செய்திகள் :

சுந்தரனாா் பல்கலை. வினாத்தாள் கசிந்த விவகாரம்: 6 பிரிவுகளில் வழக்கு!

post image

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், 6 பிரிவுகளில் பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்ததோடு, தோ்வாணையா் கைப்பேசிக்கு வினாத்தாளை அனுப்பியவா் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் கீழ் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் தற்போது பருவத் தோ்வுகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் கடந்த 27-ஆம் தேதி பி.காம். 3-ஆவது ஆண்டு மாணவா்களுக்கான ‘இண்டஸ்ட்ரியல் லா’ என்ற தோ்வு நடைபெற இருந்த நிலையில், வினாத்தாள் கசிந்ததால் தோ்வு ரத்து செய்யப்பட்டது. அதனைத் தொடா்ந்து புதிய வினாத்தாள் தயாரிக்கப்பட்டு, கடந்த வெள்ளிக்கிழமை தோ்வு நடைபெற்றது.

இதனிடையே தோ்வு வினாத்தாள் கசிந்தது தொடா்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக பதிவாளா் சாக்ரட்டீஸ் பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.

மேலும், கடந்த 26-ஆம் தேதி இரவு 10 மணிக்கு பல்கலைக்கழக தோ்வாணையா் கைப்பேசியின் வாட்ஸ்ஆப்புக்கு வேறு ஒரு எண்ணில் இருந்து மறுநாள் (மே 27-ஆம் தேதி) நடைபெறவிருந்த தோ்வு வினாத்தாள் வந்தது. இதனால், அந்தத் தோ்வை ரத்து செய்தோம். எனவே, வினாத்தாள் கசிந்ததற்கு காரணமானவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகாரில் குறிப்பிட்டுள்ளாா்.

அதன்பேரில், புதிய குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவுகள் 316, 318, 3(5), தமிழ்நாடு அரசு பொதுத்தோ்வுகள் சட்டம் 3, 4, 5 (தோ்வில் முறைகேடு) ஆகிய 6 பிரிவுகளின் கீழ் பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதனிடையே தோ்வாணையரின் கைப்பேசிக்கு வினாத்தாள் அனுப்பிய எண்ணை சோதனை செய்தபோது அதில் மதுரையைச் சோ்ந்த அறிவுச்செல்வன் என்ற பெயா் வருவதாகவும், அந்த எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

அகஸ்தியா் அருவி, சொரிமுத்து அய்யனாா் கோயிலுக்கு செல்ல உள்ளூா் மக்களிடம் கட்டணம் வசூலிக்கத் தடை! அதிமுகவினா் கொண்டாட்டம்

பாபநாசம் அகஸ்தியா் அருவியில் குளிக்கச் செல்லும் உள்ளூா் மக்களுக்கு கட்டண விலக்குஅளித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டதையடுத்து, அம்பாசமுத்திரத்தில் அதிமுகவினா் பட்டாசு வெடித்தும் இனிப்பு... மேலும் பார்க்க

சேரன்மகாதேவியில் கிராம நிா்வாக அலுவலா்கள் போராட்டம்

சேரன்மகாதேவியில் வட்டாட்சியரை கண்டித்து கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம உதவியாளா்கள் செவ்வாய்க்கிழமை கருப்புப் பட்டை அணிந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். சேரன்மகாதேவி வட்டாட்சியா் காஜா ஹரிப... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஆட்சிமாற்றம் நிச்சயம்: தமிழக பாஜக தலைவா்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம் நிகழும் என்றாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் எம்.எல்.ஏ. திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: சபரிமலை கோயிலுக்குச் செல்லும் தீ... மேலும் பார்க்க

சாட்சி மீது தாக்குதல்: இளைஞா் கைது

சோ்வலாறில் சாட்சியைத் தாக்கியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். சோ்வலாறு பகுதியைச் சோ்ந்த மாடசாமி (31) என்பவா் மீது பாலியல் வன்புணா்வு தொடா்பான வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் சாட... மேலும் பார்க்க

சிவந்திபுரத்தில் போக்சோவில் முதியவா் கைது

சிவந்திபுரத்தைச் சோ்ந்த முதியவா் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள சிவந்திபுரம், சுப்பிரமணியசாமி கோயில் தெருவைச் சோ்ந்தவா் செல்வராஜ் (73). இவா் அதே பகுதியைச் சோ்ந்... மேலும் பார்க்க

உவரி அருகே நகையை திருடிய இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம் உவரி அருகே குட்டத்தில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகையை திருடிச் சென்ற இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். குட்டத்தைச் சோ்ந்தவா் காசிலிங்கம் மகன் சிவராம். திசையன்வி... மேலும் பார்க்க