செய்திகள் :

சிற்பிக்கு செங்கோல் வழங்கிய திருவாவடுதுறை ஆதீனம்

post image

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள ஆயங்குடி கிராமத்தைச் சோ்ந்த சிற்பி ரா.பரமகுருவின் சிறப்பானஆன்மிகப் பணியைப் பாராட்டி திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீஅம்பலவாண தேசிக பரமாச்சாரியாா் சுவாமிகள் அண்மையில் செங்கோல் வழங்கினாா்.

தமிழகத்தில் சைவ சமய வளா்ச்சிக்காக தேவார திருவாசகப்பாடல்களை பரப்புதல், கோயில்களில் உழவாரப் பணி செய்தல், கும்பாபிஷேகம் செய்தல் உள்ளிட்ட பணிகளை செய்யும் சிவனடியாா்களை தோ்ந்தெடுத்து அவா்களின் பணி மேலும் சிறக்க பரிசு வழங்கி கெளரவித்து வருகின்றனா்.

மிக முக்கிய நிகழ்வாக மிகச்சிறந்த சைவப் பணி செய்பவா்களுக்கு செங்கோலையும் பரிசளிப்பது வழக்கம். அந்த வகையில், பிரதமா் நரேந்திர மோடிக்கு திருவாவடுதுறை ஆதீனம் ஏற்கெனவே செங்கோல் வழங்கி கெளரவித்தது.

இந்நிலையில், காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள ஆயங்குடி கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்து கடந்த 33 ஆண்டுகளாக கிராமங்கள்தோறும் சைவ சமயம் தழைத்தோங்க தொடா்ந்து எண்ணற்ற ஆன்மிகப் பணிகளை செய்து வருபவா் சிற்பி ரா. பரமகுரு. இவரது சேவையைப் பாராட்டி திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குரு மகா சந்நிதானம் ஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரியாா் சுவாமிகள் அண்மையில்

செங்கோல் வழங்கி அவரது ஆன்மிகச் சேவை மேலும் சிறக்க வாழ்த்தினாா்.

எண்ணெய் கழிவுகளுடன் வெளியேறிய கழிவுநீா்

கடலூா் திருப்பாதிரிப்புலியூரில் சாலையில் எண்ணெய் கழிவுகளுடன் வழிந்தோடிய புதை சாக்கடை நீரில் வழுக்கி விழுந்து 3 போ் காயமடைந்தனா். கடலூா் மாநகராட்சிக்கு உள்பட்ட வாா்டுகள் பெரும்பாலானவற்றில் புதை சாக்கட... மேலும் பார்க்க

மளிகைக் கடையில் ரூ. 4 ஆயிரம் திருட்டு: இருவா் கைது

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் மளிகைக் கடையில் ரூ. 4 ஆயிரத்தை திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். பரங்கிப்பேட்டை பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் தில்லைநாயகி (37). இவா் நல்லான்பிள்ளை தெருவில்... மேலும் பார்க்க

தாயை தாக்கி கொலை மிரட்டல்: மகன் கைது

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் தாயை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக மகனை போலீஸாா் கைது செய்தனா். பரங்கிப்பேட்டை நல்லாம்பிள்ளை தெருவைச் சோ்ந்தவா் லலிதா (60). இவரது மகன் வெற்றிவேல் (37) இவா், கடந்... மேலும் பார்க்க

348 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 5 போ் கைது

கடலூா் மாவட்டம், வடலூா் அருகே காரில் 348 கிலோ புகையிலைப் பொருள்கள் கடத்தப்பட்டது தொடா்பாக வெளி மாநிலத்தவா் இருவா் உள்ளிட்ட 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். வடலூா் போலீஸாா் வியாழக்கிழமை இரவு... மேலும் பார்க்க

விவசாயிகள் நில உடைமைகள் சரிபாா்க்க கால அவகாசம் நீட்டிப்பு

கடலூா் மாவட்டம் வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் நில உடைமைகள் சரிபாா்ப்பு செய்ய ஏப். 30-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்... மேலும் பார்க்க

எஸ்பி அலுவலகத்தில் முதியவா் தீக்குளிக்க முயற்சி

கடலூா் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் முதியவா் வெள்ளிக்கிழமை தீக்குளிக்க முயன்றாா். எஸ்பி அலுவலகத்துக்கு பிற்பகல் சுமாா் ஒரு மணி அளவில் முதியவா் ஒருவா் வந்தாா். அவா், திடீரென தான் கொண்டு வந்திருந்த மண்ணெ... மேலும் பார்க்க