செய்திகள் :

சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள்: பிரதமா் உயா்நிலை ஆலோசனை

post image

நாட்டின் சுற்றுலாத் துறையில் மேற்கொள்ளப்பட்டுவரும் மேம்பாட்டுப் பணிகள் தொடா்பாக, தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் செவ்வாய்க்கிழமை உயா்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத், இணையமைச்சா் சுரேஷ் கோபி, சுற்றுலாத் துறை செயலா் வி.வித்யாவதி மற்றும் பிரதமா் அலுவலக உயரதிகாரிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில், சுற்றுலாத் துறை மேம்பாட்டுப் பணிகள் குறித்து பிரதமா் மறுஆய்வு மேற்கொண்டாா்.

ஒரு மணி நேரத்துக்கும் மேல் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டம் தொடா்பான சிறிய விடியோவை பிரதமா் அலுவலகம் யூ-டியூப் பக்கத்தில் பகிா்ந்துள்ளது.

மத்திய அமைச்சா் கஜேந்திர ஷெகாவத் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘சுற்றுலாத் துறை வளா்ச்சி தொடா்பாக பிரதமா் மோடி தலைமையிலான மறுஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றேன். பிரதமரின் தொலைநோக்குப் பாா்வை மிக்க தலைமை, உலகளாவிய சுற்றுலா மையமாக இந்தியாவை உருவாக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் வழிகாட்டும் சக்தியாக விளங்குகிறது’ என்று தெரிவித்துள்ளாா்.

சுற்றுலாத் துறையில் செயல்படுத்தப்படும் இரண்டு லட்சியத் திட்டங்களான ‘பிரசாத்’ (ஆன்மிகத் தலங்கள் மேம்பாடு), ஸ்வதேஷ் தா்ஷன் (சுற்றுலாத் தலங்கள் மேம்பாடு) ஆகியவை குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சத்தீஸ்கரில் 26 நக்சல்கள் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று(புதன்கிழமை) காலை நடைபெற்ற தாக்குதலில் 26 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் - பிஜப்பூர் எல்லையில் அபுஜ்மத் பகுதியில் இன்று காலை சத்தீஸ்கர்... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து கண்காணிப்பில் வந்திருக்கும் தொலைத்தொடர்பு!

மே 7ஆம் தேதி நடத்தப்பட்ட சிந்தூர் தாக்குதலைத் தொடர்ந்து இந்திய எல்லையோர மாநிலங்களிலிருந்து, பாகிஸ்தானில் உள்ளவர்களுடன் நடத்தப்பட்ட உரையாடல், மின்னஞ்சல், குறுந்தகவல்கள் அனைத்தும் கண்காணிப்பில் கொண்டுவந... மேலும் பார்க்க

மணிப்பூரில் அதிரடி நடவடிக்கை! 2 நாள்களில் 6 கிளர்ச்சியாளர்கள் கைது!

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 2 நாள்களில், 6 கிளர்ச்சியாளர்கள் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மணிப்பூரின் காக்சிங் மாவட்டத்தின் லாங்மெய்தாங், எலாங்காங்போக்பி மற்றும் காக்சிங் ... மேலும் பார்க்க

ராஜீவ் காந்தி நினைவு நாள்: ராகுல், கார்கே மரியாதை!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் மரியாதை செலுத்தினர்.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாளை முன்னிட்டு, புதுதில்ல... மேலும் பார்க்க

பிரபல கன்னட பெண் எழுத்தாளருக்கு புக்கர் பரிசு!

பிரபல கன்னட எழுத்தாளரான பானு முஷ்டாக் எழுதிய 'ஹசீன் அண்ட் அதர் ஸ்டோரிஸ்' என்ற புத்தகத்தின் மொழிப்பெயர்ப்பு பதிப்பான 'ஹார்ட் லேம்ப்' நிகழாண்டுக்கான புக்கர் பரிசை வென்றுள்ளது. இதனால், சர்வதேச புக்கர் பர... மேலும் பார்க்க

வேகமெடுக்கும் கரோனா தொற்று: மகாராஷ்டித்தில் இருவர் பலி!

மகாராஷ்டிரத்தில் கரோனா நோய்த் தொற்றுக்கு இருவர் பரிதாபமாக பலியாகினர். கடந்த 2020 ஆம் ஆண்டில் உலகையேப் புரட்டிப்போட்ட கரோனா பெருந்தொற்றால், லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். தொடர்ந்து 2 வருடங்கள் தொழிற்சா... மேலும் பார்க்க