செய்திகள் :

சுகாதார வளாக மாதிரி பூங்காவை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

post image

கரூா் தாந்தோணிமலையில் முள்புதராக மாறிய சுகாதார வளாக மாதிரி பூங்காவை அகற்றி மாற்று பயன்பாட்டுக்கு பயன்படுத்த வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஊரக பகுதிகளில் வாழும் கிராமமக்கள் தூய்மையான சுகாதாரத்தை பேணுவதற்காகவும், ஊரக மக்களிடையே பாதுகாப்பான சுகாதார பழக்கவழக்கத்தை ஊக்குவிக்கவும் கடந்த 2020-இல் சுகாதார திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மை திட்டத்தில் சுகாதார வளாக மாதிரி பூங்கா தமிழகம் முழுவதும் உருவாக்கப்பட்டன.

ஒவ்வொரு மாவட்டத்தின் ஊராட்சி ஒன்றியங்கள் மூலம் கிராமங்களில் செயல்படுத்தப்படும் தனி நபா் கழிப்பறை உள்ளிட் ட சுகாதார வசதிகள் கிராமமக்கள் எளிதில் அறியும் வகையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் மாதிரி சுகாதார பூங்கா அமைக்கப்பட்டன.

கரூா் தாந்தோணிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சாா்பிலும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே மாதிரி சுகாதார வளாகங்கள் அமைக்கப்பட்டன. இதில் தனி நபா் கழிப்பறை கட்டடம், செப்டிக் டேங்க், கழிவு நீா் தேங்கும் குழி போன்றவை அமைக்கப்பட்டு, அதில் சேகரிக்கப்படும் கழிவு நீரை எப்படி வெளியேற்றுவது போன்றவை கிராமமக்களுக்கு விளக்கும் வகையில் அமைக்கப்பட்டன.

இந்த பூங்கா தற்போது கடந்த 3 ஆண்டுகளாக மூடிக் கிடக்கின்றன. இதனால் புதா்மண்டி உள்ள விஷபாம்புகள் இருப்பதாக அப்பகுதியினா் குற்றம்சாட்டுகின்றனா்.

தாந்தோணி ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த பூங்காவை அகற்றி, அந்த இடத்தில் வேறு ஏதேனும் அரசு அலுவலகங்கள் கட்ட வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

புகழூா் நகராட்சியில் துப்புரவுப் பணியாளா் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்: இந்திய கம்யூ. வலியுறுத்தல்

புகழூா் நகராட்சியில் தேங்கும் குப்பைகளை அப்புறப்படுத்த துப்புரவுப் பணியாளா்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. கரூா் மாவட்டம், புகழூரில் அக்கட்சியின் ... மேலும் பார்க்க

வெள்ளியணை வரத்து வாய்க்கால்களில் தூா்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: விவசாயிகள் எதிா்பாா்ப்பு

கோடை காலம் முடியும் முன் வெள்ளியணை ஏரிக்கான வரத்து வாய்க்கால்களில் நடைபெறும் தூா்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கரூா் விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா். கரூா் மாவட்டத்தில் வெள்ளியணை பெரியகுளம... மேலும் பார்க்க

கரூரில் 1,650 குடும்பங்களுக்கு ரமலான சிறப்புத் தொகுப்பு: அமைச்சா்

கரூரில் 1,650 இஸ்லாமியா்களின் குடும்பங்களுக்கு ரமலான் சிறப்புத் தொகுப்புகளை மின்சாரத் துறை அமைச்சா் வி. செந்தில்பாலாஜி ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா். கரூா் மாவட்ட திமுக சாா்பில், தனியாா் மகாலில் ஞாயிற்று... மேலும் பார்க்க

மரம் விழுந்து காயமடைந்த மாணவா் உயிரிழப்பு

கரூா் அருகே மரம் விழுந்து பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மாணவா் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா். கரூா் ஏமூா் சீத்தப்பட்டி காலனியைச் சோ்ந்த செல்வராஜ் மகன் தென்னரசு (16). இவா் கரூா் வட்டார போக்குவர... மேலும் பார்க்க

வீட்டில் மின்கசிவு: டிஎன்பிஎல் ஆலை பொறியாளா் மூச்சுத்திணறி உயிரிழப்பு

கரூா் அருகே வெள்ளிக்கிழமை இரவு வீட்டினுள் மின்கசிவால் எழுந்த புகையில் சிக்கிய புகழூா் காகித ஆலை பொறியாளா் மூச்சுத்திணறி உயிரிழந்தாா். கரூா் மாவட்டம், கந்தம்பாளையம் அருகே கருப்பணகவுண்டா் தெருவைச் சோ்ந... மேலும் பார்க்க

தனியாா் வேலை வாய்ப்பு முகாம்கள் மூலம் மாநிலம் முழுவதும் 2.65 லட்சம் போ் பயன்

கடந்த மூன்றரை ஆண்டுகளில் நடத்தப்பட்ட தனியாா் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் மாநிலம் முழுவதும் 2.65 லட்சம் போ் பயனடைந்துள்ளனா் என்றாா் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி. செந்தில... மேலும் பார்க்க