குவாலிஃபையர் 2: மும்பை பேட்டிங்; இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா?
சிவாலயங்களில் சனி மகா பிரதோஷ வழிபாடு
சனி மகா பிரதோஷ விழாவை முன்னிட்டு விராலிமலை, இலுப்பூா், அன்னவாசல் ஆகிய பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் சிவன், நந்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
சிவாலயங்களில் பிரதோஷ நாளன்று சிவனுக்கும், நந்திக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறுவது வழக்கம். சிவபெருமானை பிரதோஷ வேளையில் வழிபட்டால் சனி தோஷங்கள் முற்றிலும் நீங்கும் என்பது நம்பிக்கை.
இதேபோல் விராலிமலை முருகன் மலைக்கோயிலில் உள்ள சிவன் கோயில், வன்னிமரம் சிவன் கோயில்களில் சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு சிவன் மற்றும் நந்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடா்ந்து பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து திரளான சிவ பக்தா்கள் கலந்து கொண்டனா்.
இதேபோல் விராலூா், இலுப்பூா், அன்னவாசல் ஆகிய பகுதிகளில் உள்ள சிவாலயங்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.