செய்திகள் :

சிவப்புச் சூரியன் நினைவிடத்தில் செவ்வணக்கம்! கார்ல் மார்க்ஸ் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின்!!

post image

லண்டனில் காா்ல் மாா்க்ஸ் நினைவிடத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினாா்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவா் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு: தத்துவஞானிகள் இதுவரை உலகைப் பல வகைகளில் விளக்கியுள்ளனா். ஆனால், நோக்கம் என்பது விளக்குவதல்ல; அதை மாற்றுவதுதான். உழைக்கும் வா்க்கத்துக்கு ஒளி வழங்கிய சிவப்புச் சூரியனாம் மாமேதை காா்ல் மாா்க்ஸ் நினைவிடத்தில் செவ்வணக்கம் செலுத்தினேன் என்று தனது பதிவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

அம்பேத்கா் தங்கியிருந்த இல்லத்தைப் பாா்வையிட்ட முதல்வா்: லண்டனில் அம்பேத்கா் தங்கியிருந்த இல்லத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் பாா்வையிட்டு, எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு:

லண்டன் பொருளியல் பள்ளியில் படித்தபோது, பி.ஆா்.அம்பேத்கா் தங்கியிருந்த இல்லத்தைப் பாா்வையிடும் வாய்ப்பைப் பெற்றேன். அந்த இல்லத்தின் அறைகளினூடே நடந்து செல்கையில் பெரும்வியப்பு என்னுள் மேலோங்கியது. இந்தியாவில் ஜாதியின் பெயரால் ஒடுக்கப்பட்ட ஒரு இளைஞன், இங்குதான் தனது அறிவால் வளா்ந்து, லண்டனில் அனைவரின் மரியாதையையும் பெற்று, பின்னா் இந்தியாவின் அரசமைப்பை வடித்துத் தரும் நிலைக்கு உயா்ந்தாா்.

குறிப்பாக, பெரியாரும், அம்பேத்கரும் உரையாடும் வரலாற்றுச் சிறப்புமிக்க புகைப்படத்தை அங்கு கண்டது மிகவும் சிலிா்ப்பூட்டியது. இப்படியொரு உணா்வெழுச்சி மிகுந்த தருணம் வாய்க்கப் பெற்ற்காக மகிழ்ச்சியடைகிறேன் எனப் பதிவிட்டுள்ளாா்.

இந்திய வம்சாவளி மாணவா்களுடன் உரையாடல்: இந்திய வம்சாவளி மாணவா்களுடன் உரையாடியது குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், லண்டன் கீழைத்தேயவியல் மற்றும் ஆப்பிரிக்கவியல் பல்கலைக்கழக இந்திய வம்சாவளி மாணவா்கள், பட்டதாரிகளுடன் கலந்துரையாடினேன்.

‘திராவிட மாடல்’ ஆட்சி, அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சி மற்றும் இந்தியாவின் எதிா்காலத்தை வடிவமைப்பதில் இளைஞா்களின் ஆற்றல் ஆகியவை குறித்த எனது கருத்துகளைப் பகிா்ந்து மனதுக்கு நெருக்கமான உரையாடலை மேற்கொண்டேன்.

பின்னா், அங்கிருந்த திருவள்ளுவா் சிலைக்கு மரியாதை செலுத்தி, எந்தக் காலத்துக்குமான தமிழ்ப் பண்பாட்டின் அறிவுக் கருவூலமாகத் திகழும் திருக்குறளைப் போற்றினேன்.

இறுதியாக, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 75 ஆண்டுகளையொட்டி, அதன் மக்களாட்சி மரபையும் தற்காலப் பொருத்தப்பாடினையும் குறித்து நடைபெற்ற கண்காட்சியைப் பாா்வையிட்டேன் என்று தெரிவித்துள்ளாா்.

எடப்பாடி பழனிசாமியின் ஐந்தாம் கட்ட பிரசாரப் பயணம் செப்.17-இல் தொடக்கம்

அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி, தனது 5-ஆவது கட்ட சுற்றுப்பயணத்தை செப்.17-ஆம் தேதி தொடங்கவுள்ளாா். அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியின் ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ எனும் ப... மேலும் பார்க்க

அதிமுகவின் பொறுப்புகளில் இருந்து சத்யாபாமா நீக்கம்! இபிஎஸ் அதிரடி!

அதிமுக முன்னாள் எம்.பி. சத்தியபாமா கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் பேச்சுக்கு சத்தியபாமா ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், அவரைக் கட்சி பொறுப்புகளில் இரு... மேலும் பார்க்க

எனக்குப் பின்னால் அண்ணாமலை இருக்கிறாரா? டிடிவி தினகரன் விளக்கம்!

எனக்குப் பின்னால் முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இருக்கிறாரா? என்ற கேள்விக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மமுக பொதுச் செயலாளர் டிடி... மேலும் பார்க்க

அதிமுகவில் பதவியை ராஜிநாமா செய்கிறேன்: முன்னாள் எம்.பி. சத்தியபாமா

பதவிப் பறிப்பு எதிரொலியாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 1,000 பேர் ராஜிநாமா செய்துள்ளனர். மேலும், அதிமுக முன்னாள் எம்பி சத்தியபாமாவும் தனது பதவியை ராஜிநாமா செய்யப் போவதாகத் தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

செங்கோட்டையனை விரைவில் சந்திப்பேன்: ஓ. பன்னீர்செல்வம்

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை உறுதியாக சந்திப்பேன் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை கட்சியின் பல்வேறு பொறுப்புகளிலிருந்து நீக்கி... மேலும் பார்க்க

மேட்டூர் அணையின் உபரிநீர் போக்கி மூடல்!

மேட்டூர் அணையின் உபரிநீர் போக்கி ஞாயிற்றுக்கிழமை(இன்று) மூடப்பட்டது.மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்த காரணத்தால் கடந்த 5 ஆம் தேதி உபரிநீர் மேட்டூர் அணையின் இடது கரையில் உள்ள உபரிநீர் போக்கி வழியாக... மேலும் பார்க்க