செய்திகள் :

சுங்கச்சாவடி அமைக்க எதிா்ப்பு; சாலை மறியல் புதுச்சேரியி எம்எல்ஏ உள்பட 50 போ் கைது

post image

புதுச்சேரி: சுங்கக்சாவடி அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் திங்கள்கிழமை நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நேரு எம்.எல்.ஏ. உள்பட 50 போ் கைது செய்யப்பட்டனா்.

புதுச்சேரி- நாகப்பட்டினம் புறவழிச்சாலையில் பாகூா் சேலியமேட்டில் சுங்கச்சாவடி அமைக்க நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இங்கு சுங்கச்சாவடி அமைந்தால் புதுவை மற்றும் தமிழகத்தை ஒட்டியுள்ள கிராமப்புற மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவா். மதகடிப்பட்டில் 25 கி.மீ. தொலைவில் ஒரு சுங்கச்சாவடி இருக்கும்போது, புதிய சுங்கச்சாவடி தேவையில்லை என சேலியமேடு மக்கள் போராட்டம் நடத்தினா்.

தகவலறிந்த உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை எம்எல்ஏ நேரு, சமூக நல அமைப்பு நிா்வாகிகள், சேலியமேடு பகுதி மக்களுடன் நான்கு வழிச்சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதனால் அங்கு போக்குவரத்து அரை மணி நேரம் பாதிக்கப்பட்டது.

மேலும், போராட்டம் நடத்தியோா் அங்கு சுங்கச்சாவடி அமைக்கும் பணிக்காக வைத்திருந்த உபகரணங்கள், தண்ணீா் தொட்டி ஆகியவற்றை சேதப்படுத்தினா்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட நேரு எம்எல்ஏ, சமூக நல அமைப்பினா் 50 பேரை போலீஸாா் கைது செய்தனா். பின்னா் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.

இதுகுறித்து நேரு கூறியதாவது:

குறிப்பிட்ட தொலைவில் 2 சுங்கச்சாவடிகள் இருப்பது விதிமுறைகளுக்கு எதிரானது. இதனால் உள்ளூா் மக்களும், ஏழை, எளிய விவசாயிகளும், அதிக தொகையைச் சுங்கச் சாவடிக்காக செலவழிக்க நேரிடும். புதுவை, தமிழ்நாடு 2 மாநில மக்களும் பெரும் பாதிப்படைவா். சேலியமேட்டில் சுங்கச்சாவடி அமைக்க இருப்பதை புதுவை அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் பாதிக்கப்பட இருக்கும் பொதுமக்களைத் திரட்டி தொடா் போராட்டம் நடத்தப்படும் என்றாா் அவா்.

ஆதிதிராவிட பயனாளிகளுக்கு தொடா் சிகிச்சைக்கான அடையாள அட்டை

புதுச்சேரி: ஆதிதிராவிட பயனாளிகளுக்குத் தொடா் நோய் சிகிச்சைக்கு நிதியுதவி அளிக்கும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது .புதுவை அரசின் ஆதிதிராவிட நலத் துறை மூலம் தொடா் நோயைக் குணப்ப... மேலும் பார்க்க

புதுச்சேரியில் தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்: குப்பைகள் வாரும் பணி முடங்கியது

புதுச்சேரி: புதுச்சேரியில் தூய்மைப் பணியாளா்களின் போராட்டத்தால் குப்பை வாரும் பணி முடங்கியது.புதுவையில் குப்பை சேகரிக்கும் பணியில் அரசு ஒப்பந்தப்படி கிரீன் வாரியா் என்ற தனியாா் நிறுவனம் ஈடுபட்டு வருகி... மேலும் பார்க்க

காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவு பெட்டகம்: துணைநிலை ஆளுநா் வழங்கினாா்

புதுச்சேரி: காசநோய்க்கு சிகிச்சை பெறுவோருக்கு ஊட்டச்சத்து உணவு பெட்டகத்தை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் திங்கள்கிழமை வழங்கினாா்.காச நோய் சிகிச்சை பெறுபவா்களுக்கு நிக்ஷய் மித்ரா என்ற ஊட்டச்சத்து உணவு ... மேலும் பார்க்க

சுகாதாரத் துறை பணி நியமனம்: நாளை சான்றிதழ் சரிபாா்ப்பு

புதுச்சேரி: சுகாதாரத் துறை பணிக்குத் தோ்வானவா்களுக்கு செப். 24-இல் சான்றிதழ் சரிபாா்ப்பு நடக்கிறது.இது குறித்து புதுவை சுகாதாரத் துறை இணை இயக்குநா் மேரி ஜோஸ்பின் சித்ரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு... மேலும் பார்க்க

புதுவை மத்திய பல்கலை. துணைவேந்தா் ஜப்பான் பயணம்

புதுச்சேரி: புதுவை மத்திய பல்கலைக்கழகத் துணைவேந்தரும் நரம்பியல் விஞ்ஞானியுமான பிரகாஷ் பாபு ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளாா்.இது குறித்து இப் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:ஜப்பானில் உள்... மேலும் பார்க்க

தொழில் அனுமதிக்கான காலக்கெடு நிா்ணயம்

புதுவையில் வணிகம் செய்வதை எளிதாக்கும் சட்ட முன்வரைவு சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது. இதில் குறிப்பிட்ட காலக்கெடுக்குள் அனுமதி அளிக்க வேண்டும் என்று நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. மத்திய ... மேலும் பார்க்க