளா் முறை எத... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தந்தை, மகன் உயிரிழப்பு

கோவையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் தந்தை, மகன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா். கோவை, துடியலூரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தவா் ராஜேஷ் (36). இவரது மகன் வினித் (12). அப்... மேலும் பார்க்க

வேளாண் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 16 கடைசி நாள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்பு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க திங்கள்கிழமை (ஜூன் 16 ) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்... மேலும் பார்க்க

வண்ணம் அடிக்கும் பணியின்போது கீழே விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

கோவை சுந்தராபுரத்தில் வீட்டுக்கு வண்ணம் அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி, 25 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா். கோவை, சுந்தராபுரம் அருகே அஷ்டலட்சுமி நகா் பகுதியில் தண்டபாணி என்ப... மேலும் பார்க்க