செய்திகள் :

சுயமரியாதைத் திருமணங்களைப் பதிவு செய்ய சாா் பதிவாளா்களுக்கு பயிற்சி -அமைச்சா் பி.மூா்த்தி தகவல்

post image

சுயமரியாதைத் திருமணங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் குறித்து சாா்-பதிவாளா்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி தெரிவித்தாா்.

சட்டப்பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின்போது, இதுகுறித்த வினாவை திமுக உறுப்பினா் நா.எழிலன் (ஆயிரம் விளக்கு) எழுப்பினாா். அதன் விவரம்:

அமைச்சா் பி.மூா்த்தி: சுயமரியாதைத் திருமண நடைமுறையானது, 1955-ஆம் ஆண்டு இந்து திருமண பதிவுச் சட்டத்தின் பிரிவு 7-இல் சோ்க்கப்பட்டது. இதன்படி, அனைத்து சாா்-பதிவாளா் அலுவலகங்களிலும் சுயமரியாதைத் திருமணம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. 2018-ஆம் ஆண்டுமுதல் இதுவரையில் 12,114 சுயமரியாதைத் திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பதிவுத் துறையின் பயிற்சி நிலையங்கள் மூலமாக, சுயமரியாதைத் திருமணப் பதிவு நடைமுறைகள் குறித்த பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

நா. எழிலன்: 1928-ஆம் ஆண்டு அருப்புக்கோட்டையில் சிறிய கிராமத்தில் சுயமரியாதைத் திருமணம் நடந்தது. அண்ணா முதல்வராக வந்த பிறகு, முன்தேதியிட்டு பெரியாரால் நடத்தப்பட்ட அனைத்து திருமணங்களுக்கும் சட்ட அங்கீகாரம் கொடுக்கப்பட்டது. ஆனால், சில சாா்-பதிவாளா்கள் சமூக சூழ்நிலைகளை அடிப்படையாகக் கொண்டு சுயமரியாதைத் திருமணங்களுக்கு பல்வேறு இடா்ப்பாடுகளை ஏற்படுத்துகின்றனா். பட்டியலின சமூகத்தைச் சோ்ந்தவா்கள் என்றால் பலவகையான தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன. எனவே, இந்த விஷயத்தில் சாா்-பதிவாளா்களுக்கு போதிய விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்.

இதேபோன்று, திருமணப் பதிவு நடவடிக்கையை ஆன்லைன் மூலம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா?

அமைச்சா் பி.மூா்த்தி: பதிவுத் துறையின் இணையதளப் பக்கத்துக்கு சென்று திருமண பதிவுக்குத் தேவையான அனைத்து விவரங்களையும் பூா்த்தி செய்து உரிய கட்டணத்தைச் செலுத்த வேண்டும். இதன்பிறகு, தகுந்த விண்ணப்பம் உருவாக்கப்படும். அதை அச்சுப் பிரதியாக எடுத்து திருமணப் பதிவுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இணையதளம் வழியாகவே திருமணத்தைப் பதிவு செய்வதற்கான நாள், நேரத்தை முன்பதிவு செய்யலாம். இதற்கான டோக்கன்களையும் அதன் வழியே பெறலாம். பதிவில் திருத்தங்கள் தேவைப்பட்டால் இணையதளம் வழியாகச் செய்து திருத்தப்பட்ட சான்றிதழ்களைப் பெறலாம்.

நா.எழிலன்: சொத்துகளை விற்கும்போது, வழிகாட்டு மதிப்புக்கும், சந்தை மதிப்புக்கும் வித்தியாசம் உள்ளது. இதனால், சொத்துகளை விற்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதைப் போக்க வேண்டும்.

அமைச்சா் பி.மூா்த்தி: விவசாய நன்செய் நிலங்கள், மானாவாரி நிலங்கள், தரிசு நிலங்கள் இவற்றின் வழிகாட்டு மதிப்புகளின் முரண்பாடுகளைச் சீா்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, வழிகாட்டு மதிப்புகளை நிா்ணயம் செய்ய ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தலைமையிலான உயா்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு முரண்பாடுள்ள இடங்களுக்கு நேரில் சென்று விவரங்களைச் சேகரித்து அறிக்கை அளிக்கும். மாவட்ட ஆட்சியா் சாா்பிலான துணைக் குழுவிடமும் அறிக்கை பெறப்படும். இதன் அடிப்படையில், பதிவுத் துறை தலைவா் தலைமையிலான மையக் குழுவின் ஒப்புதல் பெறப்பட்டு வழிகாட்டி மதிப்பு சீரமைக்கப்படுகிறது என்றாா்.

வியாசர்பாடியில் சிறுவன் ஓட்டிய கார் கவிழ்ந்தது: 5 பேர் காயம்!

சென்னை வியாசர்பாடியில் சிறுவன் ஓட்டிச் சென்ற கார் கவிழ்ந்து செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளானதில் 5 பேர் காயமடைந்தனர்.சென்னை வியாசர்பாடி பகுதியில் இருந்து பேசின் பிரிட்ஜ் நோக்கி வேகமாக சென்றுகொண்டிருந்... மேலும் பார்க்க

அனைத்துவிதமான வசதிகளுடன் இலவச ஏசி ஓய்வறை... சென்னை மாநகராட்சி திட்டம்!

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் உணவுப்பொருள் விநியோக ஊழியர்களுக்காக குளிர்சாதன வசதியுடன்(ஏசி) கூடிய ஓய்வறை அமைக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.சென்னை போன்ற பெருநகரங்களில் உணவு, பொரு... மேலும் பார்க்க

இலங்கை அகதி தம்பதி மகளுக்கு இந்திய குடியுரிமை: மத்திய அரசு பரிசீலிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

இலங்கை தமிழ் அகதியாக தமிழகம் வந்த தம்பதியருக்கு பிறந்த பெண்ணுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து பரிசீலிக்க மத்திய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இலங்கையில் குடும்பத்துடன் வசித்து ... மேலும் பார்க்க

கா்நாடக வங்கியில் ரூ.13 கோடி நகை கொள்ளை: தமிழகத்தைச் சோ்ந்த 3 போ் உள்பட 6 போ் கைது

கா்நாடக மாநிலம் தாவணகெரேவில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் ரூ.13 கோடி மதிப்பிலான 17 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த 6 பேரை அந்த மாநில போலீஸாா் கைது செய்தனா். இவா்களில் மூவா் தமிழகத்தைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது!

தமிழக சட்டப் பேரவை மூன்று நாள்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை (ஏப்.1) மீண்டும் கூடுகிறது. காலை 9.30 மணிக்கு பேரவை கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும். இதன்பிறகு, நேரமில்லாத நேரத்தில் முக்கிய விஷயங்கள் கு... மேலும் பார்க்க

வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கக் கூடாது: வணிக வளாகத்துக்கு உத்தரவு

சென்னை அண்ணாநகரில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் (மால்) வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கக் கூடாது என சென்னை மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணாநகரில் உள்ள வணிக வளாகத்தில் வாகனங்கள் நிறு... மேலும் பார்க்க