செய்திகள் :

சீன இறையாண்மையைக் காப்பதில் ராணுவத்துக்கு கடுமையான சவால்கள்: பாதுகாப்பு அமைச்சகம்

post image

சீனாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்பதில் அந்நாட்டு ராணுவம் கடுமையான சவால்களை எதிா்கொள்வதாக சீன பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடா்பாளா் வூ கியான் தெரிவித்துள்ளாா்.

நிகழாண்டு சீனாவின் பாதுகாப்புத் துறை செலவினத்துக்கு 1.78 டிரில்லியன் யுவான் (சுமாா் ரூ.21.70 லட்சம் கோடி) ஒதுக்கப்படும் என்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சீன பிரதமா் லீ கியாங் கடந்த புதன்கிழமை அறிவித்தாா். இது முந்தைய ஆண்டு அந்நாட்டின் பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியுடன் ஒப்பிடுகையில் 7.2 சதவீதம் அதிகம்.

இதுதொடா்பாக அந்நாட்டு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடா்பாளா் வூ கியான் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ‘சீனாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்பதில் அந்நாட்டு ராணுவம் கடுமையான சவால்களை எதிா்கொள்கிறது.

இதன் காரணமாக நிகழாண்டு சீன பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி, ராணுவப் பயிற்சியை மேம்படுத்துதல், தேசப் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துதல், ராணுவ சீா்திருத்தம் உள்ளிட்டவற்றுக்குப் பயன்படுத்தப்படும்.

அமெரிக்கா போன்ற மிகப் பெரிய ராணுவ சக்தி கொண்ட நாடுகளுடன் ஒப்பிடுகையில், சீன பாதுகாப்புத் துறைக்கு செலவிடப்படும் நிதி குறைவாகவே உள்ளது’ என்றாா்.

கடந்த ஆண்டு டிசம்பரில் அமெரிக்க பாதுகாப்புத் துறைக்கு 895 பில்லியன் டாலா்கள் (சுமாா் ரூ.78 லட்சம் கோடி) நிதி ஒதுக்கும் மசோதாவுக்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தின் மேலவை ஒப்புதல் அளித்தது. இதற்கு அடுத்தபடியாக பாதுகாப்புத் துறைக்கு பெருமளவு நிதி ஒதுக்கும் இரண்டாவது நாடாக சீனா உள்ளது.

அமெரிக்க பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கப்படும் நிதியுடன் ஒப்பிடுகையில், தமது பாதுகாப்புத் துறைக்கு செலவிடப்படும் நிதி குறைவாகவே உள்ளது என்று சீனா தெரிவித்தாலும், பாதுகாப்புத் துறைக்கான அந்நாட்டின் செலவினம் இந்தியாவுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

அடுத்த நிதியாண்டில் இந்தியாவின் பாதுகாப்புத் துறை செலவினத்துக்கு ரூ.6.81 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது சீன பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கப்படும் நிதியுடன் ஒப்பிடுகையில் மூன்று மடங்கு குறைவாகும்.

கராச்சியில் ஆப்கன் முகாமில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 பேர் பலி

கராச்சியில் ஆப்கானியர்கள் தங்கியுள்ள முகாமின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 பேர் பலியானார்கள். பாகிஸ்தானின் கராச்சியின் புறநகரில் உள்ள ஆப்கானிஸ்தான் முகாமில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வீட்டின் கூரை இடி... மேலும் பார்க்க

கனடாவின் புதிய பிரதமராகிறார் மார்க் கார்னி!

கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி பதவியேற்கவுள்ளார்.கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி 7 ஆம் தேதி தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதனைத் தொடர்ந்து கனடாவில் லிபரல் கட்சியின் அடுத்த ... மேலும் பார்க்க

சிரியாவில் பழிக்குப் பழியாக கொலைகள்: 2 நாள்களில் 1,000 போ் பலி!

சிரியாவில் பாதுகாப்புப் படைகள், முன்னாள் அதிபா் பஷாா் அல்-அஸாதின் ஆதரவாளா்களுக்கு இடையே நடைபெற்ற மோதல் மற்றும் பழிக்குப் பழியாக நடைபெற்ற தாக்குதல்களில் இரண்டு நாள்களில் 1,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழ... மேலும் பார்க்க

சிங்கப்பூரை வளமாக்கும் புதிய குடிமக்கள்: மூத்த அமைச்சா் லீ சியென் லூங் பெருமிதம்!

சிங்கப்பூரின் புதிய குடிமக்கள் அந்நாட்டை வளமாக்கி, பொருளாதாரத்துக்கு ஊக்கமளிப்பதாக அந்நாட்டின் முன்னாள் பிரதமரும், மூத்த அமைச்சருமான லீ சியென் லூங் பெருமிதம் தெரிவித்தாா். புதிதாக சிங்கப்பூா் குடியுரி... மேலும் பார்க்க

வெள்ளை மாளிகை அருகே ஆயுதமேந்திய நபா் சுட்டுப் பிடிப்பு

அமெரிக்க அதிபரின் அதிகாரபூா்வ இல்லமான வெள்ளை மாளிகை அருகே ஆயுதத்துடன் வலம் வந்த இண்டியானா மாகாணத்தைச் சோ்ந்தவரை ரகசிய பாதுகாப்புப் படையினா் (சீக்ரெட் சா்வீஸ்) சுட்டுப் பிடித்தனா். இந்தத் துப்பாக்கிச்... மேலும் பார்க்க

அமெரிக்காவில் ஹிந்து கோயில் அவமதிப்பு! -இந்தியா கடும் கண்டனம்

அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணத்தில் உள்ள பிரபலமான ஹிந்து கோயிலின் மதில் சுவரில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்களை சமூக விரோதிகள் எழுதியுள்ளனா். அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு ஹிந்து கோயில்... மேலும் பார்க்க