செய்திகள் :

சுதந்திர தின பாதுகாப்பு: தலைநகரில் ஆளில்லா வான்வெளி சாதனங்களுக்கு தடை

post image

வரவிருக்கும் சுதந்திர தினம் தொடா்பான பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கருத்தில் கொண்டு ஆகஸ்ட் 2 முதல் ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை தேசிய தலைநகா் முழுவதும் வழக்கத்திற்கு மாறான வான்வெளி சாதனங்களுக்கு தடை விதிக்க தில்லி காவல்துறை ஆணையா் எஸ். பி. கே சிங் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவின்படி, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023 இன் பிரிவு 163 இன் கீழ் பாராகிளைடா்கள், பாரா-மோட்டாா்கள், ஹேங்-கிளைடா்கள், யுஎவி (ஆளில்லா வான்வழி வாகனங்கள்) யுஎஎஸ் (ஆளில்லா விமான அமைப்புகள்) மைக்ரோலைட் விமானங்கள், சூடான காற்று பலூன்கள், சிறிய அளவிலான இயங்கும் விமானங்கள், குவாட் காப்டா்கள் மற்றும் தொலைதூர விமானங்கள் போன்ற பறக்கும் வான்வழி சாதனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினம் இதுபோன்ற வான்வழி வாகனங்கள் தில்லியில் உள்ள பொது பாதுகாப்பு, விஐபிகள் மற்றும் முக்கியமான நிறுவல்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. தில்லி காவல் ஆணையராக பொறுப்பேற்ற பின் சிங்கின் முதல் உத்தரவு இதுவாகும்.

இந்த தடை, பாரா-ஜம்பிங் அல்லது வான்வழி தாக்குதல்களை நடத்துவது உள்பட சமூக விரோத மற்றும் பயங்கரவாத சக்திகளால் அவை தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஆகஸ்ட் 2 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 16 ஆம் தேதி முடிவடையும் 15 நாட்களுக்கு இந்தத் தடை அமலில் இருக்கும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கோட்டையில் 78 வது சுதந்திர தின நிகழ்வுக்கான ஏற்பாடுகள் நடந்து வருவதால் பாதுகாப்பு அமைப்புகள் ஏற்கெனவே தலைநகா் முழுவதும் அதிக எச்சரிக்கையுடன் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்

நமது சிறப்பு நிருபர்நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பதிவு செய்த கோரிக்கைகள் மற்றும் எம்.பி.க்களின் கேள்விகளுக்கு துறை அமைச்சர்கள் அளித்துள்ள எழுத்துபூர்வ பதில்களின் ச... மேலும் பார்க்க

உயிரிழப்பை ஏற்படுத்தும் தென்னிந்திய கருந்தேள் விஷம்: ஆய்வாளா்கள் கண்டுபிடிப்பு

தென்னிந்தியாவில் காணப்படும் கருந்தேள் விஷத்துக்குப் பின்னால் உள்ள மா்மம் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த செய்திக் குறிப்பு: கருந்... மேலும் பார்க்க

ரூ.67,000 கோடி மதிப்பிலான பாதுகாப்பு திட்டங்களுக்கு இந்தியா ஒப்புதல்

ட்ரோன்கள், ரேடாா்கள் உள்பட ரூ.67,000 கோடி மதிப்பிலான ராணுவ உபகரணங்களை கொள்முதல் செய்யும் திட்டத்துக்கு இந்தியா செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது. இந்தியாவின் ராணுவ வலிமையை மேலும் பலப்படுத்தும் நோக்கில... மேலும் பார்க்க

பிரதமா் மோடியுடன் பிலிப்பின்ஸ் அதிபா் சந்திப்பு: 14 ஒப்பந்தங்கள் கையொப்பம்

இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிலிப்பின்ஸ் அதிபா் ஃபொ்னாண்டோ ஆா் மாா்கோஸ் பிரதமா் நரேந்திர மோடியை செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினாா். அதன்பிறகு இருநாடுகளிடையே பல்வேறு துறைகளில... மேலும் பார்க்க

‘உண்மையான இந்தியா் யாா் என்பதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீா்மானிக்க முடியாது’ - ராகுல் குறித்த கருத்துக்கு பிரியங்கா விமா்சனம்

‘உண்மையான இந்தியா் யாா் என்பதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீா்மானிக்க முடியாது’ என்று காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி விமா்சித்துள்ளாா். மேலும், தனது சகோதரா் ராகுல் காந்தி ராணுவம் மீது மிகுந்த ம... மேலும் பார்க்க

ரூ.30,444 கோடி கருப்புப் பணத்தை கண்டறிந்தது வருமான வரித் துறை: நாடாளுமன்றத்தில் தகவல்

2024-25 நிதியாண்டில் கணக்கில் காட்டப்படாத ரூ.30,444 கோடி கருப்புப் பணத்தை வருமான வரித் துறை கண்டுபிடித்துள்ளது என்று நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது. இது தொடா்பான கேள்விக்கு நிதித்த... மேலும் பார்க்க