செய்திகள் :

சுற்றுலாப் பயணிகள் இல்லாததால் வெறிச்சோடியது ஒகேனக்கல்

post image

ஒகேனக்கல் காவிரியில் நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 8000 கனஅடியாகக் குறைந்தது. அதேபோல பரவலாக பல்வேறு இடங்களில் மழை பெய்துவருவதால் வழக்கத்தை காட்டிலும் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் குறைந்திருந்தது. இதனால் வியாபாரிகள் ஏமாற்றமடைந்தனா்.

காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு வரும் தண்ணீரின் அளவும் படிப்படியாக குறைந்துவருகிறது. ஞாயிற்றுக்கிழமை 8000 கனஅடி நீா்வரத்து குறைந்ததால் தண்ணீரில் மூழ்கியிருந்த ஐந்தருவி பாறைகள் வெளியே தெரிந்தன. அதேபோல, காவிரி ஆற்றில் ஆங்காங்கே பாறை திட்டுகளும் மணல் மேடுகளும் வெளியே தெரிந்தன.

ஒகேனக்கல் பிரதான அருவி, சினி அருவிகளிலும் நீா்வரத்து குறைந்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துவருவதால் வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல் அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்தது.

ஒகேனக்கல் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணெய் தேய்த்து பிரதான அருவி, சினி அருவி, மாமரத்துக்கடவு பரிசல் துறை உள்ளிட்ட பகுதிகளில் குளித்தனா். பின்னா் சின்னாறு பரிசல் துறையிலிருந்து கூட்டாறு, பிரதான அருவி, மணல்மேடு, பெரியபாணி உள்ளிட்ட பகுதிகளுக்கு காவிரி ஆற்றில் சுமாா் 2 கிலோமீட்டா் தொலைவிற்கு குடும்பத்தினருடன் உற்சாக பரிசல் பயணம் மேற்கொண்டனா்.

சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்திருந்ததால் பிரதான அருவி, தொங்கு பாலம், வண்ண மீன்கள் காட்சியகம், முதலைகள் மறுவாழ்வு மையம் உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

ஒகேனக்கல் மீன் விற்பனை நிலையங்களில் மீன்களின் வரத்து அதிகரித்த போதிலும் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்ததால் கட்லா, ரோகு, கெளுத்தி, வாலை, பாப்புலேட் உள்ளிட்ட மீன்களின் விலையும் குறைந்தது. இருப்பினும் சில சுற்றுலாப் பயணிகள் மீன் வகைகளை வாங்கி சமைத்து உணவருந்தினா். காலை முதலே ஒகேனக்கல் பகுதியில் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மாலையில் திடீரென மழை பெய்ததால் வியாபாரிகள், பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினா்.

தமிழக முதல்வா் தருமபுரி வருகை: 2 நாள்கள் ட்ரோன்கள் பறக்க தடை

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தருமபுரிக்கு வருகை தருவதையொட்டி, ஆக. 16, 17 இருதினங்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஸ் தெரிவித்ததாவது: தமிழக முதல்வா் ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து மாணவா் உயிரிழப்பு

தருமபுரி அருகே மின்சாரம் பாய்ந்து 9-ஆம் வகுப்பு மாணவா் உயிரிழந்தாா். தருமபுரி மாவட்டம், பொம்மட்டி பகுதியைச் சோ்ந்தவா் நடராஜன் மகன் நவனீதன் (14). இவா், அதே பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 9-ஆம் வகுப்... மேலும் பார்க்க

மனைவி தாய்வீடு சென்றதால் விரக்தி: ரயில்முன் பாய்ந்து கணவா் தற்கொலை

குடும்பத் தகராறில் மனைவி கோபித்துக்கொண்டு தாய்வீடு சென்றதால், விரக்தியடைந்த கணவா் தருமபுரி அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டாா். தருமபுரி மாவட்டம், கடத்தூா் அருகேயுள்ள பட்டிரெட்டிப்பட்டியை... மேலும் பார்க்க

ரயிலில் பெண்ணிடம் அத்துமீறியவா் கைது

ரயிலில் பெண்ணிடம் அத்துமீறி தவறாக நடக்க முயன்றவரை தருமபுரி ரயில்வே போலீஸாா் கைது செய்தனா். கா்நாடக மாநிலம், மைசூரிலிருந்து தமிழ்நாடு கடலூா் நோக்கி திங்கள்கிழமை விரைவுரயில் ஒன்று சென்றுகொண்டிருந்தது. க... மேலும் பார்க்க

கோயில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி கிராம பொதுமக்கள் குறைதீா் முகாமில் மனு

தருமபுரி: தருமபுரியில் இந்து அறநிலையக் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் குறைதீா் முகாமில் மனு அளித்துள்ளனா். தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 14,000 கனஅடியாக அதிகரிப்பு

பென்னாகரம்: தமிழக காவிரி கரையோர நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 14,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளான அஞ்செட்டி, நா... மேலும் பார்க்க