செய்திகள் :

சீனாவில் இருந்து 8 லட்சம் டன் உரம் இறக்குமதி

post image

புது தில்லி: நடப்பு நிதியாண்டில் பிப்ரவரி மாதம் வரை சீனாவிலிருந்து 8.47 லட்சம் டன் உரத்தை இந்தியா இறக்குமதி செய்துள்ளது.

இது குறித்து மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த பிப்ரவரி மாதம் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் 11 மாதங்களில் சீனாவில் இருந்து 8.47 லட்சம் டன் டை-அம்மோனியம் பாஸ்பேட் உரம் இறக்குமதி செய்யப்பட்டது.

இந்த காலகட்டத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த டை-அம்மோனியம் பாஸ்பேட் இறக்குமதியான 44.19 லட்சம் டன்னில் சீனா 19.17 சதவீதம் பங்கு வகிக்கிறது.

2023 ஏப்ரல் முதல் 2024 பிப்ரவரி வரையிலான முந்தைய நிதியாண்டின் முதல் 11 மாதங்களில் இந்தியா மேற்கொண்ட 55.67 லட்சம் டன் டை-அம்மோனியம் பாஸ்பேட் இறக்குமதியில் சீனா 40 சதவீதம் (22.28 லட்சம் டன்கள்) பங்கு வகித்தது என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

யூரியாவுக்குப் பிறகு இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் உரமான டை-அம்மோனியம் பாஸ்பேட், ரஷியா, சவூதி அரேபியா, மொராக்கோ, ஜோா்டான் ஆகிய நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்படுகிறது.

மியூச்சுவல் ஃபண்டு: அதிகரிக்கும் பெண் முதலீட்டாளர்கள்!

மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.முந்தைய தலைமுறையினரைவிட, தற்போதைய தலைமுறையினர் நிதி மேம்பாடு விவகாரத்தில் சிறந்து விளங்குகின்றனர். அந்த வகையில் பங்குச்... மேலும் பார்க்க

குழந்தைக்காக முதியவரின் தலை துண்டித்து கொலை

பிகாரில் குழந்தை பாக்கியம்வேண்டி, முதியவரின் தலையைத் துண்டித்து கொலை செய்த மாந்திரீகரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.பிகாரில் மாநிலம் ஔரங்காபாத் மாவட்டத்தில் யுக்வல் யாதவ் (65) என்பவர் காணாமல் போய்வ... மேலும் பார்க்க

மியான்மரில் நிலநடுக்கம்: தாயகம் திரும்பிய இந்திய பயணிகள்!

மியான்மரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பாங்காக்கில் இருந்து இந்திய பயணிகள் தாயகம் திரும்பினர். மியான்மர் மட்டுமல்லாது தாய்லாந்து, வியட்நாம், சீனாவிலும் உணரப்பட்ட நில அதிர்வுகளால் ம... மேலும் பார்க்க

ஐபில்: பந்தயம் கட்டிய மூவர் கைது!

ஐபிஎல் போட்டி மீது பந்தயம் கட்டிய மூவரை மும்பை காவல்துறையினர் கைது செய்தனர். நவி மும்பையில் சன்பாடா பகுதியில் ஒரு குடியிருப்பு வளாகத்தில், ஐபிஎல் கிரிக்கெட் மீது பந்தயம் கட்டி, ஆன்லைன் சூதாட்டம் நடத்த... மேலும் பார்க்க

மறைந்த சுஷாந்த் சிங்கின் தோழியிடம் மன்னிப்பு கேட்ட முன்னாள் எம்.பி.

மறைந்த முன்னாள் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராக்புத் தற்கொலை வழக்கில், அவரது தோழி ரியா சக்ரவர்த்திக்கு தொடர்பிருப்பதாக ஜீ செய்திகள் நிறுவனம் குற்றம் சாட்டியதற்காக மன்னிப்புகோரி, ஜீ செய்திகள் நிறுவனத... மேலும் பார்க்க

ஆயுதங்களால் மாற்றத்தைக் கொண்டுவர இயலாது: அமித் ஷா

ஆயுதங்களை ஏந்தி வன்முறையில் ஈடுபடுபவர்களால் மாற்றத்தைக் கொண்டுவர முடியாது என்றும் அமைதி, வளர்ச்சி மட்டுமே நல்ல மாற்றமாக இருக்கும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். சத்தீஸ்கரின் சு... மேலும் பார்க்க