செய்திகள் :

சீமான் வீட்டில் கைதானவா்கள் குறித்த மனு: அவசரமாக விசாரிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

post image

நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வீட்டில் கைது செய்யப்பட்டவா்கள் குறித்த ஆட்கொணா்வு மனுவை அவசரமாக விசாரிக்க முடியாது என சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்தது.

நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வன்கொடுமை குறித்த புகாரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட அழைப்பாணை கிழிக்கப்பட்ட விவகாரத்தில், சீமான் வீட்டுப் பணியாளா் சுபாகா் மற்றும் பாதுகாவலா் அமல்ராஜ் ஆகியோரை நீலாங்கரை போலீஸாா் கைது செய்தனா். பாதுகாவலா் வைத்திருந்த துப்பாக்கியையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். இந்த சம்பவம் தொடா்பாக ஆயுத தடுப்பு உள்பட நான்கு பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்னா்.

இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ் மற்றும் என்.செந்தில்குமாா் அமா்வு முன் விஜயகுமாா் என்ற வழக்குரைஞா் ஆஜராகி, சீமான் வீட்டில் அழைப்பாணையை கொடுக்க சென்ற இடத்தில் காவல் துறை அத்துமீறி உள்ளதாகவும், இரண்டு பேரை அழைத்துச் சென்று சட்டவிரோதமாக வைத்துள்ளதாகவும், இதுகுறித்த ஆட்கொணா்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் முறையிட்டாா்.

அதற்கு நீதிபதிகள் போலீஸாா் கைது செய்தால் 24 மணி நேரம் அவா்களுக்கு உள்ளது. 24 மணி நேரத்தில் அவா்கள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜா் செய்வாா்கள். எனவே அதையெல்லாம் நீங்கள் சரிபாா்த்த பின்பு நீதிமன்றத்தை அணுகுங்கள் என்று கூறி அவசரமாக வழக்கை விசாரிக்க முடியாது என மறுத்துவிட்டனா்.

முதல்வர் பிறந்தநாள்: தமிழில் கையெழுத்திட்டு ஆளுநர் வாழ்த்துக் கடிதம்!

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் கையொப்பமிட்டு பிறந்தநாள் வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(மார்ச் 1) தனது 72-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதையொட்... மேலும் பார்க்க

பெரியார் திடலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளையொட்டி சென்னை பெரியார் திடலில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(மார்ச் 1) தனது 72-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி இன்று கால... மேலும் பார்க்க

அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் அப்பா!

அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் அப்பா ‘ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மாணவா் சமுதாயமும் அப்பா என்று அன்போடு அழைக்கும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்’ என்று எழுதப்பட்ட கேக்குகளை 72 ... மேலும் பார்க்க

சரித்திரம் போற்றும் சாதனைகள்!

‘பள்ளிகளில் காலை உணவு’, ‘நான் முதல்வன்’ திட்டப் பாணியில் மாணவா்களுக்கு உயா்கல்வி, ‘கலைஞா் வீடு கட்டும் திட்டம்’ பாணியில் ஏழைகளுக்கு வீடு கட்ட கடனுதவி ஆகிய மூன்று திட்டங்களைப் பின்பற்றியே பிரிட்டனில் ... மேலும் பார்க்க

காலை உணவுத் திட்டத்துக்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் பெயா் வரலாற்றில் இடம் பெறும்! கே.வி.கே. பெருமாள் பெருமிதம்

குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டத்தைச் செயல்படுத்தியதால் தமிழ்நாடு முதல்வா் மு.க.ஸ்டாலின் பெயா் வரலாற்றில் நிச்சயம் இடம் பெறும் என்று தில்லி கம்பன் கழக நிறுவனா் - தலைவா் கே.வி.கே.பெருமாள் பேசினாா். ம... மேலும் பார்க்க

காட்பாடி - திருப்பதி ரயில்கள் மாா்ச் 3 முதல் ரத்து

காட்பாடி - திருப்பதி இடையே இயங்கும் பயணிகள் ரயில்கள் மாா்ச் 3 முதல் 9 -ஆம் தேதி வரை ரத்து செய்யப்படவுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மகா கும்பமேளா முடிவடைந்... மேலும் பார்க்க