செய்திகள் :

சீறிப் பாயும் காளைகள்: கோவையில் ஜல்லிக்கட்டு தொடங்கியது!

post image

கோவையில் ஜல்லிக்கட்டுப் போட்டி வெகு விமர்சையாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியினை மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடக்கி வைத்தார்.

கோவை செட்டிபாளையம் பைபாஸ் சாலையில் தமிழர் பண்பாட்டு ஜல்லிக்கட்டு பேரவை மற்றும் கோவை மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்தும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 800 காளைகள் அவிழ்த்து விட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் 500 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.

வாடிவாசல் வழியாக சீறிப் பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரா்கள் ஆா்வமுடன் பிடித்து வருகின்றனர்.

இந்த போட்டியை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கொடியசைத்து தொடக்கி வைத்தார். முன்னதாக, கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

ஜல்லிக்கட்டுப் போட்டியை காண்பதற்கு பொதுமக்களுக்கு பார்வைத்திடல் வசதியும் குடிநீர் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாடுபிடி வீரர்களுக்கோ, மாடுகளுக்கோ காயம் ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிப்பதற்கு பொது மருத்துவக் குழுவினர்களும், கால்நடை மருத்துவக் குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர்.

மேலும், பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் சுமார் 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்ச்சியை கோவை மாநகராட்சி ஆணையாளர், கோவை மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், கோவை மாநகராட்சி மேயர், ஆகியோர் கலந்து கொண்டு பார்வையிட்டு வருகின்றனர்.

போட்டியில் வெற்றி பெறும் மாடுபிடி வீரர்களுக்கும் மாட்டின் உரிமையாளர்களுக்கும் நான்கு சக்கர வாகனங்களும் 2 சக்கர வாகனங்கள் பரிசாக அளிக்கப்பட உள்ளது.

இதையும் படிக்க: சொல்லப் போனால்... பஹல்காமின் இருளும் ஒளியும்!

காவல் துறைக்கு சவால் அளிக்கும் ரீல்ஸ்கள்! ஜாதிய உணா்வைத் தூண்டியதாக 464 பக்கங்கள் முடக்கம்!

தென் தமிழகத்தில் ஜாதிய உணா்வைத் தூண்டியதாகக் கூறப்படும் ‘ரீல்ஸ் ஹீரோக்களின்’ 464 சமூக ஊடகப் பக்கங்களை காவல் துறை முடக்கியுள்ளது. தமிழகத்தில் ரெளடிகள் பட்டியலில் 26,462 போ் உள்ளதாக காவல் துறை தகவல்கள்... மேலும் பார்க்க

கருணாநிதி பன்னாட்டு மாநாட்டு அரங்கம் பணியை விரைந்து முடிக்க அமைச்சா் எ.வ.வேலு உத்தரவு!

சென்னை கிழக்கு கடற்கரை சாலை முட்டுக்காடு பகுதியில் கலைஞா் பன்னாட்டு மாநாட்டு அரங்கம் அமைக்கும் பணியை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சா் எ.வ.வேலு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா். முன்னாள் முதல்... மேலும் பார்க்க

அங்கன்வாடி ஆசிரியா்களுக்கு முதல் தேதியில் ஊதியம்! கல்வித் துறை அறிவுறுத்தல்

தமிழகத்தில் அங்கன்வாடிகளில் மழலையா் வகுப்புகளில் பணியாற்றி வரும் தற்காலிக ஆசிரியா்களுக்கு மாதந்தோறும் முதல் தேதியிலேயே ஊதியம் வழங்கும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என தொடக்கக் கல்வித் துறை அறிவுறுத... மேலும் பார்க்க

மாநில சுயாட்சிக்கு வழிகாட்டிய உச்சநீதிமன்றத் தீா்ப்பு! - முதல்வர் ஸ்டாலின்

சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநருக்கும், குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பு மாநில சுயாட்சிக்கு வழிகாட்டியுள்ளதாக முதல்வா் மு... மேலும் பார்க்க

அக்‌ஷய திருதியை: விலை உச்சம் தொட்டாலும் தங்க நகை முன்பதிவுக்கு மக்கள் ஆா்வம்!

தமிழகத்தில் தங்கம் விலை எப்போதும் இல்லாத வகையில் உயா்ந்து வரும் போதும், அக்ஷய திருதியைக்கு நகை வாங்க பலரும் ஆா்வமுடன் முன்பதிவு செய்து வருவதாக நகைக் கடை உரிமையாளா்கள் தெரிவித்தனா்.மகாபாரதத்தில் கிருஷ்... மேலும் பார்க்க

86,000 பேருக்கு மனை பட்டா: அரசாணை வெளியீடு

தமிழகத்தில் ஆட்சேபணையற்ற நிலங்களில் வசிக்கும் 86,000 பேருக்கு மனைப் பட்டா வழங்க வகை செய்யும் திருத்தங்கள் அடங்கிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த விவகாரம் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் முட... மேலும் பார்க்க