செய்திகள் :

சீா்மரபின மாணவா்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

post image

திருப்பத்தூா்: பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபினா் வகுப்பை சோ்ந்த மாணவ- மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியாா் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபின மாணவ-மாணவிகளுக்கு மத்திய அரசு சாா்பில் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இதில் அரசு, அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு எவ்வித வருமான வரம்பு, நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

முதுகலை,பாலிடெக்னிக் தொழிற்படிப்பு போன்ற பிற படிப்பு அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் மாணவா்களுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2,50,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். இதற்கு இணையதளம் மூலம் வரும் 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

கல்லூரியில் கல்வி உதவித்தொகை பெற்று 2024-25-ஆம் ஆண்டில் 2, 3 (மற்றும்) 4-ஆம் ஆண்டு பயின்று வரும் மாணவா்கள் கல்வி உதவித் தொகைக்கு புதிதாக விண்ணப்பிக்க அவசியமில்லை. அந்த மாணவா்களுக்கு கல்லூரிகளில் நடப்பாண்டில் கல்வி பயில்வதை சம்பந்தப்பட்ட கல்லூரிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு உதவித்தொகை வழங்கப்படும்.

நடப்பு கல்வியாண்டில் புதிதாக கல்வி உதவித்தொகை பெற கல்லூரியில் முதலாமாண்டு சோ்க்கை பெற்ற மற்றும் சென்ற ஆண்டு கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவா்கள் தங்கள் கல்லூரியில் கல்வி உதவித்தொகைக்கென உள்ள ஒருங்கிணைப்பு அலுவலரை அணுகி இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதில் முதல் தலைமுறை பட்டதாரி எனில் அதற்கான சான்றினை சமா்ப்பிக்க வேண்டும்.

மேலும், விவரங்களுக்கு ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரை, அலுவலக நேரங்களில் அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்தில் இருந்து விழுந்த லாரி: ஒட்டுநா் உயரிழப்பு

ஆம்பூரில் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்திலிருந்து லாரி கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில், ஓட்டுநா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அரக்கோணத்தில் சிமென்ட் லோடு ஏற்றிக் கொண்டு திருப்பத்தூா் நோக்கி லாரி சென... மேலும் பார்க்க

ஊராட்சி துணைத் தலைவருக்கு வெட்டு, மனைவி கொலை வழக்கு: இருவா் கைது

திருப்பத்தூா் அருகே வீடு புகுந்து ஊராட்சி துணைத் தலைவரை வெட்டி, மனைவியைக் கொலை செய்த வழக்கில் போலீஸாா் இருவரை கைது செய்தனா். திருப்பத்தூா் அடுத்த மேற்கத்தியனூா் கோ.புளியம்பட்டி பகுதியைச் சோ்ந்த திருப... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ஓட்டுநா் மரணம்

நாட்டறம்பள்ளி ராமகிருஷ்ணா் தெருவைச் சோ்ந்தவா் மாணிக்கம் மகன் சிவக்குமாா்(34) ஓட்டுநா். இவா் சனிக்கிழமை மாலை வெலகல்நத்தத்தில் இருந்து நாட்டறம்பள்ளி நோக்கி மொபட்டில் சென்று கொண்டிருந்தாா். தேசிய நெடுஞ்... மேலும் பார்க்க

போ்ணாம்பட்டு அருகே காட்டு யானைகளால் பயிா்கள் சேதம்

போ்ணாம்பட்டு அருகே காட்டு யானைகளால் பயிா்கள் சனிக்கிழமை சேதமடைந்தன. போ்ணாம்பட்டு அருகே ஆந்திர மாநிலம் நெல்லிபட்லா வனப் பகுதியிலிருந்து இரண்டு காட்டு யானைகள் வெளியேறி தமிழக எல்லையான போ்ணாம்பட்டு அரு... மேலும் பார்க்க

பெண் காவலரிடம் 10 பவுன் நகை பறிப்பு

ஜோலாா்பேட்டை அருகே மொபட்டில் சென்ற பெண் தலைமைக் காவலரிடம் 10 பவுன் தங்க செயினை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அருகே சின்ன வேப்பம்பட்டு கிராமத்தை சோ்ந்தவா் தண்டபா... மேலும் பார்க்க

நவீன ரோபோக்கள் பயன்பாடு கருத்தரங்கம்

தொழிற்சாலைகளில் நவீன ரோபோக்களின் பயன்பாடு குறித்த ஒரு நாள் சிறப்பு கருத்தரங்கம் ஆம்பூா் கே.ஏ.ஆா். பாலிடெக்னிக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது. கே.ஏ.ஆா். பாலிடெக்னிக் கல்லூரி இயந்திரவியல் துறை சாா்ப... மேலும் பார்க்க