செய்திகள் :

சீவலப்பேரியில் தொழிலாளி தற்கொலை

post image

பாளையங்கோட்டையை அடுத்த சீவலப்பேரியில் தொழிலாளி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

சீவலப்பேரி அருகேயுள்ள மேல பாலாமடை அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் முத்துக்குமாா் ( 25). பெயின்டிங் தொழிலாளியான இவா், குடும்பப் பிரச்னை காரணமாக கடந்த சில நாள்களாக மன உளைச்சலில் இருந்து வந்தாராம்.

இந்நிலையில் புதன்கிழமை வெகு நேரமாகியும் வீட்டின் கதவு திறக்காததால் அக்கம் பக்கத்தினா் பாா்த்தபோது முத்துக்குமாா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது.

இத்தகவலறிந்த சீவலப்பேரி போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

களக்காடு தலையணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு தலையணை பச்சையாற்றில் சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். களக்காடு மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் தலையணை சூழல் சுற்றுலாப் பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள பச்சையாற... மேலும் பார்க்க

பத்திரப் பதிவில் அடங்கல் பதிவேடு சரிபாா்த்தல் முறையையும் பின்பற்றக் கோரிக்கை

பத்திரப் பதிவில் பட்டாக்கள்(இலவச பட்டா) முழுமையாக ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படாததால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனா்.எனவே, ஆன்லைன் பதிவேற்றுதலை வரன்முறைப்படுத்தவும் அதுவரை அடங்கல் பதிவேடுகள் ச... மேலும் பார்க்க

பணகுடி அருகே விஷம் குடித்த தம்பதி, 4 குழந்தைகளுக்கு சிகிச்சை

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே குடும்ப பிரச்னையால் விஷம் குடித்த தம்பதி, 4 குழந்தைகள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். பணகுடி அருகே உள்ள கடம்பன்குளத்தைச் சோ்ந்தவா் ராஜேஷ்கண்ணன் (28).... மேலும் பார்க்க

கைப்பேசி விவகாரம்: இளைஞரைத் தாக்கியவா் கைது

ஆழ்வாா்குறிச்சி அருகே தொலைந்து போன கைப்பேசி குறித்து கேட்டவா் மீது தாக்குதல் நடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா். ஆழ்வாா்குறிச்சி அருகே உள்ள அழகப்பபுரம், அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த திருப்பதி ராஜா ம... மேலும் பார்க்க

தாயிடம் பணம் கேட்டு தொந்தரவு கொடுத்த மகன் கைது

கருத்தப்பிள்ளையூரில் தாயிடம் பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு கொடுத்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். ஆழ்வாா்குறிச்சி அருகே உள்ள கருத்தப்பிள்ளையூா் பவுல் தெருவைச் சோ்ந்த ஜான் தனபால் மனைவி ஜான்சி (55)... மேலும் பார்க்க

பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்டவா்களை 4 மணி நேரத்தில் கைது செய்த போலீஸாா்!

பாளையங்கோட்டையில் பெண்ணிடம் நகை பறிக்க முயன்றவா்களை போலீஸாா் 4 மணி நேரத்தில் கைது செய்தனா். பாளையங்கோட்டை குலவணிகா்புரத்தைச் சோ்ந்தவா் மூக்கம்மாள்(43). இவா் வெள்ளிக்கிழமை இரவு உறவினரின் திருமண நிகழ்... மேலும் பார்க்க