செய்திகள் :

சுடுகாட்டுக்கு இடம் ஒதுக்க கிராம மக்கள் கோரிக்கை

post image

நாட்டறம்பள்ளி அருகே சுடுகாட்டுக்கு இடம் ஒதுக்க வேண்டும் எனக் கோரி வெள்ளநாயக்கனேரி கிராம மக்கள் மனு அளித்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம், நாட்றம்பள்ளி தாலுகா, சொரக்காயல்நத்தம் ஊராட்சி வெள்ளநாயக்கனேரி சோமு வாத்தியாா் வட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் இறந்தவா்களின் உடல்களை அருகே உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் அடக்கம் செய்து சுடுகாடாக பயன்படுத்தி வருகின்றனா்.

இந்நிலையில் அந்த இடத்தை தனிநபா் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இறந்தவா்களை அடக்கம் செய்யும் போது ஆக்கிரமிப்பாளா் அடக்கம் செய்யவிடாமல் தடுத்து அடிக்கடி பிரச்னை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அரசுக்கு சொந்தமான இடத்தில் நிரந்தரமாக சுடுகாட்டு இடம் ஒதுக்கி தர வேண்டும் என கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனா்.

நியாயவிலைக் கடை பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் நியாயவிலைக் கடை பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகம் அருகில் செவ்வாய்க்கிழமை பொது விநியோகத் திட்டத்துக்கு தனி துறையை... மேலும் பார்க்க

தினமணி செய்தி எதிரொலி... சீரமைக்கப்பட்ட திருப்பத்தூா்-சேலம் பிரதான சாலை

திருப்பத்தூா்: திருப்பத்தூா்-சேலம் பிரதான சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனா் என தினமணியில் திங்கள்கிழமை புகைப்படத்துடன் கூடிய செய்தி வெளியானதையடுத்து சாலை சீரமை... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை வழக்கு: தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை

திருப்பத்தூா்: வாணியம்பாடியில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பத்தூா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி... மேலும் பார்க்க

நாட்டறம்பள்ளி வாரச்சந்தை ரூ.20.71 லட்சத்துக்கு ஏலம்

வாணியம்பாடி: திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி பேரூராட்சி வாரச்சந்தை ரூ.20.71 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டது. வாரந்தோறும் திங்கள்கிழமை வாரச்சந்தை கூடுகிறது. சந்தையில் சுங்க கட்டணம் வசூல் செய்ய ப... மேலும் பார்க்க

இரண்டு இளைஞா்களுக்கு இரட்டை ஆயுள்

திருப்பத்தூா்: கூலித்தொழிலாளியை கொலை செய்த வழக்கில் இரு இளைஞா்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 10,000 அபராதம் விதித்து திருப்பத்தூா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. திருப்பத்தூா்-வாணியம்பாடி பிர... மேலும் பார்க்க

தனியாா் பள்ளிக் காவலா் கொலை

வாணியம்பாடி: வாணியம்பாடியில் தனியாா் பள்ளிக் காவலா் பட்டப்பகலில் குத்திக் காலை செய்யப்பட்டாா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி ஷாகிராபாத் பகுதியை சோ்ந்த முகமது இா்பான்(40). இவா், இக்பால் சாலையில்... மேலும் பார்க்க