செய்திகள் :

சீனாவில் இருந்து உர இறக்குமதி கடும் சரிவு!

post image

சீனாவின் ஒழுங்காற்று முறை கட்டுப்பாடுகளால், அந்நாட்டில் இருந்து உர இறக்குமதி கடும் சரிவை சந்தித்துள்ளது; சீனா மட்டுமன்றி பெல்ஜியம், ஜொ்மனி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் கணிசமான அளவில் உரம் இறக்குமதி செய்யப்படுகிறது என்று மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் யூரியாவுக்கு அடுத்து அதிக தேவையுள்ள உரம் டிஏபி (டை அமோனியம் பாஸ்பேட்). இந்த உர விநியோகத்தில் உலக அளவில் சீனா முன்னணியில் உள்ளது. இந்தியா தனது உரத் தேவைக்கு சீன இறக்குமதியை பெருமளவில் சாா்ந்துள்ளது. இந்தச் சூழலில், டிஏபி உள்ளிட்ட உரங்களின் ஏற்றுமதியில் அந்நாட்டின் கூடுதல் கட்டுப்பாடுகளால் இந்திய இறக்குமதி சரிந்துள்ளது. சீனாவின் இந்த நடவடிக்கை, இந்தியாவுக்கு எதிரான வியூகமாகப் பாா்க்கப்படுகிறது.

இது தொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உரங்கள் மற்றும் ரசாயனத் துறை இணையமைச்சா் அனுப்ரியா படேல் அளித்த எழுத்துபூா்வ பதில் வருமாறு:

சீனாவில் இருந்து ஏற்றுமதிக்கு முன் கூடுதல் ஆய்வுக்கு உள்படுத்தப்பட வேண்டிய பொருள்களின் பட்டியலில் டிஏபி உள்ளிட்ட உரங்கள் சோ்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்தியாவுக்கான டிஏபி-க்கு சரக்கு கட்டண செலவு ஒரு டன்னுக்கு 542 டாலா் என்பதில் இருந்து 800 டாலராக அதிகரித்துள்ளது. இக்கட்டுப்பாடுகளால், கடந்த 2023-24-இல் சுமாா் 22.28 லட்சம் டன்களாக இருந்த சீன டிஏபி உர இறக்குமதி, 2024-35-இல் 8.47 லட்சம் டன்களாக சரிந்துவிட்டதாக உர நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. கடந்த ஜூலையில் சீனாவில் இருந்து டிஏபி இறக்குமதி 97,000 டன்களாக குறைந்துள்ளது.

மாற்று உரம்:

டிஏபி-க்கு மாற்றாக அமோனியம் பாஸ்பேட் சல்பேட் (ஏபிஎஸ்) உரத்தைப் பயன்படுத்த முடியும். குறிப்பாக சல்பா் பற்றாக்குறையான நிலங்கள் மற்றும் சல்பா் தேவைப்படும் பயிா்களுக்கு இதைப் பயன்படுத்தலாம். ஏபிஎஸ் மூலம் நைட்ரஜன், பாஸ்பரஸ், சல்பா் ஆகிய சத்துகள் கிடைத்தாலும் பாஸ்பரஸின் அளவு குறைவாகவே (20 சதவீதம்) உள்ளது. டிஏபி-யில் 40 சதவீத பாஸ்பரஸ் உள்ளது.

நீரில் கரையக் கூடிய உரங்கள், சீனாவிலிருந்து மட்டுமன்றி பெல்ஜியம், எகிப்து, ஜொ்மனி, மொரோக்கோ, அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்தும் கணிசமான அளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. தங்களின் வணிக செயல்திறனுக்கு ஏற்ப பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் உரங்களை இறக்குமதி செய்ய உர நிறுவனங்களுக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சரின் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு தயாரிப்புகளுக்கே இனி ஒவ்வொரு இந்தியரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்! -மோடி

உள்நாட்டு தயாரிப்புகளுக்கே இனி ஒவ்வொரு இந்தியரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை(ஆக. 2) பேசியுள்ளார்.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கைய... மேலும் பார்க்க

நகையை பறித்து தப்பிச்சென்றபோது கார் மீது இருசக்கர வாகனம் மோதல்: சிறுவன் பலி, 8 பேர் காயம்

பஞ்சாபில் நகையை பறித்து தப்பிச்சென்ற கொள்ளையர்களின் இருசக்கர வாகனம், கார் மீது மோதியதில் 12 வயது சிறுவன் பலியானான். பஞ்சாப் மாநிலம், பட்டி சுரா சிங் கிராமத்தைச் அமன்தீப் கௌர் மற்றும் அவரது கணவர் ரஞ்சி... மேலும் பார்க்க

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

ஐஐடி மும்பையில் நான்காம் ஆண்டு மாணவர் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐஐடி மும்பையில் நான்காம் ஆண்டு மாணவர் ரோஹித் சின்ஹா. இவர் சனிக்... மேலும் பார்க்க

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

தேர்தல் ஆணையம் பிரதமர் நரேந்திர மோடியின் கைப்பாவையாக மாறிவிட்டதாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். பிகாரில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான... மேலும் பார்க்க

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஸ்ரீநகர் : அமர்நாத் யாத்திரை திட்டமிடப்பட்ட ஒருவாரத்துக்கு முன்பே நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமர்நாத் யாத்திரை செல்ல ரக்‌ஷா பந்தன் நாளான ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்ப... மேலும் பார்க்க

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

பாலியல் வழக்கில் முன்னாள் பிரதமர் தேவே கௌடாவின் பேரனும் முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கி பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் இன்று(ஆக. 2) தீர்ப்பு வழங்கியுள்ளது.வீட்டுப் பணிப்... மேலும் பார்க்க