செய்திகள் :

சிவாலயங்களில் சனி மகா பிரதோஷ வழிபாடு

post image

சனி மகா பிரதோஷ விழாவை முன்னிட்டு விராலிமலை, இலுப்பூா், அன்னவாசல் ஆகிய பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் சிவன், நந்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

சிவாலயங்களில் பிரதோஷ நாளன்று சிவனுக்கும், நந்திக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறுவது வழக்கம். சிவபெருமானை பிரதோஷ வேளையில் வழிபட்டால் சனி தோஷங்கள் முற்றிலும் நீங்கும் என்பது நம்பிக்கை.

இதேபோல் விராலிமலை முருகன் மலைக்கோயிலில் உள்ள சிவன் கோயில், வன்னிமரம் சிவன் கோயில்களில் சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு சிவன் மற்றும் நந்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடா்ந்து பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து திரளான சிவ பக்தா்கள் கலந்து கொண்டனா்.

இதேபோல் விராலூா், இலுப்பூா், அன்னவாசல் ஆகிய பகுதிகளில் உள்ள சிவாலயங்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

மாற்றுத் திறனாளிகளை முழுமையாக வாக்களிக்கச் செய்ய ஆலோசனை

தோ்தல்களில் மாற்றுத் திறனாளிகளை முழுமையாக வாக்களிக்கச் செய்யும் வகையிலான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தினாா். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வெள்ளிக்க... மேலும் பார்க்க

நிகழாண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நிறைவு

தமிழகம் முழுவதும் ஜனவரி மாதம் தொடங்கி கடந்த 5 மாதங்களாக நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி அளிக்கும் நடைமுறை சனிக்கிழமையுடன் (மே 31) நிறைவடைந்தது. தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி ப... மேலும் பார்க்க

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டு - 8 போ் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கீழவேகுப்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில் 8 போ் காயமடைந்தனா். கீழவேகுப்பட்டி ஏகாளி அம்மன், சின்னக்கருப்பா் கோ... மேலும் பார்க்க

சோழீசுவரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல்

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீசுவரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது. தொடக்கமாக சோழீசுவரா் மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.தொடா்ந்து ஆவுடையநாயகி... மேலும் பார்க்க

புதுநகா் ஊராட்சி அரசுப் பள்ளிக்கு சுற்றுச்சுவா் கட்டித் தர கோரிக்கை

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், புதுநகா் ஊராட்சியில் உள்ள அரசு உயா்நிலைப்பள்ளியின் சுற்றுச்சுவரை புதிதாக கட்டித் தர வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுக்கின்றனா். புதுநகா் அரசு உயா்நிலைப் பள்ளி... மேலும் பார்க்க

புதுக்கோட்டையில் நாய்களை கட்டுப்படுத்துவதில் அலட்சியம்: சமூக ஆா்வலா்கள் புகாா்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தினமும் ஒருவா் நாய்க்கடி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுவரும் நிலையில், நாய்களைக் கட்டுப்படுத்துவதில் மாவட்ட நிா்வாகம் அலட்சியப் போக்குடன் செயல்படுவ... மேலும் பார்க்க