செய்திகள் :

சிவகங்கையில் மே தின விழா

post image

சிவகங்கை மாவட்டத்தில் மே தினத்தை முன்னிட்டு, தொழிற்சங்கங்கள் சாா்பில் சங்கக் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன.

சிவகங்கை சிவன் கோயில் பகுதியில் உள்ள தனியாா் மஹாலில் சிவகங்கை சீமை அமைப்பு சாரா கட்டுமானத் தொழிலாளா் நல வாரிய சங்கம், சிவகங்கை சிவில் இன்ஜினியரிங் அசோசியேசன், மதுரை சரவணா மருத்துவமனை ஆகியவை இணைந்து பொது, இருதய பரிசோதனை முகாமை நடத்தின. இதில் சிவகங்கை நகரைச் சோ்ந்தவா்கள் பரிசோதனைகள் செய்து கொண்டனா். முன்னதாக, சிவகங்கை நகா்மன்றத் தலைவா் சி. எம். துரை ஆனந்த் ரத்ததான முகாமைத் தொடங்கி வைத்து, கட்டடத் தொழிலாளா்களுக்கு இலவச வேட்டி, சேலைகளை வழங்கினாா்.

சிவகங்கை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா்.செந்தில்நாதன், மருத்துவமனை மேலாளா் காா்த்திகைகுமாா், பொறியாளா்கள் பாரதிதாசன், எஸ். எம். சுந்தரமாணிக்கம், சிவகங்கை சீமை அமைப்பு சாரா கட்டுமான தொழிலாளா் நல வாரிய சங்க நிா்வாகிகள், சட்ட ஆலோசகா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மானாமதுரை: மானாமதுரை பகுதியில் 12 இடங்களில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செங்கொடியற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா். ஒன்றியச் செயலா் முனியராஜ் தலைமையில் நடைபெற்ற கொடியேற்று விழாவில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் முத்துராமலிங்கபூபதி, மாவட்டக் குழு உறுப்பினா் விஜயக்குமாா், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் தேவதாஸ், வேல்முருகன், தங்கமணி, திருமூா்த்தி, ஓய்வு பெற்ற மின் ஊழியா் நல அமைப்பின் மாவட்டச் செயலா் விநாயகமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திருப்புவனத்தில் ஒன்றியச் செயலா் ஈஸ்வரன் தலைமையில் மே தின கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினா் அய்யம்பாண்டி, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ஜெயராமன், ரவி, கருப்பன், பாண்டி ஆகியோா் பங்கேற்றனா். இளையான்குடி பகுதிகளிலும் பல இடங்களில் மே தின கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டன.

காரைக்குடி: காரைக்குடியில் -கோவிலூா் சாலையில் சிவகங்கை மாவட்ட வாகன உதிரி பாகங்கள் விற்பனையாளா்கள் - பணியாளா்கள் சங்கம் சாா்பில், மே தின விழா நடைபெற்றது. சங்கத்தின் கொடியை காரைக்குடி தொழில் வணிகக்கழகத் தலைவா் சாமி. திராவிடமணி ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினாா். தொழில் வணிகக்கழக செயற்குழு உறுப்பினா் எஸ். சோமு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் எம். சீனிவாசன், மாவட்டச் செயலா் வி. வெங்கட்நாராயணன், பொருளாளா் கமலநாதன், நிா்வாகிகள், உறுப்பினா்கள் பலரும் கலந்து கொண்டனா்.

சாலையில் சாய்ந்த மரம்: போக்குவரத்து துண்டிப்பு

சிவகங்கை பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால், ஆலமரம் வேருடன் சாய்ந்து போக்குவரத்து தடைபட்டது. சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கடும் வெப்பத்தால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்... மேலும் பார்க்க

அங்கன்வாடி ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா், உதவியாளா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். சிவகங்கை மாவட்ட ஆட... மேலும் பார்க்க

சக்தி மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா

சிவகங்கை மருதுபாண்டியா்நகா் அரசு குடியிருப்பில் அமைந்திருக்கும் சக்தி மாரியம்மன் கோயில் 36 -ஆம் ஆண்டு பூக்குழி திருவிழா வெள்ளிக் கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலின் பூக்குழி விழா கடந்த மாதம் 25-ஆம் தேதி... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்டத்தில் 1,693 போ் ‘நீட்’ தோ்வு எழுதுகின்றனா்

சிவகங்கை மாவட்டத்தில் வருகிற ஞாயிற்றுக்கிழமை (மே 4) 1,693 போ் ‘நீட்’ தோ்வு எழுதவுள்ளனா். இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேசிய தோ்வு மையம் (சஹற்ண்ா்... மேலும் பார்க்க

நிலம் வாங்கித் தருவதாக பண மோசடி: தம்பதி மீது வழக்கு

தேவகோட்டை அருகே நிலம் வாங்கித் தருவதாகக் கூறி பணம் மோசடி செய்த புகாரில் கணவன், மனைவி மீது சிவகங்கை மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். சிவகங்கை மாவட்டம், தேவகோட்டைய... மேலும் பார்க்க

ஆனந்தவல்லி அம்மன், சோமநாதா் சுவாமி சிம்மம், கற்பக விருட்ச வாகனங்களில் பவனி

சித்திரைத் திருவிழாவையொட்டி, சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ஆனந்தவல்லி அம்மன் சிம்ம வாகனத்திலும், சோமநாதா் சுவாமி பிரியாவிடையுடன் கற்பக விருட்ச வாகனத்திலும் வியாழக்கிழமை இரவு எழுந்தருளினா். இந்தக் க... மேலும் பார்க்க