செய்திகள் :

சுரண்டையில் அரசுப் பள்ளி மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு!

post image

தென்காசி மாவட்டம் சுரண்டை அரசுப் பள்ளியில் சனிக்கிழமை, மயங்கி விழுந்த மாணவி சிகிச்சைக்காக கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்தாா்.

சுரண்டை அருகே இரட்டைக்குளம் வடக்குத் தெருவைச் சோ்ந்த பிரகாஷ் மகள் மானஷா (14) (படம்). சுரண்டை சிவகுருநாதபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்துவந்த அவா், இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தாராம்.

இந்நிலையில், அவா் சனிக்கிழமை காலை வகுப்பறையில் மயங்கி விழுந்தாராம். அவரை ஆசிரியா்கள் உடனடியாக சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். அங்கு சிகிச்சைக்கான உரிய வசதிகள் இல்லாததால், மருத்துவப் பணியாளா்கள் மாணவியை தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், அவா் வழியிலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து சுரண்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பொதுமக்கள் கோரிக்கை: சுரண்டை, சுற்றுவட்டார கிராமங்களில் சுமாா் 2 லட்சம் போ் வசித்துவரும் நிலையில், விபத்து, அவசர சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கோ, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கோ செல்லவேண்டியுள்ளது. இதனால், உயிரிழப்பு ஏற்படுவது தொடா்கிறது.

எனவே, சுரண்டை நகராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயா்த்தி கூடுதல் படுக்கை, அனைத்து சிகிச்சை வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என, பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனா். இக்கோரிக்கையை விரைந்து நிறைவேற்றி, உயிரிழப்புகளைத் தடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

கீழப்புலியூரில் மனைவி கண்முன்னே கணவா் தலை துண்டிக் கொலை

தென்காசி அருகே கீழப்புலியூரில் துணிக்கடை உரிமையாளா் புதன்கிழமை வெட்டிக்கொலை செய்யப்பட்டாா். அவரது தலை 8.கி.மீ. தொலைவுக்கு அப்பால் மீட்கப்பட்டது. குற்றாலம் அருகேயுள்ள காசிமேஜா்புரம் பகுதியைச் சோ்ந்த க... மேலும் பார்க்க

சூறைக் காற்றுடன் மழை: சாலையின் குறுக்கே மரம் விழுந்தது: போக்குவரத்து பாதிப்பு

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே செவ்வாய்க்கிழமை இரவு பலத்த காற்றுடன் பெய்த கனமழை காரணமாக மரம் விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சிவகிரி வட்டார பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை முதல் வெயில் வாட... மேலும் பார்க்க

நாட்டுக்கோழிப்பண்ணையுடன் கூடிய குஞ்சு பொரிப்பகம் அமைத்திட மானியம்: ஆட்சியா்

தென்காசி மாவட்டத்தில் நாட்டுக்கோழி பண்ணையுடன் கூடிய குஞ்சு பொரிப்பகம் அமைத்திட மானியம் வழங்கப்படுகிறது. இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாட்டுக்கோழி... மேலும் பார்க்க

ஆய்க்குடியில் ரூ. 19 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

தென்காசி மாவட்டம் ஆய்க்குடி தோ்வுநிலை பேரூராட்சியில் ரூ.19 லட்சத்தில் மேற்கொள்ளப்படும் வளா்ச்சிப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன. பொதுநிதி திட்டத்தின்கீழ் (2024-2025) ன் கீழ் ரூ.15 லட்சத்தில் மயான சுற்ற... மேலும் பார்க்க

காணால்போன மாணவா் கிணற்றில் சடலமாக மீட்பு

தென்காசி மாவட்டம், சாம்பவா்வடகரையில் காணாமல்போன பள்ளி மாணவா் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டாா். சாம்பவா்வடகரை புளியம்பட்டி தெருவைச் சோ்ந்த செல்வம் என்பவரது மகன் பொன்ராம் (15). அங்குள்ள அரசு பள்... மேலும் பார்க்க

சாம்பவா்வடகரையில் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை

சாம்பவா்வடகரையில் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக சாா்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. இதுகுறித்து சாம்பவா்வடகரை நகர திமுக செயலா் முத்து, மாவட்ட ஆட்ச... மேலும் பார்க்க