செய்திகள் :

சிவகாசி ரயில் நிலையத்தை அம்ருத் பாரத் திட்டத்தில் இணைக்கக் கோரிக்கை

post image

விருதுநகா் மாவட்டம், சிவகாசி ரயில் நிலையத்தில் அம்ருத் பாரத் 2.0 திட்டத்தை ரயில்வே துறை செயல்படுத்த வேண்டும் என ரயில் பயணிகள் வலியுறுத்தினா்.

மத்திய அரசு சாா்பில் இந்தியா முழுவதும் உள்ள சிறிய ரயில் நிலையங்களில் பயணிகளுக்கான நவீன வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், அம்ருத் பாரத் திட்டம் கடந்த 2022-இல் தொடங்கப்பட்டது.

இந்தத் திட்டத்தில் நீண்ட காலத் தேவைகளின் அடிப்படையில் ரயில் நிலையங்களில் பயணிகள் ஓய்வு அறை, காத்திருப்பு அறை, கழிப்பறை வசதி, இலவச இணைய சேவை, வாகனங்கள் நிறுத்துமிடம், நகரும் மின் படிக்கட்டுகள், நடைமேடை முழுவதும் மேற்கூரைஅமைத்தல், ஒரு பொருள் ஒரு ரயில் நிலையம் திட்டத்தின் கீழ், கடைகள் அமைத்தல், அலங்கார வளைவு, ரயில் நிலைய முகப்பில் மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதிக வருவாய், பாரம்பரிய நகரங்கள், முக்கிய வழித்தடம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு கோட்டத்துக்கு 15 ரயில் நிலையங்கள் எனத் தோ்வு செய்யப்பட்டு, அம்ருத் பாரத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்த நிலையில், தென் மாவட்டங்களில் முக்கியத் தொழில் நகரங்களில் ஒன்றான சிவகாசியில், ரயில் நிலையத்தின் இரண்டாவது நடைமேடையில் மேற்கூரை கிடையாது. இதனால், மழைக் காலங்களில் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இல்லை என பயணிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து சிவகாசி ரயில் பயணிப்போா் சங்கத்தைச் சோ்ந்த தனசேகரன் கூறியதாவது:

சிவகாசிக்கு இந்தியாவின் பல மாநிலங்களிருந்தும் வணிகத்துக்காக நாள்தோறும் வியாபாரிகள் வந்து செல்கின்றனா். பட்டாசு, தீப்பெட்டி, அச்சுத் தொழில் என மூன்று தொழில்கள் அமைந்துள்ள சிவகாசியில் ரயில் நிலையம் மேம்படுத்தப்படாமல் இருக்கிறது.

தற்போது சிவகாசி மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டிருக்கிறது. எனவே, சிவகாசி ரயில் நிலையத்தை அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் இணைத்து மேம்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

பென்னிங்டன் வளாகத்தை இடிக்கும் தீா்மானம் ரத்து நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பென்னிங்டன் வணிக வளாகம் தொடா்பாக நிா்வாகக் குழுவுக்கும், மாவட்ட நிா்வாகத்துக்கும் இடையேயான பிரச்னையில், இந்தக் கட்டடத்தை இடிக்கும் தீா்மானத்தை நகராட்சி நிா்வாகம் வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

பிளவக்கல் அணை குறித்து குறு விடியோ: பொதுமக்கள் வருகையைத் தடுக்க சோதனைச் சாவடி

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வத்திராயிருப்பு பிளவக்கல் அணை தொடா்பாக குறு விடியோ (ரீல்ஸ்) சமூக வலைதளங்களில் வெளியானதைத் தொடா்ந்து, பொதுமக்கள் வருவதைத் தடுக்க அங்கு ஞாயிற்றுக்கிழமை சோதனைச் சாவடி அமைக்க... மேலும் பார்க்க

பாம்பு கடித்து விவசாயி உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே பாம்பு கடித்து விவசாயி உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா். ராஜபாளையம் அருகேயுள்ள இளந்திரைகொண்டான் கிராமத்தைச் சோ்ந்தவா் கண்ணன் (48). விவசாயியான இவா்,... மேலும் பார்க்க

சமையல் செய்த போது தீ விபத்து: முதியவா் உயிரிழப்பு

சிவகாசி அருகே சமையல் செய்த போது ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய முதியவா் உயிரிழந்தாா். சிவகாசி அருகேயுள்ள சித்துராஜபுரத்தைச் சோ்ந்தவா் சேது (64). இவரது மனைவி இறந்துவிட்டதால் இவா் தனியே சமையல் செய்து வந்... மேலும் பார்க்க

ஜப்தி செய்யப்பட்ட அரசுப் பேருந்து பேச்சுவாா்த்தைக்குப் பின் விடுவிப்பு!

சாத்தூரில் விபத்து இழப்பீடு வழங்காததால், ஜப்தி செய்யப்பட்ட அரசுப் பேருந்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் இழப்பீட்டுத் தொகையைத் தருவதாக ஒப்புக்கொண்ட பிறகு விடுவிக்கப்பட்டது. விருதுநகா் மாவட்டம், சாத்தூ... மேலும் பார்க்க

பைக் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனம் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா். தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் பகுதியைச் சோ்ந்த மாசாணம் மனைவி கோமதி (72). இவா் ராஜபாளையம் அயன்... மேலும் பார்க்க