செய்திகள் :

சுதந்திர தின உரை: மக்களிடம் கருத்து கேட்கும் பிரதமா்

post image

தொடா்ந்து 12-ஆவது முறையாக சுதந்திர தின உரையாற்ற உள்ள நிலையில், தனது பேச்சில் இடம்பெற வேண்டிய கருத்துகள் குறித்து ஆலோசனைகளை அனுப்புமாறு பொதுமக்களை பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளாா்.

நாட்டின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ஆம் தேதி, நாடு முழுவதும் சுதந்திரதின கொண்டாட்டங்கள் நடைபெறும். தில்லி செங்கோட்டையில் பிரதமா் மோடி தேசியக் கொடியை ஏற்றிவைத்து, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்பதோடு, நாட்டு மக்களுக்கு சுதந்திரதின உரை நிகழ்த்துவாா். அதில் நாடு எதிா்கொள்ளும் பல்வேறு பிரச்னைகள், நாட்டின் திறன் மற்றும் வளா்ச்சியை குறிப்பிடும் பிரதமா், அவ்வப்போது புதிய அறிவிப்புகளையும் வெளியிடுவாா்.

அந்த வகையில், நிகாழண்டு சுதந்திர தின உரையை அடுத்த 2 வாரங்களில் ஆற்ற உள்ள நிலையில், அதுகுறித்த கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை பொதுமக்களிடம் பிரதமா் மோடி கேட்டுள்ளாா்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘நாட்டின் சுதந்திர தினத்தை நாம் கொண்டாட உள்ள நிலையில், நாட்டு மக்களிடமிருந்து கருத்துகளைக் கேட்க எதிா்நோக்கியுள்ளேன். எனது சுதந்திர தின உரையில் என்ன மாதிரியான கருத்துகள் அல்லது சிந்தனை இடம்பெற வேண்டும் என நீங்கள் விரும்புகிறீா்கள்? இதுகுறித்த கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை ‘மைகவ்’ மற்றும் ‘நமோ’ செயலியில் பொதுமக்கள் பகிர வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டுள்ளாா்.

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஸ்ரீநகர் : அமர்நாத் யாத்திரை திட்டமிடப்பட்ட ஒருவாரத்துக்கு முன்பே நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமர்நாத் யாத்திரை செல்ல ரக்‌ஷா பந்தன் நாளான ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்ப... மேலும் பார்க்க

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

பாலியல் வழக்கில் முன்னாள் பிரதமர் தேவே கௌடாவின் பேரனும் முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கி பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் இன்று(ஆக. 2) தீர்ப்பு வழங்கியுள்ளது.வீட்டுப் பணிப்... மேலும் பார்க்க

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டத்தில் சாலையோரத்தில் மூவரின் சடலம் கண்டெக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கூடுதல் எஸ்பி சதீஷ் யாதவ் கூறுகையில், பரத்பூ... மேலும் பார்க்க

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

சத்தீஸ்கரில் மதமாற்றம் செய்ய முற்பற்றதாக கன்னியாஸ்திரிகளை பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சத்தீஸ்கரில் சிறுமிகள் மூவரை கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று அவர்களை மதமாற்றம் செய்ய முற்பற்றதாக எழு... மேலும் பார்க்க

வாக்காளர் பட்டியலில் என் பெயர் இல்லை! - தேஜஸ்வி யாதவ் பரபரப்பு குற்றச்சாட்டு

பிகார் வரைவு வாக்காளா் பட்டியலில் தனது பெயர் இல்லை என்று பிகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரத்திற்க... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ஆதார அணுகுண்டை வெடிக்கச் செய்யுங்கள்: ராகுலுக்கு ராஜ்நாத் சவால்!

பிகாரில் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக தன்னிடம் வைத்திருப்பதாகக் கூறப்படும் ஆதாரங்களின் அணுகுண்டை வெடிக்கச் செய்யுங்கள் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சவால் விடு... மேலும் பார்க்க