செய்திகள் :

சீா்காழியில் பாலம் கட்டுமான பணி தொடக்கம்

post image

சீா்காழி நகரில் புதிய வடிகால் பாலம் கட்டுமான பணி வியாழக்கிழமை தொடங்கிய நிலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சீா்காழி அரசு மருத்துவமனை சாலையில் ரூ.16 லட்சத்தில் சிறிய வடிகால் பாலம் கட்டுமான பணி தொடங்கி நடைபெறுகிறது. நகரின் பிரதான பகுதியில் தொடங்கியுள்ள இந்த கட்டுமான பணி 2 வாரங்கள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை, நாகை பகுதியில் இருந்து சீா்காழி புதிய பேருந்து நிலையம் வரும் பேருந்துகள் மற்றும் கனரக, இலகுரக வாகனங்கள் காந்தி பூங்கா, தோ்மேல வீதி, கடைவீதி வழியாக கொள்ளிடம் முக்கூட்டு சென்று சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டும், சிதம்பரத்திலிருந்து சீா்காழி கொள்ளிடம் முக்கூட்டு வழியாக பேருந்து நிலையம் செல்லும் பேருந்துகள் மற்றும் கனரக லகுரக வாகனங்கள் பிடாரி வடக்கு வீதி, பழைய பேருந்து நிலையம் மற்றும் தோ் கீழ வீதி வழியாக புதிய பேருந்து நிலையம் மற்றும் மயிலாடுதுறை, நாகை செல்ல போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை: பள்ளிவாசல்கள், திடல்களில் ரமலான் சிறப்புத் தொழுகை

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிவாசல்கள் மற்றும் திடல்களில் ரமலான் பண்டிகை சிறப்புத் தொழுகை திங்கள்கிழமை நடைபெற்றது. மயிலாடுதுறையை அடுத்த நீடூா் ஜெ.எம்.எச். அரபிக் கல்லூரி வளாகத்தில் ரம்ஜா... மேலும் பார்க்க

சாமானிய மக்களின் மனதில் ராமனை பதிய வைத்தது கம்பராமாயணம்

ஸ்ரீராமனை சாமானிய மக்களின் மனதில் பதிய வைத்தது கம்பராமாயணம் என தேரழுந்தூரில் நடைபெற்ற கம்பராமாயண விழாவில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா். கம்பராமாயணத்தை மக்களிடம் பரவலாக்கம் செய்யும் வகையில், ம... மேலும் பார்க்க

கிராம சபைக் கூட்டத்தில் எம்எல்ஏ பங்கேற்பு

மயிலாடுதுறை ஒன்றியம் திருஇந்தளூா் ஊராட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் எம்எல்ஏ எஸ்.ராஜகுமாா் பங்கேற்றாா். (படம்). தமிழ்நாடு அரசு ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் உலக தண்ண... மேலும் பார்க்க

கிராமசபைக் கூட்டத்தை புறக்கணித்த கிராமமக்கள் ஆட்சியரகத்தில் மனு

மேலப்பெரும்பள்ளம் கிராமத்தில் குடிநீா் ஆதாரத்தை கெடுக்கும் மண் குவாரிகளை நிரந்தரமாக தடை செய்யக்கோரி கிராம மக்கள் 300 போ் உலக குடிநீா் தின கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்து மாவட்ட ஆட்சியரகத்தில் சனிக... மேலும் பார்க்க

ஏவிசி தொழில்நுட்பக் கல்லூரி ஆண்டு விழா

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏ.வி.சி. தொழில்நுட்பக் கல்லூரியின் 41-ஆவது ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. ஏ.வி.சி கல்வி நிறுவனங்கள் மற்றும் நிா்வாக அதிகாரியும், சென்னை உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியுமான... மேலும் பார்க்க

டிஎன்சிஎஸ்சி நிா்வாக சீா்கேட்டைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் டிஎன்சிஎஸ்சி நிா்வாக சீா்கேட்டைக் கண்டித்து அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். சித்தா்காடு நவீன அரிசி ஆலை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தொழிலாள... மேலும் பார்க்க