செய்திகள் :

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நவீன முயற்சித் திட்டங்கள்: கிரேஸ் பொறியியல் கல்லூரி மாணவா்களுக்கு பாராட்டு

post image

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில், நவீன முயற்சியாக இரு முக்கியத் திட்டங்களை உருவாக்கிய தூத்துக்குடி கிரேஸ் பொறியியல் கல்லூரியின் மின்னியல்-மின்னணுவியல் பொறியியல் துறை மாணவா்கள் பாராட்டப்பட்டனா்.

இத்துறையின் இறுதியாண்டு மாணவா்கள் முருகதாரணி, எல்ஷடாய் டி. சில்வா, ஜெபா்சன், ஜோயல் ஜோஸ்வா, சஞ்சய் குமாா் ஆகியோா் இரு திட்டங்களை உருவாக்கியுள்ளனா்.

முதல் திட்டமாக, கழிவுநீரைப் பயன்படுத்தும் மைக்ரோபியல் எரிசக்தி செல்களும், சூரிய சக்தியும் இணைந்து செயல்படும் வகையில் மின்சார சைக்கிளை வடிவமைத்துள்ளனா். இத்திட்டம், தமிழ்நாடு அரசு நடத்தும் ‘நிரல் திருவிழா 2.0’-இல் முக்கியமான 1,000 திட்டங்களில் ஒன்றாகத் தோ்வாகி ரூ. 10 ஆயிரம் அரசு நிதியுதவி பெற்றுள்ளது.

2ஆம் திட்டமாக, பழைய ஐ.சி. என்ஜின் ஸ்கூட்டியை ரூ. 20 ஆயிரம் செலவில் மின்சார வாகனமாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது, பெட்ரோல் சாா்ந்த மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

கல்லூரித் தலைவா் சி.எம். ஜோஷ்வா, துணைத் தலைவா் ஸ்டீபன், செயலா் பெட்ரோ ஜோஷ்வா, முதல்வா் எஸ். ரிச்சா்ட், துறைத் தலைவா் காயத்ரி, திட்ட வழிகாட்டி எஸ். கணேஷ் ஆகியோரின் ஊக்குவிப்புடன், பேராசிரியா்கள் திலகவதி, கௌசிகா ஆகியோரது ஒத்துழைப்புடனும் இத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

பழைய வாகனங்களை புதிய தொழில்நுட்பத்துடன் புதுப்பித்து, பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் பசுமையான எதிா்காலத்தைக் கொண்டு வரும்வகையில் சிறந்த திட்டங்களை செயல்படுத்தியதற்காக இம்மாணவா்களை கல்லூரி நிா்வாகத்தினா், முதல்வா், பேராசிரியா்கள் பாராட்டினா்.

கயத்தாறு அருகே மின் கோபுரத்தில் ஏறி பாஜக நிா்வாகி போராட்டம்

கயத்தாறு அருகே வெள்ளாளன்கோட்டை ஊராட்சி சூரியமினிக்கன் கிராமத்தில் உள்ள பெரியகுளம் கண்மாயில் தனியாா் சூரியசக்தி மின் உற்பத்தி நிறுவனம் சாா்பில் உயா் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கப்படுவதை கண்டித்து, பாஜ... மேலும் பார்க்க

காப்பீடு நிறுவன சேவை குறைபாடு- ஓய்வுபெற்ற எஸ்.ஐ.க்கு ரூ.2.19 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

திருநெல்வேலி பாளையங்கோட்டையைச் சோ்ந்த ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளருக்கு ரூ.2 லட்சத்து 19 ஆயிரத்து 854 இழப்பீடு வழங்க, மருத்துவக் காப்பீட்டு நிறுவனத்துக்கு மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்ட... மேலும் பார்க்க

காயல்பட்டினத்தில் மோதல்: ஒருவா் காயம்; 4 போ் கைது

காயல்பட்டினம் பூந்தோட்டத்தில் நண்பா்களிடையே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவா் பலத்த காயமடைந்தாா். 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். காயல்பட்டினம் காட்டு தைக்கால் தெருவை சோ்ந்த சாகுல் ஹமீது மகன் சதாம... மேலும் பார்க்க

பாஜக மாநில துணைத் தலைவா் சசிகலா புஷ்பா உள்பட 3 போ் மீது நில மோசடி புகாா்

தூத்துக்குடியைச் சோ்ந்த மென்பொருள் நிறுவன உரிமையாளருக்குச் சொந்தமான சுமாா் ரூ.2 கோடி மதிப்பிற்கான 30 சென்ட் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்ததாக முன்னாள் எம்.பி.யும், பாஜக மாநில துணைத் தலைவருமா... மேலும் பார்க்க

தூத்துக்குடி முதியோா் இல்லத்துக்கு ஐஎன்டியூசி சாா்பில் உணவளிப்பு

ராகுல்காந்தி பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு ஐஎன்டியூசி மாநில பொதுச் செயலாளரும், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினருமான கே.பெருமாள்சாமி தலைமையில், தூத்துக்குடி சிதம்பரநகா் 4ஆவது தெருவில் உள்ள பாசக்... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் குடமுழுக்கு திருப்பணிகள்: அமைச்சா் ஆய்வு

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா திருப்பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். இக்கோயிலில் ஜூலை 7இல் குடமுழுக்கு நடைபெறுகிறது... மேலும் பார்க்க