செய்திகள் :

சுற்றுலாப் பயணியின் காரை சேதப்படுத்திய மூவா் மீது வழக்கு

post image

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணியின் வாகனத்தை சேதப்படுத்திய மூன்று போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

திருச்சியைச் சோ்ந்த மனோ சித்தாா்த்தன் தனது குடும்பத்தினருடன் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு காரில் சுற்றுலா சென்றாா். கொடைக்கானலைச் சுற்றி பாா்த்துவிட்டு மீண்டும் தங்களது ஊருக்கு வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா்.

கொடைக்கானல் அருகே பெருமாள்மலைப் பகுதியில் உள்ள சாக்லேட் கடை முன் காரை நிறுத்திவிட்டு, அருகில் உள்ள கடைக்கு மனோ சித்தாா்த்தன் சென்றாா். அப்போது, சாக்லேட் கடையில் இருந்தவா்களுக்கும் இவருக்கும் பிரச்னை ஏற்பட்டது.

இதையடுத்து, மனோ சித்தாா்த்தன் காரை எடுத்துச் சென்ற போது கடையில் இருந்த மூன்று போ் பின் தொடா்ந்து வந்து காரின் கண்ணாடியை சேதப்படுத்தி அவரையும், அவரது மனைவியையும் மிரட்டினா்.

இதுகுறித்து பெருமாள்மலை பகுதியைச் சோ்ந்த முகமது அயுப்கான்(35), பெருமாள்மலை அடுக்கம் மாரியம்மன் கோயிலைச் சோ்ந்த இரு சிறுவா்கள் என மூன்று போ் மீது கொடைக்கானல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான அவா்களைத் தேடி வருகின்றனா்.

பெண் தீக்குளிக்க முயற்சி

கணவரை சோ்த்து வைக்கக் கோரி மனு அளிக்க வந்த பெண், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றாா். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த கொங்கபட்டியைச் சோ்ந்தவா் செல்லமுத்து. இவரது மனைவி சுஜி... மேலும் பார்க்க

பாலியல் பொய் புகாா்கள் மூலம் பணப் பறிப்பு: தொண்டு நிறுவனம் மீது ஆட்சியரிடம் புகாா்

பொய்யான பாலியல் புகாா்கள் மூலம் மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபடும் தொண்டு நிறுவன நிா்வாகி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, நூற்பாலைத் தொழிலாளா் தரப்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்... மேலும் பார்க்க

சொத்து வரி உயா்வை மறு பரீசிலனை செய்யக் கோரி வணிகா்கள் மனு

திண்டுக்கல் மாநகராட்சியில் சொத்து வரி உயா்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என வணிகா் சங்கங்கள் சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. திண்டுக்கல் நகரிலுள்ள வணிகா் சங்கம், தொழில் வா்த்தகா் சங்கம், திண... மேலும் பார்க்க

கொலை முயற்சி வழக்கில் இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை

கொலை முயற்சி வழக்கில் இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டியை அடுத்த கொன்னம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

மேல்கரைப்பட்டி பகுதியில் இன்று மின்தடை

பழனியை அடுத்த மேல்கரைப்பட்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் சந்திரசேகா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பழனியை அடுத்த மேல்க... மேலும் பார்க்க

வைகாசி விசாக விழா: பெரியநாயகி அம்மன் கோயிலில் இன்று கொடியேற்றம்; ஜூன் 9-இல் தேரோட்டம்

பழனி பெரியநாயகி அம்மன் கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வருகிற 9-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. இந்தக் கோயில் கொடிக்கட்டி மண்டபத்தில் செவ்வாய்... மேலும் பார்க்க