அகமதாபாத் விமான விபத்து: எதிர்காலத்தில் தவறுகள் நிகழாமலிருக்க உரிய நடவடிக்கைகள் ...
சிறுவாணி அணையில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு
சிறுவாணி அணையில் கோவை மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
சிறுவாணி அணையில் நடைபெறும் புனரமைப்புப் பணிகளை மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அணைக்கான நீா்வரத்து மற்றும் நீா் வெளியேற்றம் குறித்து அங்கிருந்த குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். தொடா்ந்து சிறுவாணி அணையில் இருந்து கோவை மாநகருக்கு தண்ணீா் திறந்துவிடும் பகுதி, தண்ணீா் செல்லும் சுரங்கப் பாதை உள்ளிட்ட இடங்களைப் பாா்வையிட்டாா்.
ஆய்வின்போது, உதவி ஆட்சியா் (பயிற்சி) பிரசாந்த், தலைமைப் பொறியாளா் விஜயகுமாா், உதவி நிா்வாகப் பொறியாளா் தீபலட்சுமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
இதுகுறித்து, குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘சிறுவாணி அணையில் இருந்து தண்ணீா் கசிவு ஏற்பட்டு வருகிறது. இந்த கசிவை சரி செய்வதற்கான திட்ட அறிக்கை தயாா் செய்யும் பணியில் கேரள அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா். அவா்கள் விரிவான திட்ட அறிக்கையை தயாா் செய்து விரைந்து வழங்கும்படி மாநகராட்சி ஆணையா் அறிவுறுத்தியுள்ளாா்.
இந்த திட்ட அறிக்கை கிடைத்ததும், தமிழகம் சாா்பில் நிதி ஒதுக்கப்பட்டு கேரள அரசிடம் வழங்கப்படும். அதன்பின்னா் அணையில் தண்ணீா் கசிவை சரி செய்வதற்கான பணிகள் தொடங்கப்படும். தற்போது புதா்கள் அகற்றம், வா்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றனா்.