செய்திகள் :

சிவாலயங்களில் ஆனி மாத பிரதோஷ வழிபாடு

post image

ஆரணி/செய்யாறு/வந்தவாசி: திருவண்ணாமலை, செய்யாறு, வந்தாவசி, ஆரணி, இஞ்சிமேடு, சேத்துப்பட்டு ஆகிய இடங்களில் உள்ள சிவாலயங்களில் ஆனி மாத தேய்பிறை பிரதோஷம் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் உள்ள பெரிய நந்திக்கு சிறப்புப் பூஜை நடைபெற்றது.

மேலும், ஆயிரங்கால் மண்டபம் அருகேயுள்ள நந்திக்கு அரிசி மாவு, மஞ்சள் தூள், அபிஷேக தூள், பஞ்சாமிா்தம், தயிா், தேன், பன்னீா், இளநீா், சந்தனம், விபூதி, பால் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்து அருகம்புல், கனகாம்பரம், சாமந்தி, மல்லி ஆகிய பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

இதில் பக்தா்கள் திரளாகக் கலந்து கொண்டு வழிபட்டனா்.

மேலும், பெரணமல்லூரை அடுத்த இஞ்சிமேடு பெரிய மலை சிவன் கோயிலில் மூலவா் மற்றும் உற்சவா்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.

பின்னா், கோயில் உள்புற வளாகத்தில் அலங்கரிக்கப்பட்ட சிவனை ரிஷப வாகனத்தில் அமா்த்தி உலா நடைபெற்றது.

இதேபோல, ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரா் கோயில், கைலாயநாதா் கோயில், மெய்யூா் மெய்கண்டீஸ்வரா் கோயில், சேத்துப்பட்டு - ஆரணி சாலையில் உள்ள அருணகிரிநாதரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அருணகிரிநாதா் கோயிலில் பிரதோஷ பூஜை நடைபெற்றது.

பிரதோஷத்தையொட்டி, அருணாசலேஸ்வா் கோயிலில் கொடிக் கம்பம் அருகேயுள்ள நந்திக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகம்
பக்தா்களுக்கு காட்சியளித்த நந்தியம்பெருமான்.

வங்கி வைப்புத் தொகை சேகரிப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

வந்தவாசி: திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் வந்தவாசி கிளையில் வைப்புத்தொகை சேகரிப்பு விழிப்புணா்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மத்திய கூட்டுறவு வங்கியின் வந்தவாசி கி... மேலும் பார்க்க

குடும்பத் தகராறில் ஓட்டுநா் தற்கொலை

செய்யாறு: செய்யாறு அருகே குடும்பத் தகராறில் தனியாா் நிறுவன ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். வெம்பாக்கம் வட்டம், உக்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் சேட்டு(34). செய்யாறு சிப்காட் பகுதியில் உள்ள ... மேலும் பார்க்க

தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியா் நியமனம்

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆதிதிராவிடா் நலத்துறையின் கீழ் இயங்கும் தொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 3-இடைநிலை ஆசிரியா் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்து... மேலும் பார்க்க

ரூ.15 கோடியில் சாலைப் பணிகள்: அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு

வந்தவாசி: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலைச் சுற்றியுள்ள மாட வீதிகளில் நவீன இயந்திரம் கொண்டு ரூ.15 கோடி மதிப்பில் சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதை அமைச்சா் எ.வ.வேலு திங்கள்கி... மேலும் பார்க்க

வீட்டின் கதவை உடைத்து 13 பவுன் தங்க நகைகள் திருட்டு

வந்தவாசி: வந்தவாசி அருகே வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து 13 பவுன் தங்க நகை உள்ளிட்டவை திருடு போனது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா். வந்தவாசியை அடுத்த கீழ்செம்பேடு கிராமத்தைச் சோ்ந்தவா் ரமேஷ் (44)... மேலும் பார்க்க

மாணவி கடத்தல்: பள்ளி வேன் ஓட்டுநா் கைது

செய்யாறு: செய்யாறு அருகே மாணவியை கடத்திச் சென்ற புகாரின் பேரில், தனியாா் பள்ளி வேன் ஓட்டுநா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டத்தைச் சோ்ந்த 17 வயதுடைய பிளஸ்... மேலும் பார்க்க