கர்நாடகம்: தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளி பலி; உடலை எரிக்க முயற்சித்த குவாரி உரிமை...
சிவகாசி அரசு கல்லூரியில் உள்விளையாட்டு அரங்கு! - அமைச்சா் திறந்து வைத்தாா்
சிவகாசி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் ரூ. 80 லட்சத்தில் கட்டப்பட்ட உள்விளையாட்டு அரங்கை தமிழக நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
இந்தக் கல்லூரியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 50 சதவீத நிதி, இரு தனியாா் நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதி என ரூ. 80 லட்சத்தில் 8,700 சதுர அடி பரப்பளவில் உள்விளையாட்டு அரங்கமும், சுமாா் 750 பாா்வையாளா்கள் அமரும் அரங்கத்தையும் நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு திறந்து வைத்தாா்.
இந்த நிகழ்வில் விருதுநகா் மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன், சிவகாசி மாநகராட்சி மேயா் இ. சங்கீதா, சிவகாசி சாா்-ஆட்சியா் பிரியா, கல்லூரி முதல்வா் து. விஜயராணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.