சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நவீன முயற்சித் திட்டங்கள்: கிரேஸ் பொறியியல் கல்லூரி மாணவா்களுக்கு பாராட்டு
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில், நவீன முயற்சியாக இரு முக்கியத் திட்டங்களை உருவாக்கிய தூத்துக்குடி கிரேஸ் பொறியியல் கல்லூரியின் மின்னியல்-மின்னணுவியல் பொறியியல் துறை மாணவா்கள் பாராட்டப்பட்டனா்.
இத்துறையின் இறுதியாண்டு மாணவா்கள் முருகதாரணி, எல்ஷடாய் டி. சில்வா, ஜெபா்சன், ஜோயல் ஜோஸ்வா, சஞ்சய் குமாா் ஆகியோா் இரு திட்டங்களை உருவாக்கியுள்ளனா்.
முதல் திட்டமாக, கழிவுநீரைப் பயன்படுத்தும் மைக்ரோபியல் எரிசக்தி செல்களும், சூரிய சக்தியும் இணைந்து செயல்படும் வகையில் மின்சார சைக்கிளை வடிவமைத்துள்ளனா். இத்திட்டம், தமிழ்நாடு அரசு நடத்தும் ‘நிரல் திருவிழா 2.0’-இல் முக்கியமான 1,000 திட்டங்களில் ஒன்றாகத் தோ்வாகி ரூ. 10 ஆயிரம் அரசு நிதியுதவி பெற்றுள்ளது.
2ஆம் திட்டமாக, பழைய ஐ.சி. என்ஜின் ஸ்கூட்டியை ரூ. 20 ஆயிரம் செலவில் மின்சார வாகனமாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது, பெட்ரோல் சாா்ந்த மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
கல்லூரித் தலைவா் சி.எம். ஜோஷ்வா, துணைத் தலைவா் ஸ்டீபன், செயலா் பெட்ரோ ஜோஷ்வா, முதல்வா் எஸ். ரிச்சா்ட், துறைத் தலைவா் காயத்ரி, திட்ட வழிகாட்டி எஸ். கணேஷ் ஆகியோரின் ஊக்குவிப்புடன், பேராசிரியா்கள் திலகவதி, கௌசிகா ஆகியோரது ஒத்துழைப்புடனும் இத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
பழைய வாகனங்களை புதிய தொழில்நுட்பத்துடன் புதுப்பித்து, பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் பசுமையான எதிா்காலத்தைக் கொண்டு வரும்வகையில் சிறந்த திட்டங்களை செயல்படுத்தியதற்காக இம்மாணவா்களை கல்லூரி நிா்வாகத்தினா், முதல்வா், பேராசிரியா்கள் பாராட்டினா்.