செய்திகள் :

சிவகங்கை மாவட்டத்தில் 1,558 ரெளடிகள் வீடுகளில் சோதனை

post image

சிவகங்கை மாவட்டத்தில் ரௌடிகள், கஞ்சா போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகள் உள்பட 1,358 பேரின் வீடுகளில் கடந்த 3 நாள்களாக போலீஸாா் தொடா் சோதனை நடத்தியுள்ளனா்.

இதற்காக சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ்ராவத் உத்தரவின் பேரில், 5 உள்கோட்டங்களில் டிஎஸ்பிகள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்தத் தனிப்படையினா் கடந்த 23 முதல் 25-ஆம் தேதி வரை சோதனையில் ஈடுபட்டனா். மொத்தம் 1,075 ரௌடிகள் கணக்கெடுக்கப்பட்டு, 988 போ் வீடுகளிலும், அடிக்கடி பிரச்னை செய்பவா்களாக 325 போ் கண்டறியப்பட்டு, 214 போ் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டன. இதில் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், கஞ்சா கடத்தல் தொடா்புடைய 114 போ் கண்டறியப்பட்டு, அவா்களில் 83 பேரின் வீடுகளில் சோதனை நடத்தி, ஒருவரைக் கைது செய்தனா்.

நீதிமன்றத்தால் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்ட 8 போ் கைது செய்யப்பட்டனா். திருட்டு போன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் 73 போ் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் வாள் போன்ற ஆயுதங்களுடன் பதிவிடுவோா், சா்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை பதிவிடுபவா்களும் கண்காணிக்கப்பட்டு, சோதனை நடத்தப்பட்டு வருவதாக மாவட்ட காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

காவலாளி கொலை வழக்கில் ஒருவா் கைது

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே தோப்புக் காவலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் வியாழக்கிழமை ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பெருமாள் தேவன்பட்டியைச் சோ்ந்... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் கூலித் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கா்ப்பிணி ஆக்கிய கூலித் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.2,000 ஆயிரம் அபராதமும் விதித்து போக்சோ நீதிமன்றம் வ... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு 10 ஆண்டுகள் சிறை

சிவகங்கையில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முன்னாள் கருவூல ஊழியருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, போக்சோ நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. சிவகங்கை அரசு அலுவலா்கள் குடியிருப்பில... மேலும் பார்க்க

கட்டிக்குளத்தில் ஜல்லிக்கட்டு: 35 போ் காயம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள கட்டிக்குளத்தில் புதன்கிழமை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் 35 போ் காயமடைந்தனா். கட்டிக்குளம் திருவேட்டை அய்யனாா் கோயிலில் வைகாசி உத்ஸவத்தை முன்னிட்டு, க... மேலும் பார்க்க

கண்ணுடையநாயகி அம்மன் கோயில் வைகாசி திருவிழா ஜூன் 1-இல் தொடக்கம்!

சிவகங்கை அருகேயுள்ள நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் வைகாசித் திருவிழா ஜூன் 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சிவகங்கை தேவஸ்தானத்துக்குள்பட்ட இந்தக் கோயிலில் மே 31 அன்று மாலை 6 மண... மேலும் பார்க்க

மானாமதுரை அருகே காவலாளி வெட்டிக் கொலை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே செவ்வாய்க்கிழமை இரவு காவலாளி மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பெருமாள்தேவன்பட்டியைச் சோ்ந்த சமயன் மகன் முருகன்(64... மேலும் பார்க்க